புதிய ஏற்பாடு 2023
மார்ச் 6–12. மத்தேயு 9–10; மாற்கு 5; லூக்கா 9: “இயேசு அனுப்பிய பன்னிருவர் இவர்களே”


“மார்ச் 6–12. மத்தேயு 9–10; மாற்கு 5; லூக்கா 9: ‘இயேசு அனுப்பிய பன்னிருவர் இவர்களே’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“மார்ச் 6–12. மத்தேயு 9–10; மாற்கு 5; லூக்கா 9,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிப்பட்டவர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
இயேசு பேதுருவை நியமித்தல்

மார்ச் 6–12

மத்தேயு 9–10; மாற்கு 5; லூக்கா 9

“இயேசு அனுப்பிய பன்னிருவர் இவர்களே”

இந்த குறிப்பிலுள்ள படிப்பு ஆலோசனைகள் இந்த வசனங்களிலுள்ள முக்கிய கொள்கைகளை அடையாளம் காண உங்களுக்கு உதவுவதற்காகவே. எவ்வாறாயினும், எந்தப் பத்திகளைப் படிக்கலாம் அல்லது அவற்றை எவ்வாறு படிக்கலாம் என்பதைப்பற்றி நீங்கள் பெறக்கூடிய தனிப்பட்ட வெளிப்பாட்டை அவை மாற்றக்கூடாது.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

இயேசுவின் குணமாக்குதலின் அற்புதங்களின் செய்தி விரைவிலே பரவியது. தங்களுடைய சுகவீனங்களிலிருந்து நிவாரணத்திற்கான நம்பிக்கையுடன் திரளானோர் அவரைப் பின்பற்றினார்கள். ஆனால் இரட்சகர் திரளானோரை நோக்கிப் பார்த்தபோது, அவர்களுடைய சரீர சுகவீனத்தைவிட அதிகமானவற்றை அவர் கண்டார். இரக்கத்தால் நிரப்பப்பட்ட அவர் “மேய்ப்பனில்லாத ஆடுகளைக்” (மத்தேயு 9:36) கண்டார். “அறுப்பு மிகுதியாகவும் வேலையாட்கள் கொஞ்சமெனவும்” (மத்தேயு 9:37) அவர் கண்டார். ஆகவே அவர் பன்னிரு அப்போஸ்தலர்களை அழைத்து, “அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து,” “காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப்” போய் அவர்களுக்கு போதிக்கவும் ஊழியம் செய்யவும் அவர்களை அனுப்பினார் (மத்தேயு 10:1, 6). பரலோக பிதாவினுடைய பிள்ளைகளுக்கு சேவை செய்ய அதிக வேலையாட்களுக்கான இன்றைய தேவை மிகப்பெரிதாயிருக்கிறது. பன்னிரு அப்போஸ்தலர்கள் இன்னமுமிருக்கிறார்கள் ஆனால் “பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறதென” (மத்தேயு 10:7) உலகமுழுவதற்கும் அறிவிக்கக்கூடிய ஜனங்களான, இயேசு கிறிஸ்துவின் சீஷர்கள் எப்போதையும்விட அதிகமாயிருக்கிறார்கள்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

மத்தேயு 9:18–26; மாற்கு 5:22–43

“பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு.”

“மரண அவஸ்தையில்” இருந்த தன் மகளை குணமாக்கும்படி யவீரு இயேசுவை முதலில் கேட்டபோது, யவீரு அவசரமாக ஆனால் நம்பிக்கையுடன் பேசினான்: “நீர் வந்து அவள் மேல் கைகளை வையும், அப்பொழுது பிழைப்பாள்” (மாற்கு 5:23). ஆனால் அவர்கள் சென்றபோது, ஒரு தூதுவன் யவீருவிடம் சொன்னான், அது மிகவும் தாமதமாகிவிட்டது: “உம்முடைய குமாரத்தி மரித்துப் போனாள்: இனி ஏன் போதகரை வருத்தப்படுத்துகிறீர்?” (வசனம் 35). அதேபோல, மாற்கு 5:25–34,ல் விவரிக்கப்பட்டுள்ள பெண்ணுக்கு 12 வருடங்களாக ஒரு நோயால் அவதிப்பட்டு வந்ததற்கு இது மிகவும் தாமதமாகத் தோன்றலாம்.

இந்த விவரங்களைப் படிக்கும்போது, உங்கள் வாழ்க்கையிலோ அல்லது உங்கள் குடும்பத்திலோ குணமடைய வேண்டிய காரியங்களைப்பற்றி நீங்கள் சிந்திக்கலாம், “மரண அவஸ்தையில்”அல்லது குணமடைய மிகவும் தாமதமாகத் தோன்றும் விஷயங்கள் உட்பட. இந்த விவரங்களில் உள்ள விசுவாசத்தின் வெளிப்பாடுகளில் உங்களைக் கவர்ந்தது எது? இயேசு அந்தப் பெண்ணுக்கும் யவீருவுக்கும் என்ன சொல்கிறார் என்பதைக் கவனியுங்கள். அவர் உங்களுக்கு என்ன சொல்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

லூக்கா 8:41–56; Russell M. Nelson, “Drawing the Power of Jesus Christ into Our Lives,” Liahona, May 2017, 39–42; Teachings of Presidents of the Church: Gordon B. Hinckley (2016), 333–42 ஐயும் பார்க்கவும்.

படம்
இயேசுவின் அங்கியைத் தொட பெண் அணுகுதல்

கர்த்தரில் நம்பிக்கையாயிரு – லிஸ் லெமன் ஸ்வின்டில்

மத்தேயு 10; லூக்கா 9:1–6

அவருடைய பணியைச் செய்ய கர்த்தர் அவருடைய ஊழியக்காரர்களுக்கு வல்லமை கொடுக்கிறார்.

மத்தேயு 10ல் இயேசு தனது அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்த அறிவுறுத்தல்கள் நமக்கும் பொருந்தும், ஏனென்றால் நாம் அனைவரும் கர்த்தரின் பணியில் பங்கு வகிக்கிறோம். அவர்களுடைய ஊழியத்தை நிறைவேற்ற அவர்களுக்குதவ அவருடைய அப்போஸ்தலர்களுக்கு கிறிஸ்து என்ன வல்லமை கொடுக்கிறார்? செய்யும்படி நீங்கள் அழைக்கப்பட்ட பணியில் அவருடைய வல்லமையை நீங்கள் எவ்வாறு அணுகமுடியும்? (2 கொரிந்தியர் 6:1–10; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:34–46 பார்க்கவும்).

அவருடைய அப்போஸ்தலர்களுக்கு கிறிஸ்து கொடுத்த ஆணையைப்பற்றி நீங்கள் வாசிக்கும்போது, நீங்கள் செய்யவேண்டுமென கர்த்தர் விரும்புகிற பணியைப்பற்றிய எண்ணங்களை நீங்கள் பெறக்கூடும். உங்கள் சிந்தனைகளை ஒழுங்குபடுத்த பின்வரும் அட்டவணையைப் போன்ற ஒன்று உங்கள் எண்ணங்களை ஒழுங்கமைக்க முடியும்:

மத்தேயு 10

நான் பெறுகிற உணர்த்துதல்கள்

அவருடைய சீஷர்களுக்கு இரட்சகர் வல்லமை கொடுத்தார்.

என்னுடைய பணியைச் செய்ய எனக்குத் தேவையான வல்லமையை தேவன் எனக்குக் கொடுப்பார்.

மாற்கு 6:7–13; விசுவாசப் பிரமாணங்கள் 1:6; Bible Dictionary, “Apostle”; “Jesus Calls Twelve Apostles to Preach and Bless Others” (video), ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 10:17–20

நான் கர்த்தருடைய சேவையிலிருக்கும்போது எதைச் சொல்லவேண்டுமென அவர் எனக்கு உணர்த்துவார்.

இன்று சீஷர்கள் அனுபவிக்கிற காரியங்களுக்கு ஒத்த ஒன்றான தங்களுடைய விசுவாசத்தைப்பற்றி அவருடைய சீஷர்கள் துன்புறுத்தப்படுவார்கள், கேள்வி கேட்கப்படுவார்கள் என கர்த்தர் முன்னறிவித்தார். ஆனால் என்ன சொல்லவேண்டுமென பரிசுத்த ஆவியால் அவர்கள் அறிந்துகொள்வார்கள் என சீஷர்களுக்கு அவர் வாக்களித்தார். ஒருவேளை நீங்கள் உங்களுடைய சாட்சியைப் பகிரும்போது, ஆசீர்வாதம் ஒன்றைக் கொடுத்தபோது, அல்லது ஒருவருடன் ஒரு உரையாடலின்போது, உங்களுடைய வாழ்க்கையில் இந்த தெய்வீக வாக்களிப்பு நிறைவேற்றப்பட்டபோதுள்ள அனுபவம் உங்களுக்கிருக்கிறதா? நேசமுள்ள ஒருவருடன் உங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதலை அல்லது ஒரு குறிப்பிதழில் அவைகளை பதிவுசெய்தலைக் கருத்தில் கொள்ளவும். இதுபோன்ற அனுபவங்களை அடிக்கடி அனுபவிக்க நீங்கள் என்ன செய்ய உணர்த்தப்படுகிறீர்கள்?

லூக்கா 12:11–12; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 84:85 ஐயும் பார்க்கவும்.

மத்தேயு 10:34–39

“சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்ப வந்தேன்” என இயேசு சொன்னதற்கு அர்த்தம் என்ன?

மூப்பர் டி.டாட் கிறிஸ்டாபர்சன் போதித்தார்: “இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டு அவருடைய உடன்படிக்கைக்குள் பிரவேசித்தபோது, உங்களில் பலர் நிராகரிக்கப்பட்டு, தகப்பனால், தாயால், சகோதரர்களால், சகோதரிகளால் ஒதுக்கப்பட்டீர்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையிருக்கிறது. ஏதோ ஒரு வகையில், உங்களுக்கு மிகவும் நெருக்கமான உறவுகளை தியாகம் செய்ய கிறிஸ்துவின்மீதுள்ள உங்களுடைய மேலான அன்புக்குத் தேவையாயிருக்கிறது, மற்றும் நீங்கள் அதிகமாய் கண்ணீர் சிந்தியிருக்கிறீர்கள். உங்களுடைய சொந்த அன்பு மங்காதிருந்தும், தேவனின் குமாரனில் வெட்கப்படாமலிருப்பதை நீங்களே காட்டி, இந்த சிலுவையின் கீழ் நீங்கள் அசையாது பற்றிக்கொண்டிருக்கிறீர்கள்” (“Finding Your Life,” Ensign, Mar. 2016, 28).

இரட்சகரைப் பின்பற்றும்படியாக நேசத்துக்குரிய உறவுகளை இழப்பதற்கான இந்த விருப்பம், “என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்” (மத்தேயு 10:39)என்ற வாக்களிப்புடன் வருகிறது.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

மாற்கு 5:22–43.உங்கள் குடும்பத்தினர் இந்தக் கதையை ஒன்றாகப் படிக்கும்போது, அவர்கள் குடும்ப உறுப்பினர்களிடம் யவீரு, அப்பெண் அல்லது கதையில் உள்ள மற்றவர்கள் என்றால் அவர்கள் எப்படி உணருவார்கள் என்று கேட்க நீங்கள் இடைநிறுத்தலாம். இந்த குறிப்பில் உள்ளவை போன்ற கதையின் படங்களை நீங்கள் காட்டலாம். கதைகளில் ஜனங்களின் விசுவாசத்தை இந்தப் படங்கள் எப்படிச் சித்தரிக்கின்றன? (“Jesus Raises the Daughter of Jairus” and “Jesus Heals a Woman of Faith” on ChurchofJesusChrist.org காணொலிகளையும் பார்க்கவும்.) உங்கள் குடும்பம் எதிர்கொள்ளும் சில சவால்களையும் நீங்கள் கருத்தில் கொள்ளலாம். “பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு” என்ற அவருடைய வார்த்தைகளை நாம் எப்படிப் பயன்படுத்தலாம்? (மாற்கு 5:36).

மத்தேயு 10:39; லூக்கா 9:23–26நம் வாழ்க்கையை “இழப்பது” மற்றும் “கண்டுபிடிப்பது” என்றால் என்ன? (மத்தேயு 10:39). இந்த வசனங்களில் இயேசுவின் போதனைகளை விளக்கும் அனுபவங்களை குடும்ப உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

மத்தேயு 10:40.தற்கால அப்போஸ்தலர்களின் ஆலோசனையைப் பெற்று, பின்பற்றுவதில் நீங்களும் உங்கள் குடும்பமும் எப்படி இருக்கிறீர்கள்? அவர்களுடைய ஆலோசனைக்கு நமது கீழ்ப்படிதல் இயேசு கிறிஸ்துவினடத்தில் எவ்வாறு நம்மை நெருக்கமாகக் கொண்டுவருகிறது?

லூக்கா 9:61–62.கலப்பையில் கையை வைத்த பின் திரும்பிப் பார்ப்பதன் அர்த்தம் என்ன? தேவ இராஜ்யத்துக்கு தகுதியில்லாதவராக ஏன் இந்த மனோபாவம் ஆக்குகிறது?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வார குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “When Faith Endures,” Hymns, no. 128.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

பரிசுத்த ஆவிக்கு செவிகொடுக்கவும். நீங்கள் படிக்கும் காரியத்துடன் அவை தொடர்பில்லாததாகத் தோன்றினாலும், நீங்கள் படிக்கும்போது, உங்கள் எண்ணங்கள் மற்றும் உணர்வுகளுக்கு கவனம் செலுத்துங்கள் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 8:2–3 பார்க்கவும்). அந்த எண்ணங்களே, நீங்கள் அறியவும் செய்யவும் தேவன் விரும்புகிற அதே காரியங்களாயிருக்கலாம்.

படம்
இயேசு படுக்கையிலிருந்து சிறுமியை எழுப்புதல்

டலிதா குமி–ஈவா குலேவா டிமோத்தி

அச்சிடவும்