“யாக்கோபும் நேபியும் இயேசுவைப் பார்த்தல்,” நண்பன்,மார்ச் 2024, 26–27.
மாதாந்திர நண்பன் செய்தி, மார்ச் 2024
யாக்கோபும் நேபியும் இயேசுவைப் பார்த்தல்
யாக்கோபு நேபியின் இளைய சகோதரன். அவர்களது குடும்பம் எருசலேமை விட்டு வெளியேறிய பின்பு அவன் பிறந்தான். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு யாக்கோபு ஒரு குழந்தையாக வந்தடைந்தான்.
யாக்கோபும் மற்றும் நேபி இருவரும் இயேசு கிறிஸ்துவைப் பார்த்தல். இயேசுவைப் பற்றி அறிந்துகொள்ள உதவுவதற்காக அவர்கள் தங்கள் சாட்சிகளை தங்கள் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டனர்.
அவர்கள் ஏசாயா தீர்க்கதரிசியின் வார்த்தைகளையும் பகிர்ந்து கொண்டனர். ஏசாயாவும் இயேசுவைப் பார்த்து, அவரைப் பற்றி வேதத்தில் எழுதியிருந்தான். யாக்கோபும் நேபியும் இயேசுவைப் பற்றி தங்கள் குடும்பங்களுக்குக் போதிக்க வேதத்திலிருந்து ஏசாயாவின் வார்த்தைகளைப் பயன்படுத்தினர்.
இயேசு பூமிக்கு வருவார் என்று போதித்தார்கள். அவர் மரித்து மீண்டும் வாழ்வார். அவர்களது குடும்பங்கள் அவருடைய வருகையை எதிர்நோக்கியிருக்குமாறு இயேசு கிறிஸ்துவின் சாட்சியை அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.
வண்ணமிடும் பக்கம்
இயேசு நமது இரட்சகர்.
பட விளக்கம் – ஆடம் கோபோர்ட்
இயேசுவின் அன்பை எப்போது உணருகிறீர்கள்?
© 2024 by Intellectual Reserve, Inc. All rights reserved. அ.ஐ.நாட்டில் அச்சிடப்பட்டது. ஆங்கில அங்கீகாரம்: 6/19. மொழிபெயர்ப்பு அங்கீகாரம்: 6/19. மாதாந்திர நண்பன் செய்தி, மார்ச் 2024. மொழிபெயர்ப்பு. Tamil. 19287 418