புதிய ஏற்பாடு 2023
உங்கள் தனிப்பட்ட வேதப் படிப்பை மேம்படுத்த ஆலோசனைகள்


“உங்கள் தனிப்பட்ட வேத படிப்பை மேம்படுத்த ஆலோசனைகள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: புதிய ஏற்பாடு 2023 (2022)

“உங்கள் தனிப்பட்ட வேதப் படிப்பை மேம்படுத்த ஆலோசனைகள்,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2023

படம்
பெண் வேதங்களைப் படித்தல்

உங்கள் தனிப்பட்ட வேத தியானத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள்

வேதங்களில் தேவ வார்த்தையின் உங்கள் படிப்பை மேம்படுத்த இங்கே சில எளிய வழிகள்.

இயேசு கிறிஸ்துவைப்பற்றிய சத்தியங்களைத் தேடுங்கள்

சகல காரியங்களும் கிறிஸ்துவைக் குறித்தே சாட்சி பகருகின்றன என வேதங்கள் நமக்குப் போதிக்கின்றன (2 நேபி 11:4; மோசே 6:63 பார்க்கவும்), ஆகவே, இரட்சகரைக் குறித்து போதிக்கும் மற்றும் அவரை எவ்வாறு பின்பற்றுவதென்பதைப் போதிக்கும் வசனங்களை குறித்தல் அல்லது அடையாளப்படுத்துவதைக் கருத்தில் கொள்ளவும்.

உணர்த்தும் வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் தேடவும்.

உங்களுக்காகவே குறிப்பாக அவைகள் எழுதப்பட்டது போலவே வேதங்களிலுள்ள குறிப்பிட்ட வார்த்தைகளும் சொற்றொடர்களும் உங்களைக் கவருவதை நீங்கள் காணலாம். தனிப்பட்ட விதமாக பொருத்தமானதாக அவை உணர்த்தலாம், உங்களை உணர்த்துவதாகவும், தூண்டுவதாயும் இருக்கலாம். அவற்றை உங்கள் வேதங்களில் அடையாளப்படுத்த அல்லது படிப்பு குறிப்பிதழில் எழுதுவதைக் கருத்தில் கொள்ளவும்.

சுவிசேஷ சத்தியங்களைத் தேடவும்

சில சமயங்களில் சுவிசேஷ சத்தியங்கள் (அடிக்கடி கோட்பாடு அல்லது கொள்கைகள் என அழைக்கப்படுகின்றன) நேரடியாக கூறப்பட்டுள்ளன, மற்றும் சில சமயங்களில் ஒரு எடுத்துக்காட்டு அல்லது கதை மூலம் குறிப்பிடப்படுகின்றன. “இந்த வசனங்களில் என்ன நித்திய சத்தியங்கள் போதிக்கப்பட்டன?” என உங்களையே கேளுங்கள்.

பரிசுத்த ஆவிக்குச் செவிகொடுங்கள்

அவை நீங்கள் வாசிப்பனவற்றுக்கு தொடர்பற்றனவாக இருந்தாலும் கூட, உங்கள் சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் கவனம் செலுத்துங்கள். அந்த எண்ணங்கள்தான் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என உங்கள் பரலோக பிதா விரும்பும் காரியங்களாக இருக்கக்கூடும்.

வேதங்களை உங்கள் வாழ்வுக்கு ஒப்பிடுங்கள்

நீங்கள் வாசிக்கிற கதைகளும் போதனைகளும் உங்கள் வாழ்க்கைக்கு எப்படி பொருந்துகின்றன என்பதைக் கருத்தில் கொள்ளவும். உதாரணமாக, “நான் வாசிப்பதை ஒத்த என்ன அனுபவங்களை நான் பெற்றேன்?” அல்லது “இந்த வேதங்களிலுள்ளவரின் எடுத்துக்காட்டை நான் எப்படி பின்பற்ற முடியும்?” என நீங்கள் உங்களையே கேட்கலாம்,

நீங்கள் படிக்கும்போது கேள்விகள் கேட்கவும்

நீங்கள் வேதங்களைப் படிக்கும்போது, கேள்விகள் உங்கள் மனதுக்கு வரலாம். நீங்கள் வாசித்துக்கொண்டிருப்பதற்கு அல்லது பொதுவாக உங்கள் வாழ்க்கைக்கு இந்தக் கேள்விகள் தொடர்புடையதாக இருக்கலாம். நீங்கள் தொடர்ந்து வேதங்களைப் படிக்கும்போது, இந்த கேள்விகளைப்பற்றி சிந்தித்து, பதில்களைத் தேடவும்.

படம்
சிறுவன் வேதங்களைப் படித்தல்

வேதப் படிப்பு உதவிகளைப் பயன்படுத்தவும்

நீங்கள் வாசிக்கும் வசனங்களைப்பற்றிய கூடுதல் உள்ளுணர்வுகளைப் பெற, அடிக்குறிப்புகளைப் பயன்படுத்துங்கள், Topical Guide, the Bible Dictionary, the Guide to the Scriptures (scriptures.ChurchofJesusChrist.org), மேலும் பிற படிப்பு உதவிகள்.

வசனங்களின் உள்ளடக்கத்தை கருத்தில் கொள்ளவும்

உள்ளடக்கம் அல்லது வசனத்தின் சூழலை அல்லது பின்னணியை கருத்தில் கொண்டால் ஒரு வசனத்தைப்பற்றிய அர்த்தமுள்ள உள்ளுணர்வுகளை நீங்கள் காணக்கூடும். உதாரணமாக, ஜனங்களின் பின்னணியையும் நம்பிக்கையையும்பற்றி அறிந்திருந்து ஒரு தீர்க்கதரிசி பேசுவது, அவனுடைய வார்த்தைகளின் நோக்கத்தைப் புரிந்துகொள்ள உங்களுக்கு உதவும்.

உங்கள் சிந்தனைகளையும் உணர்வுகளையும் பதிவுசெய்யுங்கள்

நீங்கள் படிக்கும்போது எழும் எண்ணங்களைப் பதிவுசெய்ய அநேக வழிகள் உள்ளன. உதாரணமாக, ஒரு அர்த்தமிக்க வார்த்தை அல்லது சொற்றொடரை நீங்கள் குறியிட்டு, உங்கள் வேதங்களில் ஒரு குறிப்பாக உங்கள் சிந்தனைகளைப் பதிவு செய்யலாம். நீங்கள் பெறுகிற உள்ளுணர்வுகள், உணர்வுகள் மற்றும் எண்ணங்களின் குறிப்பிதழை நீங்கள் எழுதலாம்.

பிற்கால தீர்க்கதரிசிகள் மற்றும் அப்போஸ்தலர்களின் வார்த்தைகளைப் படிக்கவும்

வேதங்களில் நீங்கள் காண்கிற கொள்கைகளைப்பற்றி பிற்காலத் தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் என்ன போதித்திருக்கிறார்கள் என வாசிக்கவும் (உதாரணமாக, conference.ChurchofJesusChrist.org மற்றும் சபை பத்திரிக்கைகளை பார்க்கவும்).

உள்ளுணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவும்

உங்கள் தனிப்பட்ட படிப்பிலிருந்து உள்ளுணர்வுகளைக் கலந்துரையாடுவது, பிறருக்கு போதிக்க நல்ல வழி மட்டுமல்ல, நீங்கள் படித்ததில் உங்கள் புரிந்துகொள்ளுதலை பெலப்படுத்தவும் இது உதவுகிறது.

நீங்கள் கற்றுக்கொண்டபடி வாழுங்கள்

வேதப் படிப்பு நமக்கு உணர்த்துவது மட்டுமன்றி நாம் வாழும் விதத்தை மாற்ற நம்மை நடத்துகிறதாயிருக்க வேண்டும். நீங்கள் வாசிக்கும்போது பரிசுத்த ஆவியானவர் என்ன செய்யத் தூண்டுகிறாரோ அதற்கு செவிகொடுத்து, அதன் பின் அந்தத் தூண்டுதல்களின்படி செயலாற்ற ஒப்புக்கொடுக்க வேண்டும்.

மூப்பர் டேவிட் ஏ. பெட்னார் சொன்னார்: “நாம் அறிந்துகொள்ளவும், செய்யவும், அர்ப்பணிப்புள்ள சீஷர்களாக மாறுவதற்கும், முடிவுபரியந்தம் துணிவுடன் நிலைத்திருக்கவும் செய்யவேண்டிய ஒவ்வொன்றையும் நமக்குக் கூற அல்லது போதிக்க சபையை ஒரு நிறுவனமாக நாம் எதிர்பார்க்கக் கூடாது.” [கோட்பாடும் உடன்படிக்கைகளும் 121:29 பார்க்கவும்]. மாறாக, நாம் கற்கவேண்டியதைக் கற்றுக்கொள்ளவும், நாம் எப்படி வாழவேண்டுமென நாம் அறிந்ததின்படி வாழவும், நாம் யாராய் மாறவேண்டுமென போதகர் விரும்புகிறாரோ அதுபோல மாறவும் நமக்கு தனிப்பட்ட பொறுப்பிருக்கிறது. கற்றுக்கொள்ளுதலுக்கும், ஜீவிப்பதற்கும் மற்றும் மாறுதலுக்கும் ஒரே அமைப்பாய் நமது வீடுகளிருக்கின்றன” (“Prepared to Obtain Every Needful Thing,” Liahona, May 2019, 102).

அச்சிடவும்