என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
மே 20–26: “அவருடன் ஒரு உடன்படிக்கைக்குள் நாம் பிரவேசித்தோம்” மோசியா 18–24


“மே 20–26: ‘அவருடன் ஒரு உடன்படிக்கைக்குள் நாம் பிரவேசித்தோம்’ மோசியா 18-24:” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2024)

“மே 20–26. மோசியா 18–24,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024

படம்
லிம்கியின் ஜனங்கள் தப்பித்தல்

மினர்வா கே. டிசெர்ட் (1888–1976), லிம்கியும் அவனது ஜனமும் தப்பித்தல், 1949–1951, oil on masonite, 35 7/8 × 48 inches. பிரிகாம் யங் பல்கலைக்கழக கலை அருங்காட்சியகம், 1969.

மே 20–26: “அவருடன் ஒரு உடன்படிக்கைக்குள் நாம் பிரவேசித்தோம்”

மோசியா 18–24

மோசியா 18, 23–24லிலுள்ள ஆல்மா மற்றும் அவனுடைய ஜனங்களின் விவரம் “தேவனுடைய மந்தையினுள் வருவது” (மோசியா 18:8) என்பதைக் காட்டுகிறது” ஆல்மாவின் ஜனங்கள் ஞானஸ்நானம் பெற்றபோது, “அவரை சேவித்து அவருடைய கட்டளைகளைக் கைக்கொள்வோம்” (மோசியா 18:10) என தேவனோடு ஒரு உடன்படிக்கையை அவர்கள் செய்தார்கள். இது ஒரு தனிப்பட்ட ஒப்புக்கொடுத்தலாயிருந்தாலும், அவர்கள் ஒருவருக்கொருவரை எவ்வாறு நடத்தினார்கள் என்பதற்கும் சம்பந்தப்பட்டது. ஆம், பரலோக பிதாவிடம் திரும்பும் பயணம் தனிநபருக்கானதாக இருக்கிறது மற்றும் நமக்காக வேறு யாருமே உடன்படிக்கைகளைக் கைக்கொள்ள முடியாது, ஆனால் நாம் தனியாயிருக்கிறோமென்பது அதன் பொருளல்ல. ஒருவருக்கொருவர் நமக்கு தேவை. கிறிஸ்துவின் சபையாராக பாதையிலே “ஒருவருக்கொருவர் பாரங்களைச் சுமந்து” (மோசியா 18:8–10) ஒருவருக்கொருவர் உதவிசெய்து சேவை செய்வதால் தேவனுக்கு சேவை செய்ய நாம் உடன்படிக்கை செய்கிறோம். நாம் அனைவரும் செய்வதைப்போல, நிச்சயமாக ஆல்மாவின் ஜனங்களுக்கு சுமக்க பாரங்களிருந்தன. “நிர்விசாரமாய் [நமது] பாரங்களைச் சுமக்க” (மோசியா 24:15) ஒரு வழியில் கர்த்தர் நமக்குதவுகிறாரென்பது, அவர்களுக்காக செய்ய நாம் வாக்களித்ததைப்போல நம்மோடு துக்கிக்கவும், நமக்கு ஆறுதலளிக்கவும் வாக்களித்த ஒரு பரிசுத்தவான்களின் சமுதாயத்தை நமக்குக் கொடுப்பதாகும்.

வீட்டிலும் சபையிலும் கற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகள்

படம்
வேத பாட வகுப்பு சின்னம்

மோசியா 18:1–17

நான் ஞானஸ்நானம் பெறும்போது, நான் தேவனுடன் ஒரு உடன்படிக்கை செய்கிறேன்.

மோசியா 18ல் விவரிக்கப்பட்டுள்ள விசுவாசிகள் இயேசு கிறிஸ்துவைப் பற்றி எவ்வளவு ஆழமாக உணர்ந்தார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். அவர்கள் அவரைப் பற்றி அறிய, பெரும் ஆபத்தில் இரகசியமாக சந்திக்க வேண்டியிருந்தது (வசனம் 3 ஐப் பார்க்கவும்). ஞானஸ்நானத்தின் உடன்படிக்கையின் மூலம் தங்கள் ஒப்புக்கொடுத்தலைக் காட்ட வாய்ப்பு கிடைத்தபோது, “அவர்கள் மகிழ்ச்சியால் கைகளைத் தட்டி, இதுவே எங்களுடைய இருதயங்களின் விருப்பமாயிருக்கிறது” என்றார்கள் (மோசியா 18:11).

இந்த வசனங்களைப் படிப்பது உங்கள் உடன்படிக்கைகள் உங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை சிந்திக்க ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும். குறிப்பாக மோசியா 18:8-14ஐ நீங்கள் படிக்கும்போது, இது போன்ற கேள்விகளைக் கருத்தில் கொள்ளுங்கள்:

  • ஞானஸ்நானத்தின்போது நீங்கள் செய்த வாக்களிப்புகளைப்பற்றி இந்த வசனங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? தேவன் உங்களுக்கு என்ன வாக்குறுதி அளிக்கிறார்? (வசனங்கள் 10, 13 பார்க்கவும்).

  • ஒருவருக்கொருவர் ஊழியம் செய்ய நமது முயற்சிகளுடன் தேவனுக்கு சேவை செய்ய உடன்படிக்கை எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது? (வசனங்கள் 8–9 பார்க்கவும்).

  • “தேவனுக்கு [சாட்சியாக] நிற்பது” என்பது உங்களுக்கு என்ன அர்த்தமாகும்? (வசனம் 9).

  • உங்களுடைய ஞானஸ்நான உடன்படிக்கையைக் கைக்கொள்ளுவது “பரிசுத்த ஆவியில் நிறைந்திருக்க” உங்களுக்கு எவ்வாறு உதவுகிறது? (மோசியா 18:14). உங்களுடைய உடன்படிக்கையைக் கைக்கொள்ள பரிசுத்த ஆவியானவர் எவ்வாறு உங்களுக்குதவுகிறார்?

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பது, உடன்படிக்கைகளும் நியமங்களும் தேவனுக்கு ஏன் முக்கியம் என்பதை நீங்கள் சிந்திக்க வழிவகுக்கும். மூப்பர் கெரிட் டபிள்யூ. காங்கின் செய்தி “உடன்படிக்கைக்குச் சொந்தமாதல்” (லியஹோனா, நவ. 2019, 80–83) அல்லது தலைவர் ஜீன் பி. பிங்காமின் செய்தி“தேவனுடனான உடன்படிக்கைகள் நித்திய மகிமைக்காக நம்மை பலப்படுத்துகின்றன, பாதுகாக்கின்றன, ஆயத்தப்படுத்துகின்றனலியஹோனா, மே 2022, 66–69)வில் உள்ளுணர்வுகளை நீங்கள் காணலாம். உங்கள் உடன்படிக்கைகளுக்கு நீங்கள் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்? உங்களுடைய வாக்களிப்புகளைக் கைக்கொள்ள நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?

வேதங்களிலிருந்தும் பிற்கால தீர்க்கதரிசிகளிலிருந்தும் சத்தியத்தைக் கற்பியுங்கள். நீங்கள் கற்பிக்கும்போது—கற்றுக்கொள்ளும்போது—கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தை அதிகரிப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று வேதங்கள் மற்றும் பிற்கால தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளில் கவனம் செலுத்துவது என்பதை நினைவில் கொள்ளுங்கள் (மோசியா 18:19 பார்க்கவும் ).

மோசியா 18:17–30

தேவன் தம்முடைய மக்களை ஒன்றுகூடும்படியும், ஒழுங்கமைக்கவும், ஒன்றுபட்டிருக்கவும் கட்டளையிடுகிறார்.

நமக்கு சபை ஏன் தேவையாயிருக்கிறது, என சிலர் ஆச்சரியப்படுகிறார்கள்? மோசியா 18:17–31ஐத் தேடுங்கள், ஆல்மாவின் மக்கள் “கிறிஸ்துவினுடைய சபையில்” (மோசியா 18:17) ஒன்றுகூடியதில் காணப்பட்ட மதிப்பைத் தேடுங்கள். ஆல்மாவின் நாளிலும் நமது நாளிலும் இயேசு கிறிஸ்துவின் சபையில் நீங்கள் என்ன ஒற்றுமைகளைக் காண்கிறீர்கள்?

ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சபை அவசியம் என்று நம்பாத நண்பர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்? இயேசு கிறிஸ்துவின் சபைக்கு சொந்தமானதற்கு நீங்கள் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள்?

“ஒன்றாய் பின்னப்பட்டு, ஒருவருக்கொருவர் அன்பாயிருக்க” உங்கள் தொகுதி அல்லது கிளை உறுப்பினர்களுக்குதவ நீங்கள் என்ன செய்யமுடியும்? (மோசியா 18:21).

டாலின் எச். ஓக்ஸ், “ஒரு சபைக்கான தேவை,” லியஹோனா, நவ. 2021, 24–26 பார்க்கவும்.

மோசியா 21–24

என்னுடைய பாரங்களைச் சுமக்க தேவன் எனக்குதவுகிறார்.

லிம்கியின் ஜனங்கள், ஆல்மாவின் ஜனங்கள் இருவரும் வெவ்வேறு சூழ்நிலைகளுக்காக இருந்தாலும், அடிமைத்தனத்திற்குள் வீழ்ந்தார்கள். மோசியா 19–22 லிலுள்ள லிம்கியின் ஜனங்கள் மற்றும் மோசியா18; 23–24 லிலுள்ள ஆல்மாவின் ஜனங்களின் விவரங்களை ஒப்பிடுவதில் உங்களால் என்ன கற்றுக்கொள்ளமுடியும்? நீங்கள் அப்படிச் செய்யும்போது, உங்கள் வாழ்க்கைக்கு பொருந்துகிற செய்திகளை தேடுங்கள். எடுத்துக்காட்டாக, “கொஞ்சம் கொஞ்சமாய்” முன்னேற்றமடைவது என்றால் என்ன? (மோசியா 21:16). இந்தக் கொள்கையை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம்?

மோசியா 23:21–24; 24:8–17

கர்த்தரை நான் நம்பமுடியும்.

தங்களுடைய பாவங்களுக்காக அவர்கள் மனந்திரும்பினாலும், ஆல்மாவும் அவனுடைய ஜனங்களும் இன்னமும் தங்களை அடிமைத்தனத்தில் கண்டார்கள். கர்த்தரை நம்புவதும், நமது உடன்படிக்கைகளின்படி வாழுதலும் எப்போதும் சிரமங்களைத் தடுப்பதில்லை, ஆனால் அவைகளை மேற்கொள்ள அது உதவுகிறது என்பதை அவர்களுடைய அனுபவங்கள் காட்டுகிறது. மோசியா 23:21–24 மற்றும் 24:8–17ஐ நீங்கள் வாசிக்கும்போது, உங்கள் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல், தேவனில் நம்பிக்கை வைக்க கற்றுக்கொள்ள உங்களுக்குதவக்கூடிய வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் கவனியுங்கள்.

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

மோசியா 18:7–17

நான் ஞானஸ்நானம் பெறும்போது, நான் தேவனுடன் ஒரு உடன்படிக்கை செய்கிறேன்.

  • உங்கள் பிள்ளைகள் ஞானஸ்நானத்திற்குத் தயாராக உதவுவதற்கான ஒரு முக்கியமான வழி, அவர்கள் ஞானஸ்நானம் பெறும்போது அவர்கள் செய்யும் உடன்படிக்கையைப் பற்றி அவர்களுக்குக் கற்பிப்பதாகும். இந்த வாரத்தின் குறிப்பின் முடிவில் படத்தைக் காண்பிப்பது மற்றும் மோசியா 18:9–10இல் அவர்களுடன் உடன்படிக்கையைப் பற்றி வாசிப்பதுபோல எளிமையானதாக இருக்கலாம். ஏற்கனவே ஞானஸ்நானம் பெற்ற ஒரு குழந்தையை சிறுபிள்ளைகளுக்கு இதைக் கற்பிக்க அழைப்பதைக் கருத்தில் கொள்ளவும். உங்கள் ஞானஸ்நானம் பற்றி உங்கள் பிள்ளைகள் கேட்டு மகிழலாம். தேவனுடனான உங்கள் உடன்படிக்கைகளைக் கடைபிடிப்பது உங்கள் வாழ்க்கையை எவ்வாறு ஆசீர்வதித்தது?

  • ஞானஸ்நானம் பெற்ற குழந்தைகள் தாங்கள் செய்த உடன்படிக்கைகளைப் பற்றி அடிக்கடி நினைவூட்டல்களைப் பயன்படுத்தலாம் மற்றும் ஒவ்வொரு வாரமும் திருவிருந்துடன் புதுப்பிக்கலாம். ஒருவேளை உங்கள் பிள்ளைகள் மோசியா 18:8–10 இல் விவரிக்கப்பட்டுள்ள ஞானஸ்நான உடன்படிக்கையை திருவிருந்து ஜெபங்களுடன் ஒப்பிடலாம் (கோட்பாடும் உடன்படிக்கைகளும் 20:77, 79 பார்க்கவும்). நம்முடைய ஞானஸ்நானத்தைப் போலவே, திருவிருந்தையும் ஒரு சிறப்பான, பயபக்தியான நேரமாக மாற்றுவது எப்படி?

படம்
இளம் பெண் ஞானஸ்நானம் பெறுதல்

நாம் ஞானஸ்நானம் பெறும்போது தேவனோடு ஒரு உடன்படிக்கை செய்கிறோம்.

மோசியா 18:17–28

நான் ஞானஸ்நானம் பெற்றவுடன், நான் இயேசு கிறிஸ்துவின் சபையில் உறுப்பினராகிறேன்.

  • பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையில் உறுப்பினராக இருப்பதன் அர்த்தம் என்னவென்று உங்கள் பிள்ளைகளுக்குத் தெரியுமா? மோசியா 18:17–28 இல் சபை உறுப்பினர்கள் செய்த விஷயங்களைக் குறிக்கும் படங்களைக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவுவதைக் கருத்தில் கொள்ளவும். இயேசு கிறிஸ்துவின் சபையின் உறுப்பினராக இருப்பதற்கு நீங்கள் ஏன் நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.

  • குழந்தைகள் “ஒன்றாய் பின்னப்பட்டு, ஒருவருக்கொருவர் அன்பாயிருந்து,” (மோசியா 18:21) அவர்கள் வாழ்நாள் முழுவதும் சபையுடன் இணைந்திருக்க உதவுகிறது. மோசியா 18:17–28, நீங்கள் வாசிக்கும்போது உங்கள் பிள்ளைகளை அழைப்பதைக் கருத்தில் கொள்ளவும். ஆல்மாவின் நாளில் கிறிஸ்துவின் சபை உறுப்பினர்கள் ஒருவரையொருவர் நேசிக்கவும் சேவை செய்யவும் என்ன செய்தார்கள்? நமது தொகுதியில், நமது கிளையில், நமது சமுதாயத்தில் இதை நாம் எவ்வாறு செய்யமுடியும்?

மோசியா 24:8–17

என்னுடைய பாரங்களை தேவனால் இலகுவாக்கமுடியும்.

  • ஒரு எளிய பொருள்சார் பாடம் கற்றலை மேலும் மறக்கமுடியாததாக மாற்றும். கனமான பொருட்களைக் கொண்டு பையை நிரப்பவும் (சுமைகளைக் குறிக்க) மற்றும் பையை வைத்திருக்க குழந்தையை அழைப்பதையும் கருத்தில் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் மோசியா 24:8-17 வாசிக்கும்போது, ஆல்மாவும் அவனுடைய மக்களும் தங்கள் சுமைகளினிமித்தம் தேவனின் உதவியை நாடியதைப் பற்றி கேட்கும் ஒவ்வொரு முறையும் பையிலிருந்து ஒரு பொருளை அகற்றும்படி அவர்களிடம் கேளுங்கள். நாம் அவருடைய உதவியை நாடும்போது பரலோக பிதா எவ்வாறு நம்முடைய பாரங்களை இலகுவாக்க முடியும் என்பதைப் பற்றி நீங்கள் அவர்களுடன் பேசலாம்.

படம்
ஜனங்கள் ஞானஸ்நானம் கொடுக்கப்படுதல்

The Waters of Mormon (மார்மன் தண்ணீர்கள்) – ஜோர்ஜ் கோக்கோ

அச்சிடவும்