கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021
மனமாற்றம் நமது இலக்கு


“மனமாற்றம் நமது இலக்கு,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: கோட்பாடும் உடன்படிக்கைகளும் 2021 (2020)

“மனமாற்றம் நமது இலக்கு,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2021

படம்
ஒரு பெண், வேதங்களைப் படித்தல்

மனமாற்றம் நமது இலக்கு

சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதல் மற்றும் போதித்தல் அனைத்தின் நோக்கமும் இயேசு கிறிஸ்துவில் நமது மனமாற்றத்தை ஆழமாக்கி அதிகமாக அவரைப்போலாக நமக்குதவுகிறது. இந்தக் காரணத்தினால்தான், சுவிசேஷத்தை நாம் படிக்கும்போது, புதிய தகவலுக்காக மட்டுமே தேடுவதில்லை; நாம் ஒரு “புதிய சிருஷ்டியாக” மாற விரும்புகிறோம் (2 கொரிந்தியர் 5:17). நமது இருதயங்களை, நமது பார்வைகளை, நமது செயல்களை மற்றும் நமது இயல்புகளையும் மாற்ற நமக்குதவ பரலோக பிதாவையும் இயேசு கிறிஸ்துவையும் சார்ந்திருத்தல். என்பது இதன் பொருள்.

ஆனால் நமது விசுவாசத்தைப் பலப்படுத்தி மனமாற்றம் என்னும் அற்புதத்துக்கு வழிநடத்தும் வகையான சுவிசேஷத்தைக் கற்றுக்கொள்ளுதல் உடனடியாக நடந்துவிடுவதில்லை. அது ஒரு வகுப்பறையைத் தாண்டி ஒரு தனிநபரின் இருதயம் மற்றும் வீட்டுக்குள்ளும் நீள்கிறது. சுவிசேஷத்தைப் புரிந்துகொள்ளவும் அதன்படி வாழவும் தொடர்ந்த அன்றாட முயற்சிகள் தேவைப்படுகிறது. ஆனால் அதைத் தனியாகச் செய்ய பரலோக பிதா நம்மிடம் எதிர்பார்க்கவில்லை, மனமாறியவர்களாக மாற நமக்குதவ பரிசுத்த ஆவியை அவர் அனுப்புவார்.

பரிசுத்த ஆவியானவர் சத்தியத்துக்கு நம்மை வழிநடத்தி அந்த சத்தியத்தைப்பற்றி சாட்சி பகர்கிறார் (யோவான் 16:13 பார்க்கவும்). அவர் நமது மனங்களுக்கு அறிவூட்டி, நம் புரிதலை துரிதப்படுத்தி, எல்லா சத்தியத்துக்கும் ஆதாரமான தேவனிடமிருந்து வரும் வெளிப்படுத்தலினால் நம் இதயங்களைத் தொடுகிறார். பரிசுத்த ஆவியானவர் நமது இருதயங்களை தூய்மையாக்குகிறார். சத்தியத்தின்படி வாழ நம்மில் வாஞ்சையை உணர்த்தி, இதைச் செய்ய வழிகளை மென்மையான குரலில் அவர் நம்மிடம் பேசுகிறார். உண்மையாகவே, “பரிசுத்த ஆவியானவர் … எல்லாவற்றையும் [நமக்குப்] போதிப்பார்” (யோவான் 14:26).

இக்காரணங்களுக்காகவே, சுவிசேஷத்தின்படி வாழவும், கற்றுக்கொள்ளவும், போதிக்கவும் நமது முயற்சிகளில் நாம் முதலாகவும் முதன்மையாகவும் பரிசுத்த ஆவியின் தோழமையை நாட வேண்டும். இந்த இலக்கே நமது தேர்ந்தெடுப்புகளை ஆளுகை செய்து, நமது சிந்தனைகளையும், செயல்களையும் வழிநடத்த வேண்டும். பரிசுத்த ஆவியின் செல்வாக்கை வரவேற்கிற எதையும் நாம் நாட வேண்டும், அந்த செல்வாக்கை துரத்துகிற எதையும் மறுக்க வேண்டும், ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் பிரசன்னமாயிருக்க நாம் தகுதியாயிருக்க முடியுமானால், பரலோக பிதா மற்றும் அவரது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சமூகத்தில் வாழவும் நாம் தகுதி பெற முடியும் என நாம் அறிகிறோம்.

அச்சிடவும்