என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
ஏப்ரல் 15–21: “அவரது சித்தத்தின்படியே செய்ய, எனக்குள் அவர் கிரியை செய்கிறார்.” ஏனோஸ்–மார்மனின் வார்த்தைகள்


“ஏப்ரல் 15–21: ‘அவரது சித்தத்தின்படியே செய்ய, எனக்குள் அவர் கிரியை செய்கிறார்.’ ஏனோஸ்–மார்மனின் வார்த்தைகள்” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2024)

“ஏப்ரல் 15–21. ஏனோஸ்–மார்மனின் வார்த்தைகள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024 (2024)

படம்
ஏனோஸ் இளம் சிறுவனாகத், தன் தகப்பன், யாக்கோபு, மற்றும் தாயுடன்

Jacob and Enos (யாக்கோபும் ஏனோஸூம்) – ஸ்காட் ஸ்னோ

ஏப்ரல் 15–21: “அவரது சித்தத்தின்படியே செய்ய, எனக்குள் அவர் கிரியை செய்கிறார்.”

ஏனோஸ்–மார்மனின் வார்த்தைகள்

ஏனோஸ் உடல் பசியைப் போக்க விலங்குகளை வேட்டையாட காட்டிற்குச் சென்றாலும், அவன் “ஆத்துமப் பசியால்” நாள் முழுவதும் அங்கேயே இருந்தான். இந்தப் பசி ஏனோஸை “வானங்களை எட்டும்படியாக [அவனுடைய] சத்தத்தை உயர்த்த” வழிவகுத்தது. அவன் இந்த அனுபவத்தை தேவனுக்கு முன்பாக ஒரு “போராட்டம்” என்று விவரித்தான் (ஏனோஸ் 1:2–4). ஜெபம் என்பது தேவனிடம் நெருங்கி வருவதற்கும் அவருடைய சித்தத்தை அறிய முற்படுவதற்குமான ஒரு நேர்மையான முயற்சி என்பதை ஏனோஸிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். இந்த நோக்கத்துடன் நீங்கள் ஜெபிக்கும்போது, ஏனோஸ் செய்தது போல், தேவன் உங்களுக்குச் செவிசாய்க்கிறார் என்பதையும், உங்கள் மீதும், உங்கள் அன்புக்குரியவர்கள் மீதும், உங்கள் எதிரிகள் மீதும் உண்மையாகவே அக்கறை காட்டுகிறார் என்பதையும் நீங்கள் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். (ஏனோஸ் 1:4–17 பார்க்கவும்). அவருடைய சித்தத்தை நீங்கள் அறிந்தால், அவருடைய சித்தத்தை நீங்கள் சிறப்பாகச் செய்ய முடியும். மார்மனைப்போல, நீங்கள் “அனைத்துக் காரியங்களையும் அறியாமல் இருக்கலாம்; ஆனால் கர்த்தர் அனைத்துக் காரியங்களையும் அறிந்திருக்கிறார் … ; [மேலும்] அவர் அவரது சித்தத்தின்படி செய்ய [உங்களுக்குள்] கிரியை செய்கிறார்” (மார்மனின் வார்த்தைகள் 1:7).

வீட்டிலும் சபையிலும் கற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகள்

ஏனோஸ் 1:1–17

தேவன் என்னுடைய ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்கிறார்.

ஜெபத்தில் உங்கள் அனுபவங்கள் ஏனோஸை விட குறைவான வியத்தகு அனுபவமாக இருக்கலாம், ஆனால் அவை குறைவான அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டியதில்லை. நீங்கள் ஏனோஸ் 1:1–17ஐப் படிக்கும்போது சிந்திக்க வேண்டிய சில கேள்விகள்:

  • ஏனோஸ் ஜெபித்தபோது அவனுடைய முயற்சிகளை என்ன வார்த்தைகள் விவரிக்கின்றன?

  • வசனங்கள் 4லிருந்து 11வரை ஏனோஸின் ஜெபங்கள் எப்படி மாறியது?

  • என் ஜெபங்களை மேம்படுத்த உதவும் எதை ஏனோஸிடமிருந்து நான் கற்றுக்கொள்கிறேன்?

கலந்துரையாடல் கேள்விகளைப் பகிர்தல். நீங்கள் மற்றவர்களுக்குக் கற்பிக்கிறீர்கள் என்றால், நீங்கள் கலந்துரையாட விரும்பும் கேள்விகளை ஒரு முக்கிய இடத்தில் அனைவரும் பார்க்குமாறு வைப்பதைக் கருத்தில் கொள்ளவும். இது மக்கள் கேள்விகளை சிந்திக்கவும் மேலும் ஊக்கமளிக்கும் பதில்களை வழங்கவும் உதவுகிறது.

படம்
வேத பாட வகுப்பு சின்னம்

ஏனோஸ் 1:1–4

என் குடும்பத்தில் நல்ல முறையில் செல்வாக்கு ஏற்படுத்த கர்த்தர் எனக்கு உதவுவார்.

ஒருவேளை உங்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் கிறிஸ்துவிடம் வர நீங்கள் உதவ விரும்புகிறீர்கள், ஆனால் உங்கள் முயற்சிகள் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துகிறதா என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். யாக்கோபு தன் மகன் ஏனோஸ் மீது செலுத்திய செல்வாக்கைப் பற்றி ஏனோஸ் 1:1–4 இலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? உதாரணமாக, “கர்த்தரின் போஷிப்பும் அறிவுரையும்” என்ற சொற்றொடர் உங்களுக்கு என்ன அர்த்தம் ஆகிறது? அவரது செல்வாக்கை உங்கள் வீடுகளுக்குள் நீங்கள் எப்படி வரவழைக்கலாம்?

உங்கள் சொந்த குடும்பத்தைப் பற்றி நீங்கள் சிந்திக்கும்போது, பின்வரும் கேள்விகளையும் ஆதாரங்களையும் கருத்தில் கொள்ளுங்கள்:

ஏனோஸ் 1:1–18

நான் கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது மன்னிப்பைப் பெற முடியும்.

சில சமயங்களில் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டதா என்று நீங்கள் நினைக்கலாம், அந்த பாவங்களிலிருந்து நீங்கள் மனந்திரும்பிய பிறகும். எனோஸ் 1:1–8 இல் உள்ள ஏனோஸின் அனுபவத்திலிருந்து நீங்கள் என்ன உள்ளுணர்வுகளைப் பெறுகிறீர்கள்? பாவமன்னிப்பு பெறுவதற்கு முன்னும் பின்னும் ஏனோஸ் எப்படி இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் காட்டினான்?

யாரோம்–ஓம்னி

நான் கட்டளைகளைக் கைக்கொள்ள முயலும்போது, தேவன் என்னை ஆசீர்வதிப்பார்.

யாரோம் மற்றும் ஓம்னி ஆகிய இரண்டு புத்தகங்களும் நீதிக்கும் செழுமைக்கும் இடையிலான உறவை விவரிக்கின்றன. யாரோம் 1:7–12; ஓம்னி 1:5–7, 12–18 யிலிருந்து நீங்கள் என்ன கற்கிறீர்கள்? செழுமைக்கான உலக வரையறைகள் கர்த்தரின் வரையறையிலிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? கர்த்தர் தம் மக்கள் செழிக்க எப்படி உதவுகிறார்? (ஆல்மா 37:13; 48:15–16 பார்க்கவும்).

ஓம்னி 1:25–26

“இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கிறிஸ்துவினிடத்தில் வாருங்கள்.”

“கிறிஸ்துவிடம் வாருங்கள்” என்ற அழைப்பு மார்மன் புஸ்தகத்தில் அடிக்கடி தோன்றுகிறது. உண்மையில், இந்த அழைப்பை அனைவருக்கும் வழங்குவதே புஸ்தகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். ஓம்னி 1:25–26ஐ நீங்கள் வாசிக்கும்போது, கிறிஸ்துவிடம் எப்படி வர வேண்டும் என்பதை விவரிக்கும் வார்த்தைகள் அல்லது சொற்றொடர்கள் யாவை? இன்னும் முழுமையாக அவரிடம் வர நீங்கள் என்ன செய்வீர்கள்?

படம்
மார்மன் தங்கத் தகடுகளைத் தொகுக்கிறான்

Mormon Compiling the Plates (மார்மன் தகடுகளைத் தொகுத்தல்) – ஜார்ஜ் காக்கோ

மார்மனின் வார்த்தைகள் 1:1–8

நான் அவருடைய வழிகாட்டுதலைப் பின்பற்றும்போது தேவன் என் மூலம் செயல்படுவார்.

மார்மன் புஸ்தகத்தில் நேபியின் சிறிய தகடுகளைச் சேர்க்க கர்த்தர் மார்மனைத் தூண்டியதற்கு ஒரு காரணம், முதல் 116 மொழிபெயர்க்கப்பட்ட பக்கங்கள் இழக்கப்படும் என்று தேவன் அறிந்திருந்தார். ( கோட்பாடும் உடன்படிக்கைகளும் 10 பார்க்கவும்; ). இந்த எழுத்துக்களை (ஓம்னி முதல்1 நேபி வரை உள்ளடக்கியது) சேர்க்க வேண்டும் என்ற கர்த்தரின் அறிவுறுத்தலை மார்மன் பின்பற்றியதற்கு நீங்கள் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்? அவைகளைச் சேர்ப்பதற்கு மார்மன் என்ன காரணங்களைக் கூறினான்? (மார்மனின் வார்த்தைகள் 1:3–7 பார்க்கவும்). தேவன் தன் வேலையை நீங்கள் அல்லது மற்றவர்கள் மூலம் செய்வதை எப்போது பார்த்தீர்கள்?

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

ஏனோஸ் 1:1–5

நான் ஜெபத்தின் மூலம் பரலோக பிதாவிடம் பேச முடியும்.

  • உங்கள் பிள்ளைகளின் ஜெபங்களை அதிக அர்த்தமுள்ளதாக்க நீங்கள் எவ்வாறு உதவலாம்? ஏனோஸ் ஜெபம் செய்யும் ஒரு படத்தை அவர்களுக்குக் காண்பிப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்; அவர்கள் பார்ப்பதை விவரிக்கட்டும். அவர்கள் கண்களை மூடிக்கொண்டு, பரலோக பிதாவிடம் நேருக்கு நேர் பேசுவதை கற்பனை செய்துகொள்ள முடியும். அவர்கள் எதைப் பற்றி பேச விரும்புகிறார்கள்? அவர் அவர்களிடம் என்ன சொல்ல விரும்புவார்?

  • ஏனோஸ் 1:1–5 ஐ நீங்கள் சத்தமாக வாசிக்கும்போது, சிறுகுழந்தைகள் வேட்டையாடுதல், முழங்கால்படியிட்டு ஜெபித்தல் போன்றவற்றின் மூலம் ஏனோஸ் போல் நடிக்கலாம். ஏனோஸின் ஜெபங்களை விவரிக்கும் ஒரு வார்த்தை அல்லது சொற்றொடரை பெரிய குழந்தைகள் கேட்கலாம். ஏனோஸின் ஜெபங்களைப் பற்றி இந்த வார்த்தைகள் நமக்கு என்ன சொல்கின்றன? உங்கள் ஆத்துமா “பசித்தபோது” நீங்கள் கர்த்தரை நோக்கி “கூக்குரலிட்ட” (ஏனோஸ் 1:4) ஒரு அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

படம்
குடும்பம் ஜெபித்தல்

தேவனுடைய பிள்ளைகளாக நாம் நம்முடைய பரலோக பிதாவிடம் ஜெபிக்கலாம்.

ஏனோஸ் 1:2–16

பரலோக பிதா என் ஜெபங்களைக் கேட்டு பதிலளிக்கிறார்.

  • பரலோக பிதா அவர்களுடைய ஜெபங்களைக் கேட்டுப் பதிலளிப்பார் என்பதை உங்கள் பிள்ளைகள் எப்படிப் புரிந்துகொள்ள உதவலாம்? அவர்கள் குறிப்பாக ஜெபம் செய்யும் சில விஷயங்களைப் பட்டியலிட அவர்களை அழைப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். ஏனோஸ் 1:2, 9, 13–14, மற்றும் 16ல் ஏனோஸ் என்ன ஜெபித்தான் என்பதைக் கண்டறிய நீங்கள் அவர்களுக்கு உதவலாம்.

    ஏனோஸின் ஜெபத்தின் விளைவுகள் யாவை? (வசனங்கள்6, 9, 11 பார்க்கவும்).

    உங்கள் ஜெபங்களை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி ஏனோஸின் அனுபவத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

  • ஒருவேளை உங்கள் பிள்ளைகள் ஒவ்வொரு முறையும் “ஜெபி” அல்லது “ஜெபம்” அல்லது வேறு திரும்பத் திரும்பச் சொல்லும் வார்த்தையைக் கேட்கும்போதெல்லாம் கைகளை உயர்த்தலாம். பரலோக பிதா உங்கள் ஜெபங்களுக்குப் பதிலளித்த சில வழிகளைப் பற்றி உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லுங்கள்.

மார்மனின் வார்த்தைகள் 1:3–8

நான் பரிசுத்த ஆவியைக் கேட்கும்போது மற்றவர்களை ஆசீர்வதிக்க முடியும்.

  • மார்மன் புஸ்தகத்தில் நேபியின் சிறிய தகடுகளைச் சேர்க்க மார்மன் பரிசுத்த ஆவியின் வழிகாட்டுதலைப் பின்பற்றினான். இந்த ஆண்டு இதுவரை நாம் மார்மன் புஸ்தகத்தில் படித்த அனைத்தும், ஆவியானவருக்கு செவிசாய்க்க மார்மன் தேர்வு செய்ததால் நம்மிடம் வந்துள்ளது. ஆவியானவருக்கு செவிசாய்ப்பதைப் பற்றி கற்க உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எவ்வாறு உதவலாம்? மார்மன் வார்த்தைகள் 1:3–8லிருந்து வசனங்களை மாறி மாறி வாசிக்க அவர்களை அழைக்கவும். ஒவ்வொரு வசனத்திலிருந்தும் அவர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்பதைப் பற்றி நீங்கள் பேசலாம். அப்போது உங்கள் பிள்ளைகள்:

    • இந்த ஆண்டு மார்மன் புஸ்தகத்தில் உள்ள கதைகளில் இருந்து அவர்கள் கற்றுக்கொண்டவற்றைப் பகிரலாம் (என்னைப் பின்பற்றி வாருங்கள்,லிருந்து படங்கள் அவர்கள் நினைவில் கொள்ள உதவலாம்).

    • வேறொருவரை ஆசீர்வதிக்கும் ஒன்றைச் செய்ய அவர்கள் ஆவியால் வழிநடத்தப்பட்ட அனுபவங்களைப் பற்றி பேசுங்கள்.

படம்
ஏனோஸ் ஜெபித்தல்

Enos Praying (ஏனோஸ் ஜெபித்தல்) - ராப்ர்ட் டி. பாரெட்

அச்சிடவும்