என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
மே 27–ஜூன் 2: “தேவனுடைய ஜனம் என்று அவர்கள் அழைக்கப்பட்டார்கள்” மோசியா 25–28


“மே 27–ஜூன் 2: ‘தேவனுடைய ஜனம் என்று அவர்கள் அழைக்கப்பட்டார்கள்.’ மோசியா 25–28,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2024)

“மே 27–ஜூன் 2. மோசியா 25–28,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024 (2024)

படம்
ஆல்மாவுக்கும் மோசியாவின் குமாரர்களுக்கும் தூதன் தோன்றுதல்

(Conversion of Alma the Younger) இளைய ஆல்மாவின் மனமாற்றம் – காரி எல். காப்

மே 27–ஜூன் 2: “தேவனுடைய ஜனம் என்று அவர்கள் அழைக்கப்பட்டார்கள்”

மோசியா 25–28

கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகள் தனித்தனி தேசங்களில் வாழ்ந்தபிறகு, நேபியர்கள் திரும்பவும் ஒரே ஜனமானார்கள். லிம்கியின் ஜனம், ஆல்மாவின் ஜனம் மற்றும் மோசியாவின் ஜனம், நேபியின் சந்ததியிலிருந்து வந்திராத சாரகெம்லாவின் ஜனங்களும் கூட, இப்போது அனைவரும் “நேபியர்களோடு எண்ணப்பட்டார்கள்” (மோசியா 25:13). அவர்களில் அநேகர் ஆல்மாவின் ஜனம் பின்பற்றிய கர்த்தரின் சபையின் உறுப்பினர்களாகவும் விரும்பினர். ஆகவே “கிறிஸ்துவுடைய நாமத்தை தங்கள் மீது தரித்துக்கொள்ள விருப்பம் கொண்ட” எவரும் ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு அவர்கள் “தேவனுடைய ஜனம் என்றழைக்கப்பட்டார்கள்” (மோசியா 25:23–24). பிணக்கும் அடிமைத்தனமுமான ஆண்டுகளுக்குப் பிறகு, இறுதியாக நேபியர் சமாதான காலத்தை அனுபவிப்பார்கள் போல தோன்றியது.

ஆனால் சிறிது காலத்திற்குள்ளாகவே அவிசுவாசிகள் பரிசுத்தவான்களைத் துன்புறுத்தத் தொடங்கினர். விசேஷமாக இருதயத்தை நொறுக்குவது எதுவென்றால், இந்த அவிசுவாசிகளில் அநேகர், “வளர்ந்துகொண்டிருக்கிற தலைமுறையான”, மோசியாவின் குமாரர்கள் மற்றும் ஆல்மாவின் ஒரு குமாரன் உள்ளிட்டவர்களான விசுவாசிகளின் சொந்த பிள்ளைகள் (மோசியா 26:1). ஒரு தூதனின் அற்புத வருகையைப் பற்றி அந்த விவரம் சொல்கிறது. ஆனால் இந்த கதையின் உண்மையான அற்புதம் வழிதவறிய மகன்களுக்கு தேவதூதர்கள் தோன்றுவது மட்டுமல்ல. மனமாற்றம் ஒரு அற்புதம், ஒன்று அல்லது மற்றொரு விதத்தில் அது நம் அனைவருக்கும் நிகழ வேண்டும்.

வீட்டிலும் சபையிலும் கற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகள்

மோசியா 26:1–6

மற்றவர்கள் இயேசு கிறிஸ்துவண்டை வர என்னால் உதவ முடியும்.

ஆனால் மனமாற்றம் என்பது தனிப்பட்டது, ஒருவரின் பிள்ளைகளுக்கு ஒரு பரம்பரைச் சொத்தாக கடத்த முடியாது. மோசியா 26:1–6ஐ நீங்கள் வாசிக்கும்போது, “வளர்ந்து கொண்டிருக்கிற தலைமுறை” வீழ்ச்சியடைந்ததற்கான சாத்தியமான காரணங்களை சிந்தித்துப் பாருங்கள், மேலும் அவர்களின் நம்பிக்கையின்மையின் விளைவுகளை கவனியுங்கள். கிறிஸ்துவிடம் நீங்கள் கொண்டுவர விரும்பக்கூடிய ஜனங்களைப்பற்றியும் நீங்கள் யோசிக்கலாம். மோசியா 25–28ஐப் பற்றிய உங்கள் ஆய்வு முழுவதும், இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை வளர்க்க நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களை ஆவியானவர் கிசுகிசுக்கக்கூடும்.

மோசியா 26:6–39

தேவனின் விசுவாசமிக்க வேலைக்காரர்கள் அவரது சித்தத்தைச் செய்ய நாடுகிறார்கள்.

ஆல்மா போன்ற சபைத் தலைவர் எப்போதுமே செய்யக்கூடிய சரியானவற்றை அறிகிறார் என சிலசமயங்களில் நாம் நினைக்கக்கூடும். மோசியா 26ல் சபையில் ஆல்மா ஒருபோதும் கையாளாத பிரச்சினைபற்றி நாம் வாசிக்கிறோம். இந்தச் சூழ்நிலையில் ஆல்மா என்ன செய்தான்? (மோசியா 26:13–14, 33–34, 38–39 பார்க்கவும்). உங்கள் குடும்பத்தில் அல்லது சபைச் சேவையில் கஷ்டமான பிரச்சினைகளை நீங்கள் எப்படி அணுகலாம் என்பதைப்பற்றி ஆல்மாவின் அனுபவம் என்ன ஆலோசனையளிக்கிறது?

மோசியா 26: 15–32இல் ஆல்மாவுக்கு கர்த்தர் என்ன போதித்தார்? இந்த பதில்களில் சில, ஆல்மாவின் கேள்விக்கு கர்த்தரின் நேரடியான பதில் அல்ல என்பதைக் கவனிக்கவும். ஜெபம் மற்றும் தனிப்பட்ட வெளிப்படுத்தல் பெறுவதைப்பற்றி இது உங்களுக்கு என்ன ஆலோசனையளிக்கிறது?

கொள்கைகள் நித்தியமானவை வேதங்களின் கதைகளும் போதனைகளும் எவ்வாறு உங்கள் வாழ்க்கைக்குப் பொருந்துகிறது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். உதாரணமாக, “ஆல்மாவை ஒத்த என்ன அனுபவங்களை நான் பெற்றேன்?” அல்லது “ஆல்மாவால் போதிக்கப்பட்ட எந்த சத்தியங்கள் எனக்கு உதவ முடியும்?” என நீங்கள் உங்களையே கேட்கலாம்,

மோசியா 26:15–31

நான் மனந்திரும்பி மற்றவர்களை மன்னிப்பது போல் தேவன் என்னை இலவசமாக மன்னிக்கிறார்.

மனந்திரும்புதல் மற்றும் மன்னிப்பு ஆகியவை மோசியா 26–27 இல் மீண்டும் மீண்டும் வரும் தலைப்புகள். மோசியா 26:22–24, 29–31 27:23–37இல் மனந்திரும்புதல் மற்றும் மன்னிப்பு பற்றி போதிக்கும் வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் தேடுங்கள்.

தேவன் உண்மையில் தங்களை மன்னிப்பாரா என்று சிலர் அதிசயிக்கலாம். அந்த அக்கறை கொண்ட சாரகெம்லாவில் உள்ள சபையின் உறுப்பினருக்கு மூத்த ஆல்மா எப்படி ஆலோசனை வழங்குவான் என்று நீங்கள் கற்பனை செய்கிறீர்கள்? மோசியா 26:15–31இல் இந்த சபை அங்கத்தினருக்கு உதவக்கூடிய எதை கர்த்தரிடமிருந்து ஆல்மா கற்றுக்கொண்டான்? (மற்றும் மரோனி 6:8; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 19:16–18; 58:42–43).

படம்
வேத பாட வகுப்பு சின்னம்

மோசியா 27:8–37; 28:1–4

இயேசு கிறிஸ்துவின் மூலமாக நான் நன்மைக்கு ஏதுவாக மாற முடியும்.

இளைய ஆல்மாவுக்கு ஆவிக்குரிய மறுபிறப்பு தேவை என்பது தெளிவாகத் தெரிந்தது. அவனும் மோசியாவின் குமாரர்களும் “பாவிகளிலே கொடியவர்கள்”(மோசியா 28:4). ஆனால் அவன் மனமாறிய பிறகு உடனேயே, ஒவ்வொருவருக்கும் மனமாற்றம் அத்தியாவசியமானதென, ஆல்மா சாட்சியளித்தான்: “எல்லா ஜனங்களும் மறுபடியும் ஜெனிக்க வேண்டும்” என்பதால் “திகையாதே” (மோசியா 27:25; முக்கியத்துவம் சேர்க்கப்பட்டது) என அவன் சொன்னான்.

மோசியா 27:8–37ல், ஆல்மாவின் அனுபவத்தை நீங்கள் வாசிக்கும்போது, அவனது இடத்தில் உங்களை வைப்பதைக் கருத்தில் கொள்ளவும். உங்களில் நீங்கள் மாற்ற வேண்டிய விஷயங்களைப் பற்றி சிந்திக்க முடியுமா? ஆல்மாவின் தகப்பனைப்போல “அதிக விசுவாசத்துடன்” யார் உங்களுக்காக ஜெபம் செய்துகொண்டிருக்கிறார்கள்? “தேவனுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் [உங்களை] நம்பவைக்க” எந்த அனுபவங்கள் உதவியிருக்கின்றன? (மோசியா 27:14). நீங்கள் “நினைவுகூர” வேண்டிய எந்த “மகத்துவமான காரியங்களை” உங்களுக்கு அல்லது உங்கள் குடும்பத்துக்கு கர்த்தர் செய்திருக்கிறார் (மோசியா 27:16). மறுபடியும் பிறப்பது என்றால் என்ன என்பதைப்பற்றி இளைய ஆல்மாவின் வார்த்தைகளிலிருந்தும் செயல்களிலிருந்தும் நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்? என்ன எடுத்துக்காட்டுகளை நீங்கள் கண்டிருக்கிறீர்கள்?

உங்கள் அனுபவங்கள் ஆல்மாவைப் போல் வியத்தகு அல்லது திடீரென்று இல்லாவிட்டாலும் கூட, இரட்சகர் உங்களை மாற்ற அல்லது மீண்டும் பிறக்க உதவும் சில வழிகளைப் பதிவுசெய்ய சிறிது நேரம் ஒதுக்குங்கள். உங்கள் அனுபவங்களைக் கேட்பதால் யார் பயனடையலாம்?

இந்த ஒப்பீடு அவரைப்பற்றி உங்களுக்கு என்ன கற்பிக்கிறது?

மோசியா 27:8–24

தேவன் என் ஜெபங்களைக் கேட்டு அவரது சித்தத்தின்படியும் நேரத்தின்படியும் அவற்றுக்கு பதிலளிப்பார்.

அழிவுகரமான தேர்வுகளை செய்யும் குடும்ப உறுப்பினருடன் மூத்த ஆல்மாவின் சூழ்நிலையில் நீங்கள் இருந்திருக்கலாம். உங்களுக்கு நம்பிக்கை கொடுக்கிற எதை நீங்கள் மோசியா 27:8–24ல் காண்கிறீர்கள்? மற்றவர்களுக்காக, நீங்கள் செய்யும் ஜெபங்களில் இந்த வசனங்கள் எவ்வாறு செல்வாக்கு ஏற்படுத்தலாம்?

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

மோசியா 26:30–31

கர்த்தர் என்னை மன்னிக்க விரும்புகிறார்.

  • மன்னிப்பைப் பற்றி ஆல்மாவுக்கு கர்த்தர் என்ன கற்றுக் கொடுத்தார் என்பதைக் கண்டறிய உங்கள் பிள்ளைகளுக்கு உதவ, மோசியா 26:29–31ஐ வாசிக்கும்படி அவர்களை அழைக்கவும், மேலும் “மன்னிப்பு” என்ற வார்த்தை எத்தனை முறை வருகிறது என்பதைக் கணக்கிடவும். மற்றவர்களை மன்னிப்பது பற்றி இந்த வசனங்கள் என்ன கற்பிக்கின்றன?

  • இரட்சகரின் மன்னிப்பின் எடுத்துக்காட்டை வலியுறுத்த, நீங்கள் அவர் சிலுவையில் இருக்கும் ஒரு படத்தைக் காட்டலாம் மற்றும் லூக்கா 23:33–34ஐ ஒன்றாக வாசிக்கலாம். இயேசு தம்மை சிலுவையில் அறைந்தவர்களுக்கு என்ன செய்யும்படி பரலோக பிதாவிடம் கேட்டார்? இந்த கலந்துரையாடலுக்குப் பிறகு, உங்கள் குழந்தைகள் ஒருவரையொருவர் மன்னித்து நடிக்கலாம்.

  • சில நேரங்களில் நாம் தவறு செய்யும் போது நம்மை மன்னிப்பது கடினம். ஆல்மாவிடம் தேவன் சொன்ன வார்த்தைகள் எப்படி உதவும்? தேவன் தங்களை மன்னிப்பார் என்று நினைக்காத ஒருவரிடம் பேசுவதாக உங்கள் பிள்ளைகள் பாசாங்கு செய்யலாம். மோசியா 26:22–23, 29–30இல் அந்த நபருக்கு உதவக்கூடிய ஒன்றைக் கண்டுபிடிக்க உங்கள் பிள்ளைகளை அழைக்கவும்.

மோசியா 27:8–37

இயேசு கிறிஸ்து அவரைப் போல் அதிகமாக ஆக எனக்கு உதவுவார்.

  • இளைய ஆல்மா மற்றும் மோசியாவின் மகன்களின் மனமாற்றம், இரட்சகரின் வல்லமை எவரையும் மாற்ற முடியும் என்பதை உங்கள் பிள்ளைகளுக்குக் காட்ட முடியும். ஆல்மா மனந்திரும்பி, இயேசு கிறிஸ்து அவனை மனமாற்ற உதவினார் என்று கற்பிக்க, வசனம் 24க்கு சிறப்பு முக்கியத்துவம் கொடுங்கள். உங்கள் பிள்ளைகள் விரும்பினால் கதையை நடிக்க அனுமதிக்கவும்.

படம்
இளைய ஆல்மா அவனது தகப்பனின் வீட்டுக்கு கொண்டுபோகப்படுதல்

(His Father Rejoiced) அவனது தகப்பன் களிகூர்ந்தான் – வால்ட்டர் ரானே

மோசியா 27:8–24

நான் நேசிக்கும் மக்களை தேவன் ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபம் செய்து உபவாசிக்க முடியும்.

  • மோசியா 27:8–24ஐ ஒன்றாகப் படியுங்கள், மேலும் ஆல்மாவும் அவனுடைய மக்களும் இளைய ஆல்மாவுக்கு என்ன செய்தார்கள் என்பதை உங்கள் குழந்தைகளிடம் சொல்லுங்கள். நீங்கள் எப்போதாவது ஒருவருக்காக உபவாசித்து ஜெபித்திருக்கிறீர்களா? உங்கள் குழந்தைகளுடன் உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள், மேலும் அவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளட்டும்.

  • தேவனின் உதவி தேவைப்படும் ஒருவரை உங்களுக்கோ அல்லது உங்கள் பிள்ளைகளுக்கோ தெரியுமா? ஆல்மாவின் முன்மாதிரியைப் பின்பற்றி, அந்த நபருக்காக நீங்கள் ஒன்றாக ஜெபிக்கலாம், உங்கள் பிள்ளைகளால் முடிந்தால் அவர்களுக்காகவும் உபவாசிக்கலாம்.

படம்
இளைய ஆல்மாவுக்கு தூதன் தரிசனமாதல்

இளைய ஆல்மாவுக்கு ஒரு தூதன் தரிசனமாதலின் விளக்கப்படம் – கெவின் கீலி

அச்சிடவும்