பழைய ஏற்பாடு 2022
மனதில் கொள்ள வேண்டிய எண்ணங்கள்: “இயேசு எல்லா இஸ்ரவேலருக்கும் சொல்வார், ‘வீட்டிற்கு வாருங்கள் ’”


மனதில் கொள்ள வேண்டிய எண்ணங்கள்: “இயேசு எல்லா இஸ்ரவேலருக்கும், சொல்வார், ‘வீட்டிற்கு வாருங்கள்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

மனதில் கொள்ள வேண்டிய எண்ணங்கள்: “இயேசு எல்லா இஸ்ரவேலருக்கும் சொல்வார், ‘வீட்டிற்கு வாருங்கள்’”என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022

படம்
எண்ணங்கள் சின்னம்

மனதில் கொள்ள வேண்டிய எண்ணங்கள்

“இயேசு எல்லா இஸ்ரவேலருக்கும் சொல்வார், ‘வீட்டிற்கு வாருங்கள்’”

சீனாய் பாலைவனத்தில் மோசே இஸ்ரவேல் புத்திரரை ஒரு மலையின் அடிவாரத்தில் கூட்டிச் சென்றான். சமீபத்தில் விடுவிக்கப்பட்ட அடிமைகளின் இந்த குழுவை வலிமைமிக்க ஜனமாக மாற்ற விரும்புவதாக தேவன் அறிவித்தார். அவர் சொன்னார், “நீங்கள் எனக்கு, ஆசாரிய ராஜ்யமும், பரிசுத்த ஜாதியுமாய் இருப்பீர்கள்” (யாத்திராகமம் 19:6). மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த எதிரிகளால் சூழப்பட்டிருந்தாலும் அவர்கள் செழித்து வளருவார்கள் என்று அவர் வாக்களித்தார் ( உபாகமம் 28: 1–14 பார்க்கவும்).

இஸ்ரவேலர்கள் ஏராளமானவர்கள் அல்லது வலிமையானவர்கள் அல்லது திறமையானவர்கள் என்பதால் இவை அனைத்தும் நடக்காது. அது நடக்கும், கர்த்தர் விளக்கினார், “நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையை கைக்கொள்வீர்களானால்” (யாத்திராகமம் 19:5). தேவனின் வல்லமை, அது அவர்களை வலிமையாக்கும், அவர்களுடையது அல்ல.

ஆயினும் இஸ்ரவேலர் அவருடைய குரலுக்கு எப்போதும் கீழ்ப்படியவில்லை, காலப்போக்கில் அவர்கள் அவருடைய உடன்படிக்கையை கடைப்பிடிப்பதை நிறுத்தினார்கள். பலர் மற்ற கடவுள்களை வணங்கவும், அவர்களைச் சுற்றியுள்ள கலாச்சாரங்களின் நடைமுறைகளைப் பின்பற்றவும் தொடங்கினர். கர்த்தருடனான உடன்படிக்கை உறவாகிய. எல்லோரிடமிருந்தும் வேறுபட்ட ஒரு தேசமாக மாறிய காரியத்தை அவர்கள் நிராகரித்தார்கள். தேவ வல்லமை அவர்களைப் பாதுகாக்காமல் ( 2 இராஜாக்கள் 17: 6–7 பார்க்கவும்), அவர்களின் எதிரிகளைத் தடுக்க எதுவும் இல்லை ( 2 நாளாகமம் 36: 12-20 பார்க்கவும்).

சிதறுதல்

சுமார் கி.மு. 735 மற்றும் 720 க்கு இடையில், அசீரியர்கள் பன்னிரண்டு பழங்குடியினரில் பத்து பேருக்கு சொந்தமான இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யம் மீது படையெடுத்து, ஆயிரக்கணக்கான இஸ்ரவேலர்களை அசீரியப் பேரரசின் பல்வேறு பகுதிகளுக்கு சிறைபிடித்து சென்றனர் ( 2 இராஜாக்கள் 17: 1–7 பார்க்கவும் ). 1 இந்த இஸ்ரவேலர் “காணாமற்போன கோத்திரத்தார்” என்று அறியப்பட்டனர், ஏனென்றால் அவர்கள் தங்கள் தாயகத்திலிருந்து அகற்றப்பட்டு மற்ற நாடுகளிடையே சிதறடிக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் ஒரு ஆழமான அர்த்தத்திலும் காணாமற்போயினர்: காலப்போக்கில் அவர்கள் தேவனின் உடன்படிக்கை ஜனம் என்ற அடையாள உணர்வை இழந்தனர்.

யூதாவின் தெற்கு ராஜ்யம் சில சமயங்களில், வடக்கு ராஜ்யத்தை விட நீதியுள்ளதாக இருந்ததால், அது நீண்ட காலம் நீடித்தது. 2 ஆனால் இறுதியில் அங்குள்ள ஜனங்களும் கர்த்தரிடமிருந்து விலகிவிட்டார்கள். அசீரியர்கள் தெற்கு ராஜ்யத்தின் பெரும்பகுதியைத் தாக்கி வென்றனர்; எருசலேம் மட்டுமே அற்புதமாக பாதுகாக்கப்பட்டது ( 2 இராஜாக்கள் 19 ; ஏசாயா 10: 12–13 பார்க்கவும்). பின்னர், கிமு 597 மற்றும் 580 க்கு இடையில், பாபிலோனியர்கள் ஆலயம் உட்பட, எருசலேமை அழித்தனர், மேலும் பட்டணத்திலிருந்து பலரை சிறைபிடித்தனர் ( 2 இராஜாக்கள் 24–25; 2 நாளாகமம் 36; எரேமியா 39; 52 பார்க்கவும்). சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, யூதாவின் எஞ்சியவர்கள் எருசலேமுக்குத் திரும்பி ஆலயத்தைக் கட்டியெழுப்ப அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், பலர் பாபிலோனில் தங்கியிருந்தனர். 3

தலைமுறைகள் கடந்து செல்லும்போது, எல்லா கோத்திரங்களிலிருந்தும் இஸ்ரவேலர் “அவர்கள் அறியாத புறஜாதிகளுக்குள்ளே அவர்கள் சிதறடிக்கப்பட்டார்கள்”( சகரியா 7:14; ஆமோஸ் 9: 8–9ஐயும் பார்க்கவும்). சிலர் கர்த்தரால் மற்ற நாடுகளுக்கு வழிநடத்தப்பட்டனர் (2 நேபி 1: 1–5 ; ஓம்னி 1: 15–16 பார்க்கவும்). சிறைபிடிப்பிலிருந்து தப்பிக்க மற்றவர்கள் இஸ்ரவேலை விட்டு வெளியேறினர் ( 2 இராஜாக்கள் 25: 22–26 ; எரேமியா 42:13–19 ; 43:1–7) அல்லது அரசியல் அல்லது பொருளாதார காரணங்களுக்காக. 4

இந்த நிகழ்வுகளை இஸ்ரவேலின் சிதறுதல் என்று அழைக்கிறோம். பல காரணங்களுக்காக சிதறுதலைப்பற்றி அறிந்து கொள்வது முக்கியம். ஒன்று, இது பழைய ஏற்பாட்டின் முக்கிய தலைப்பு: பல பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலின் சிதறுதலுக்கு வழிவகுத்த ஆவிக்குரிய கீழ்நோக்கிய சுழற்சிக்கு சாட்சிகளாக இருந்தனர். அவர்கள் அந்த சிதறலை முன்கூட்டியே கண்டறிந்து அதைப்பற்றி எச்சரித்தனர், அவர்களில் சிலர் இதன் பின்பும் கூட வாழ்ந்தனர்.5 பழைய ஏற்பாட்டின் பிற்பகுதியில் ஏசாயா, எரேமியா, ஆமோஸ் மற்றும் பல புத்தகங்களை நீங்கள் படிக்கும்போது நினைவில் கொள்ள இது உதவியாக இருக்கும். இந்த சூழலை மனதில் கொண்டு, அசீரியா மற்றும் பாபிலோன், விக்கிரக ஆராதனை மற்றும் சிறைப்பிடிப்பு, பாழடைதல் மற்றும் இறுதியில் சீர்படுதலைப்பற்றிய அவர்களின் தீர்க்கதரிசனங்களைப் படிக்கும்போது, அவர்கள் எதைப்பற்றி பேசுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியும்.

இஸ்ரவேலின் சிதறலைப் புரிந்துகொள்வது மார்மன் புஸ்தகத்தையும் நன்றாகப் புரிந்துகொள்ள உதவும், ஏனென்றால் மார்மன் புஸ்தகம் சிதறிய இஸ்ரவேலின் ஒரு கிளையைப்பற்றிய பதிவு ஆகும்(1 நேபி 15:12 பார்க்கவும்). பாபிலோனியர்கள் தாக்குவதற்கு சற்று முன்பு, லேகியின் குடும்பத்தினர் சுமார் கி.மு. 600ல் எருசலேமிலிருந்து தப்பிச் சென்றதுடன் இந்த பதிவு தொடங்குகிறது. இஸ்ரவேலை சிதறடிப்பதைப்பற்றி தீர்க்கதரிசனம் கூறிய தீர்க்கதரிசிகளில் லேகியும் ஒருவன். 6 அவருடைய தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற அவருடைய குடும்பத்தினர் உதவினார்கள், இஸ்ரவேல் வீட்டாரின் கிளைகளை எடுத்து, உலகின் மறுபக்கத்தில், அமெரிக்காவில் நடவு செய்தனர்.

படம்
எரியும் நகரத்தை விட்டு வெளியேறும் மக்கள்

The Destruction of Jerusalem by Nebuzar-adan, by William Brassey Hole, © Providence Collection/licensed from goodsalt.com

கூடுகை

இருப்பினும், இஸ்ரவேலை சிதறடிப்பது கதையின் பாதி மட்டுமே. கர்த்தர் தம் ஜனத்தை மறக்கமாட்டார், அவர்கள் அவரைக் கைவிட்டபோதும் அவர் அவர்களை முற்றிலுமாக கைவிடமாட்டார். இஸ்ரவேல் சிதறடிக்கப்படும் என்ற பல தீர்க்கதரிசனங்களும், தேவன் ஒரு நாள் அவர்களைக் கூட்டிச் சேர்ப்பார் என்ற பல வாக்குறுதிகளுடன் இருந்தன. 7

அந்த நாள் இன்றுதான், நமது நாள். கூடுகை ஏற்கனவே தொடங்கிவிட்டது. 1836 ஆம் ஆண்டில், மோசே சீனாய் மலையின் அடிவாரத்தில் இஸ்ரவேல் புத்திரரைக் கூட்டிச்சேர்த்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, மோசே கர்த்லாந்து ஆலயத்தில் ஜோசப் ஸ்மித்துக்கு “பூமியின் நான்கு பகுதிகளிலிருந்தும் இஸ்ரவேலைச் சேகரிப்பதற்கான திறவுகோல்களைக்” கொடுத்தான் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 110:11). இப்போது, இந்த திறவுகோல்களை வைத்திருப்பவர்களின் வழிகாட்டுதலின் கீழ், கர்த்தருடைய ஊழியர்கள் செல்லக்கூடிய ஒவ்வொரு தேசத்திலிருந்தும் இஸ்ரவேலின் கோத்திரத்தார் கூடிவருகிறார்கள்.

தலைவர் ரசல். எம். நெல்சன் இந்த கூடுகையை அழைத்ததாவது, “இன்று பூமியில் நடைபெறும் மிக முக்கியமான விஷயம். அதன் தன்மைக்கு எதுவும் ஒத்ததல்ல, அதன் முக்கியத்துவத்துக்கு எதுவும் இணையல்ல, அதன் மகத்துவத்துக்கு எதுவும் இணையல்ல. நீங்கள் தெரிந்து கொண்டால்,… நீங்கள் விரும்பினால் இதன் பெரிய பங்காக இருக்கலாம்.” 8

அதை நீங்கள் எப்படி செய்வீர்கள்? இஸ்ரவேலை கூட்டிச் சேர்ப்பது என்றால் என்ன? பன்னிரண்டு கோத்திரத்தினரை அவர்கள் ஒரு காலத்தில் வசித்த நிலத்திற்கு மீட்டெடுப்பது என்று அர்த்தமா? உண்மையில், இது மிகப் பெரிய, மிக அதிகமான, நித்தியமான ஒன்றைக் குறிக்கிறது. தலைவர் நெல்சன் விளக்கியபடி:

“கூட்டிச்சேர்த்தலைப்பற்றி நாம் பேசும்போது இந்த அடிப்படை சத்தியத்தை நாம் சாதாரணமாக சொல்கிறோம், திரையின் இரு பக்கங்களிலுமுள்ள நமது பரலோக பிதாவின் பிள்ளைகள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷத்தின் செய்தியைக் கேட்க தகுதியுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.”

எப்போது வேண்டுமானாலும் நீங்கள் செய்கிற எதையும் அது உதவுகிற யாருக்கும் திரையின் இருபுறமும் தேவனுடன் உடன்படிக்கைகளை செய்வதற்கும் அவர்களின் அத்தியாவசிய ஞானஸ்நானம் மற்றும் ஆலய நியமங்களைப் பெறுவதற்கும் ஒரு அடி எடுத்துவைத்து, நீங்கள் இஸ்ரவேலை கூட்டிச் சேர்க்க உதவுகிறீர்கள். அது போலவே இது அவ்வளவு எளிதானது.”9

ஏசாயா சொன்னபடி, “ஒவ்வொருவராய்” ( ஏசாயா 27:12 ) அல்லது எரேமியா முன்னறிவித்தபடி, “ஊரில் ஒருவரும் வம்சத்தில் இரண்டுபேருமாக” ( எரேமியா 3:14 ) இது நடக்கிறது.

இஸ்ரவேலைக் கூட்டிச்சேர்ப்பது என்பது தேவனின் பிள்ளைகளை அவரிடம் திரும்ப அழைத்து வருவதாகும். அவருடனான அவர்களது உடன்படிக்கை உறவுக்கு அவர்களை மீட்டெடுப்பது என்று பொருள். இதன் பொருள் “பரிசுத்த தேசத்தை” மீண்டும் ஸ்தாபிப்பது என்று அவர் நீண்ட காலத்திற்கு முன்பு நிறுவ முன்மொழிந்தார் ( யாத்திராகமம் 19: 6 ).

வீட்டுக்கு வாருங்கள்

உடன்படிக்கையைக் கைக்கொள்பவராக, நீங்கள் இஸ்ரவேல் வீட்டாரின் ஒரு பகுதியாக இருக்கிறீர்கள். 10 நீங்கள் கூட்டிச் சேர்க்கப்பட்டிருக்கிறீர்கள், நீங்கள் கூட்டிச் சேர்ப்பவர். தேவனுக்கும் ஆபிரகாமுக்கும் இடையிலான ஒரு உடன்படிக்கையுடன் தொடங்கிய பல நூற்றாண்டுகால காவியக் கதை அதன் உச்சக்கட்டத்தை உருவாக்குகிறது, நீங்கள் ஒரு முக்கிய வீரர். இப்போது “இயேசு எல்லா இஸ்ரவேலரிடமும்,‘ வீட்டிற்கு வாருங்கள்,’” என சொல்கிற நேரம் இதுவே. 11

இது கூட்டிச் சேர்ப்பவர்களின் செய்தி: உடன்படிக்கைக்கு, வீட்டிற்கு வாருங்கள். சீயோன் வீட்டிற்கு வாருங்கள். இஸ்ரவேலின் பரிசுத்தரான இயேசு கிறிஸ்துவின் வீட்டிற்கு வாருங்கள், அவர் உங்களை உங்கள் பிதாவாகிய தேவனுடைய வீட்டிற்கு அழைத்து வருவார்.

குறிப்புகள்

  1. அசீரியாவால் சிறைபிடிக்கப்பட்ட பத்து கோத்திரத்தினர் ரூபன், சிமியோன், இசக்கார், செபுலோன், தாண், நப்தலி, காத், ஆசேர், எப்பிராயீம் மற்றும் மனாசே. லேவி கோத்திரத்தின் உறுப்பினர்கள் தங்கள் ஆசாரிய பொறுப்புகளைச் செய்வதற்காக மற்ற கோத்திரங்களின் பிரதேசங்கள் முழுவதும் பரப்பப்பட்டனர்.

  2. தெற்கு ராஜ்யம் முதன்மையாக யூதா மற்றும் பென்யமின் கோத்திரத்தைக் கொண்டிருந்தது. இருப்பினும், பல கோத்திரங்களின் உறுப்பினர்களும் அங்கு வாழ்ந்தனர் (2 நாளாகமம் 11: 14–17 பார்க்கவும்). உதாரணமாக, எருசலேமில் வாழ்ந்த லேகி மனாசே கோத்திரத்தைச் சேர்ந்தவன்.

  3. எஸ்றா 1; 7;நெகேமியா 2 பார்க்கவும். பாபிலோனிய பேரரசு பாரசீக சாம்ராஜ்யத்தால் கைப்பற்றப்பட்டது. பாரசீக மன்னரான கோரேசுதான் நாடுகடத்தப்பட்ட யூதர்களின் பல குழுக்களை எருசலேமுக்குத் திரும்ப அனுமதித்தான்.

  4. கி.பி. 70ல், எருசலேமும் அதன் ஆலயமும் மீண்டும் அழிக்கப்பட்டன, இந்த முறை ரோமானியர்களால், மீதமுள்ள யூதர்கள் பூமியின் பல நாடுகளுக்கு சிதறடிக்கப்பட்டனர்.

  5. எரேமியா 29:18; எசேக்கியேல் 22:15; ஓசியா 9:17; ஆமோஸ் 9:9; 1 நேபி 1:13 பார்க்கவும்.

  6. 1நேபி 1:13, 18–20; 10:12–14 பார்க்கவும்.

  7. ஏசாயா 5:26; 27:12; 54; எரேமியா 16:14–15; 29:14; 31:10; எசேக்கியேல் 11:17; 34:12; 37:21–28; சகரியா 10:8; 1 நேபி 10:14; 22:25; 3 நேபி 16:1–5; 17:4 பார்க்கவும்.

  8. Russell M. Nelson and Wendy W. Nelson, “Hope of Israel” (worldwide youth devotional, June 3, 2018), supplement to the New Era and Ensign, 8, ChurchofJesusChrist.org.

  9. Russell M. Nelson and Wendy W. Nelson, “Hope of Israel,” 15, ChurchofJesusChrist.org.

  10. 2 நேபி 30:2 பார்க்கவும்.

  11. Now Let Us Rejoice,” Hymns, no. 3.

அச்சிடவும்