என்னைப் பின்பற்றி வாருங்கள் 2024
செப்டம்பர் 16–22: “உன் தலையை உயர்த்தி களிகூருவாயாக” 3 நேபி 1–7


செப்டம்பர் 16–22: “உன் தலையை உயர்த்தி களிகூருவாயாக” 3 நேபி 1-7,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— வீடு மற்றும் சபைக்காக: மார்மன் புஸ்தகம் 2024 (2023)

“செப்டம்பர் 16–22. 3 நேபி 1–7,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—வீடு மற்றும் சபைக்காக: 2024(2023)

படம்
இரவு இல்லாத நாளை நேபியர் காணுதல்

One Day, One Night, and One Day (ஒரு நாள், ஒரு இரவு, ஒரு நாள்) – ஜோர்ஜ் கோக்கோ

செப்டம்பர் 16–22: “உன் தலையை உயர்த்தி களிகூருவாயாக”

3 நேபி 1–7

சிலவழிகளில், இயேசு கிறிஸ்துவில் ஒரு விசுவாசியாயிருக்க அது ஒரு அற்புதமான நேரமாயிருந்தது. தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின, சீக்கிரத்திலேயே இரட்சகர் பிறப்பார் என்று ஜனங்களுக்கு மத்தியில் பெரிய அடையாளங்களும் அற்புதங்களும், குறிப்பிட்டன. மறுபுறம், அனைத்து அற்புதங்கள் நடந்தபோதிலும், இரட்சகர் பிறப்பதற்கு “காலம் கடந்துபோயிற்று” (3 நேபி 1:5) என அவிசுவாசிகள் வலியுறுத்தினதால் இது ஒரு கவலையளிக்கும் நேரமாகவுமிருந்தது. இந்த ஜனங்கள் “தேசமெங்கும் கலகம் உண்டாக்கினார்கள்” (3 நேபி 1:7) மற்றும் லாமானியனான சாமுவேல் தீர்க்கதரிசனமுரைத்த அடையாளமான, இருளில்லாத ஒரு இரவு தோன்றவில்லை என்றால் விசுவாசிகள் அனைவரையும் கொன்றுபோடவும் நாள் குறித்தார்கள்.

இந்த சோதனையான சூழ்நிலையில் தீர்க்கதரிசி நேபி, “தன் ஜனத்துக்காக தன் தேவனிடத்தில் ஊக்கமாய்க் கூக்குரலிட்டான்” (3 நேபி 1:11). துன்புறுத்தலை அல்லது சந்தேகத்தை சந்திக்கிற யாருக்கும், வெளிச்சம் இருளை மேற்கொள்ளும் என்றறிய தேவையானவர்களுக்கும் கர்த்தருடைய பதில் உணர்த்துலாயிருக்கிறது: “உன் தலையை உயர்த்தி களிகூருவாயாக; … என்னுடைய பரிசுத்த தீர்க்கதரிசிகளின் நாவால் பேசப்படும்படி நான் செய்த சகலத்தையும் நான் நிறைவேறப்பண்ணுவேன்” (3 நேபி 1:13).

வீட்டிலும் சபையிலும் கற்றுக்கொள்வதற்கான ஆலோசனைகள்

3 நேபி 1–7

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்துக்கு மாறுவதற்கு பொறுமையும் முயற்சியும் தேவை.

3 நேபி 1–7 கர்த்தரிடத்தில் மனமாற்றப்பட்ட மக்களையும் அல்லாத பிறரையும் விவரிக்கிறது. இந்த குழுக்களுக்கு இடையேயான வித்தியாசம் என்ன? உங்கள் சிந்தனைகளை ஒழுங்குபடுத்த பின்வரும் அட்டவணையைப் போன்ற ஒன்று உங்கள் எண்ணங்களை ஒழுங்கமைக்க உதவ முடியும்:

மனமாற்றத்தை பலவீனப்படுத்தும் விஷயங்கள்

மனமாற்றத்தை வலுப்படுத்தும் விஷயங்கள்

3 நேபி 1:5–11

தீர்க்கதரிசியின் வார்த்தைகளை நம்பாமல், நீதிமான்களை கேலி செய்வது

தீர்க்கதரிசியின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து உதவிக்காக ஜெபித்தல்

3 நேபி 1:29–30

3 நேபி 2:1–3

3 நேபி 3:12–16

3 நேபி 4:8–10, 30–33

3 நேபி 6:13–18

3 நேபி 7:15–22

நீங்கள் படிக்கும்போது தனிப்பட்ட கேள்விகளைக் கேட்கவும் உதாரணமாக, இந்த விளக்கப்படத்தை முடிக்கும்போது, “எனக்கான பாடம் இங்கே என்ன உள்ளது?” போன்ற கேள்விகளை நீங்கள் கேட்கலாம். இது பரிசுத்த ஆவியின் உள்ளுணர்வுகளை அழைக்கும்.

3 நேபி 1:1–23

படம்
seminary icon
இயேசு கிறிஸ்துவினிமித்தம், “நான் திடன்கொள்ள முடியும்”.

உங்கள் வாழ்க்கையில் கடினமான, பயமுறுத்தும் தருணங்கள் இருக்கும் என்பதை உங்கள் பரலோக பிதா அறிந்திருக்கிறார். ஆனால் நீங்கள் மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். விசுவாசமிக்க நேபியர்கள் பயப்பட வேண்டியதற்கான காரணங்களைப் பற்றி அறிய 3 நேபி 1:1–23 படியுங்கள். “திடன்கொண்டிருக்க” கர்த்தர் அவர்களுக்கு என்ன காரணத்தைக் கொடுத்தார்?

உதாரணமாக, மத்தேயு 14:24–27; யோவான்16:33; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 61:36; 78:17–19ல் இரட்சகர் பல சந்தர்ப்பங்களில் “திடன்கொண்டிருங்கள்” என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியுள்ளார் . இந்த அழைப்புகளில் உங்களைக் கவர்வது என்ன? இரட்சகர் இந்த வார்த்தைகளைச் சொன்ன சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ள நீங்கள் சுற்றியுள்ள வசனங்களைப் படிக்கலாம். ஒவ்வொரு விஷயத்திலும், மக்கள் தங்கள் பயத்தை எதிர்கொள்ள என்ன காரணங்களைக் கூறினார்? இதை அவர் உங்களுக்கு எவ்வாறு செய்தார்?

எந்தவொரு சூழ்நிலையிலும் மகிழ்ச்சியைக் கண்டறிவது பற்றி தலைவர் நெல்சன் உங்களுக்கு என்ன கற்பிக்கிறார்? தலைவர் நெல்சன் கவனம் என்ற வார்த்தையை எத்தனை முறை பயன்படுத்துகிறார் என்பதைக் கவனியுங்கள். ஒருவேளை நீங்கள் கேமரா அல்லது மற்ற உருப்பெருக்கியை போகஸ் செய்வதை இயேசு கிறிஸ்துவின் மீது கவனம் செலுத்துவதுடன் ஒப்பிடலாம். நீங்கள் எப்படி அவர் மீது கவனம் செலுத்துவீர்கள்?

3 நேபி 1:4–21; 5:1–3

அவருடைய சகல வார்த்தைகளையும் கர்த்தர் நிறைவேற்றுவார்.

3 நேபி 1:4–7 வாசித்து, நீங்கள் விசுவாசிகளில் ஒருவராக இருந்தால் நீங்கள் எப்படி உணர்ந்திருப்பீர்கள் என்று சிந்தியுங்கள். தங்கள் விசுவாசத்தை வலுவாக வைத்திருக்க அவர்கள் என்ன செய்தார்கள்? (3 Nephi 1:4–21 மற்றும் 5:1–3 பார்க்கவும்). சாமுவேலின் வார்த்தைகள் எப்படி நிறைவேறின? (3 நேபி 1:19–21 பார்க்கவும்). கர்த்தர் உங்கள் வாழ்க்கையில் அவருடைய வார்த்தைகளை எவ்வாறு நிறைவேற்றியிருக்கிறார்

3 நேபி 1:4–15; 5:12–26; 6:10–15; 7:15–26

நான் இயேசு கிறிஸ்துவின் சீஷன்

மார்மன் அறிவித்தான், “இதோ, இயேசு கிறிஸ்துவின் சீஷன் நான்.” (3 நேபி 5:13). உங்களுக்கு இந்த சொற்றொடர் என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது? 3 நேபி 1:4–15; 5:12–26; 6:10–15; மற்றும் 7:15–26,ல் கிறிஸ்துவின் சீஷர்களின் குணங்கள், நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளைத் தேடுவதைக் கருத்தில் கொள்ளவும்.

3 நேபி 2:11–12; 3:1–26

நான் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும்போது, நான் பயப்படத் தேவையில்லை.

கொள்ளையர்களின் குழுக்களுடன் நேபியர்களின் அனுபவம் நீங்கள் எதிர்கொள்ளும் ஆவிக்குரிய ஆபத்துகளுக்கு உதவும் பாடங்களைக் கொண்டிருக்கலாம். 3 நேபி 2:11–12 மற்றும் 3:1–26 நீங்கள் வாசிக்கும்போது இந்த பாடங்களை தேடுங்கள். உதாரணமாக, 3 நேபி 3:2–10ல் உள்ள கிதியான்கியின் வார்த்தைகளை நீங்கள் தேடலாம், மற்றும் அவற்றை சாத்தான் உங்களை ஏமாற்ற முயற்சிக்கும் வழிகளுடன் ஒப்பிடலாம். லாசோனியஸ் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளுகிறீர்கள்?

பிள்ளைகளுக்கு போதிப்பதற்கான ஆலோசனைகள்

3 நேபி 1:4–15, 19–21

இயேசு கிறிஸ்து பிறந்தபோது ஒரு புதிய நட்சத்திரம் தோன்றியது.

3 நேபி 1:4–21

தீர்க்கதரிசிகளின் வார்த்தைகள் எப்போதும் நிறைவேறும்.

  • நீங்களும் உங்கள் பிள்ளைகளும் 3 நேபி 1:4–10ஐ வாசிக்கும்போது, அந்தக் காலத்தில் வாழ்ந்த விசுவாசிகளில் ஒருவராக எப்படி உணர்ந்திருப்பார் என்பதைப் பற்றி பேச அவர்களை அழைக்கவும். பின்னர், அவர்கள் 11–15 வசனங்களில் மீதமுள்ள விவரத்தைப் படிக்கும்போது, ​​இந்த வாக்கியத்தை நிறைவு செய்வதற்கான வழிகளை அவர்கள் பரிந்துரைக்கலாம்: “இந்தக் கதையின் பாடம் எனக்கு …”

  • தேவன் தம்முடைய தீர்க்கதரிசியின் மூலம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய மற்ற நேரங்களைப் பற்றி சிந்திக்க உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு உதவலாம். தேவனுடைய வாக்குறுதிகள் எப்படி நிறைவேற்றப்பட்டன என்பது உட்பட இந்தக் கதைகளைப் பற்றி தங்களுக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்துகொள்ளட்டும். 3 நேபி 1:20ஐ ஒன்றாக வாசித்து, இந்த சத்தியங்களைப் பற்றிய உங்கள் சொந்த சாட்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

3 நேபி 2:11–12; 3:13–14, 24–26

நாம் ஒன்று கூடும் போது பலமாக இருக்கிறோம்.

  • நேபியர்கள் ஏன் ஒன்று கூடினர் மற்றும் 3 நேபி 2:11–12 மற்றும் 3:13–14, 24–26ல் அவர்களுக்கு வந்த ஆசீர்வாதங்களைக் கண்டறிய உங்கள் பிள்ளைகளுக்கு உதவுங்கள். இன்று நாம் நம் குடும்பங்களிலும் சபையிலும் கூடுவது ஏன் முக்கியம்?

  • ஒற்றுமையின் வலிமையைப் பற்றி கற்பிக்கும் ஒரு பொருள்சார் பாடம்பற்றி உங்களுக்குத் தெரியுமா? உங்கள் பிள்ளைகள் ஒரு குச்சியை உடைக்க முயற்சி செய்யலாம், பின்னர் ஒரு கட்டு குச்சிகளை உடைக்கலாம் அல்லது ஒரு துண்டு காகிதத்தை பின்னர் காகிதக்கத்தையை கிழிக்கலாம் . நாம் எப்படி குச்சிகள் அல்லது காகிதங்கள் போன்றவர்கள்?

3 நேபி 5:12–26; 6:14; 7:15–26

நான் இயேசு கிறிஸ்துவின் சீஷன்.

  • 3 நேபி 5:13ஐ ஒன்றாக வாசித்த பிறகு, “நான் இயேசு கிறிஸ்துவின் சீஷன்” என்ற சொற்றொடரை மீண்டும் சொல்ல உங்கள் குழந்தைகளை அழைக்கவும். இயேசு கிறிஸ்துவின் சீஷராக இருப்பதன் அர்த்தம் என்ன என்பதை அறிய, இந்த உதாரணங்களில் சிலவற்றை ஒன்றாக வாசியுங்கள்: மனமாறிய லாமானியர்கள் (3 நேபி 6:14 பார்க்கவும்), மார்மன் (3 நேபி 5:12–26 பார்க்கவும்), மற்றும் நேபி (3 நேபி 7:15–26 பார்க்கவும்).

  • ஒரு துண்டு காகிதத்தில், உங்கள் பிள்ளைகள் தங்கள் கையை தடமெடுக்க உதவுங்கள் மற்றும் தடத்தை வெட்டவும். “நான் இயேசு கிறிஸ்துவின் சீஷன்” என்று ஒரு பக்கத்தில் எழுதி, மறுபுறம் ஒரு சீஷனாக இருக்க அவர்கள் செய்யக்கூடிய ஒன்றை வரைய அவர்களை அழைக்கவும்.

படம்
இரவு இல்லாத நாளை நேபியர் கண்டனர்

A Day, a Night, and a Day (ஒரு நாள், ஒரு இரவு, ஒரு நாள்) – வால்டர் ரானே

அச்சிடவும்