பழைய ஏற்பாடு 2022
பெப்ருவரி 21–27. ஆதியாகமம் 24–27: உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டது


“பெப்ருவரி 21–27. ஆதியாகமம் 24–27: உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டது” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“பெப்ருவரி 21–27. ஆதியாகமம் 24–27” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

படம்
ரெபேக்காள்

ரெபெக்காளின் விளக்கப்படம்–டில்லீன் மார்ஷ்

பெப்ருவரி 21–27

ஆதியாகமம் 24–27

உடன்படிக்கை புதுப்பிக்கப்பட்டது

நீங்கள் ஆதியாகமம் 24–27 வாசிக்கும்போது, நீங்கள் பெறும் ஆவிக்குரிய பிரகாரமான உள்ளுணர்வுகளுக்கு கவனம் செலுத்துங்கள். நீங்கள் கண்டறிந்த கொள்கைகள் உங்கள் வாழ்க்கைக்கு எவ்வாறு பொருத்தமாயிருக்கின்றன என்பதை அறிய ஜெபியுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவு செய்யவும்

ஆபிரகாமுடனான தேவனின் உடன்படிக்கை ஆபிரகாமின் மற்றும் அவனுடைய சந்ததி மூலமாக “பூமியின் சகல குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்படும்” ( ஆபிரகாம் 2:11 ). இது ஒரு தலைமுறையில் நிறைவேற்றப்படக்கூடிய ஒரு வாக்குறுதி அல்ல: வேதாகமானது, பல வழிகளில், தேவனின் வாக்குறுதியை தொடர்ந்து நிறைவேற்றுவதற்கான கதை. ஈசாக்கு மற்றும் ரெபெக்காளின் குடும்பத்தினருடனான உடன்படிக்கையை புதுப்பிப்பதன் மூலம் அவர் தொடங்கினார். அவர்களின் அனுபவங்களின் மூலம், உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இருப்பதைப்பற்றி நாம் ஏதாவது கற்றுக்கொள்கிறோம். தயவு, பொறுமை மற்றும் தேவனின் வாக்களிக்கப்பட்ட ஆசீர்வாதங்களில் நம்பிக்கை ஆகியவற்றைப்பற்றி அவர்களின் எடுத்துக்காட்டுகள் நமக்குக் கற்பிக்கின்றன. நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் தேவனின் ஆசீர்வாதங்களை வரும் தலைமுறைகளில் பெறுவதற்காக எந்தவொரு உலகப்பிரகார “கூழையும்” (ஆதியாகமம் 25:30) விட்டுவிடுவது தகுதியானது என்பதை நாங்கள் கற்கிறோம்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

ஆதியாகமம் 24

தேவனின் நித்திய திட்டத்துக்கு திருமணம் இன்றியமையாதது.

இன்று பலர் திருமணத்தை குறைந்த முன்னுரிமையாக ஆக்குகிறார்கள் அல்லது அதை ஒரு சுமையாக கருதுகின்றனர். ஆபிரகாமுக்கு வித்தியாசமான கண்ணோட்டம் இருந்தது, அவனுக்கு, தன் குமாரனாகிய ஈசாக்கின் திருமணம் மிக முக்கியமானதாக இருந்தது. அது அவனுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது என்று ஏன் நினைக்கிறீர்கள்? நீங்கள் ஆதியாகமம் 24 வாசிக்கும்போது, தேவனின் இரட்சிப்பின் திட்டத்தில் திருமணத்தின் முக்கியத்துவத்தைப்பற்றி சிந்தியுங்கள். “Why Marriage, Why Family” (Liahona, May 2015, 50–53) எனும் மூப்பர் டி. டாட் கிறிஸ்டாபர்சனின் செய்தியை நீங்கள் வாசித்து,”ஒரு ஆண் பெண்ணின் திருமணத்தின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு குடும்பம் தேவனின் திட்டம் நன்கு செயல்பட சிறந்த பின்னணியை அளிக்கிறது” ( பக்கம் 52).

பின்வருவது போன்ற கேள்விகள் இந்த அதிகாரத்தில் உள்ள பிற முக்கிய கொள்கைகளைக் கருத்தில்கொள்ள உங்களுக்கு உதவக்கூடும்:

ஆதியாகமம் 24:1–14. ஈசாக்கிற்கு ஒரு மனைவியைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் கர்த்தரைச் சேர்க்க ஆபிரகாமும் அவனுடைய வேலைக்காரனும் என்ன செய்தார்கள்?

ஆதியாகமம் 24:15–28, 55–60. நீங்கள் பின்பற்ற விரும்பும் ரெபேக்காளிடம் என்ன குணங்களை நீங்கள் காண்கிறீர்கள்?

என்ன பிற உள்ளுணர்வுகளை நீங்கள் காண்கிறீர்கள்?

கோட்பாடும் உடன்படிக்கைகளும் 131: 1–4 ; “ குடும்பம்: உலகிற்கு ஓர் பிரகடனம் ,” ChurchofJesusChrist.org ஐயும் பார்க்கவும்.

ஆதியாகமம் 25:29–34

உடனடி மனநிறைவு மற்றும் அதிக மதிப்புள்ள காரியங்களுக்கு இடையில் நான் தேர்ந்தெடுக்கலாம்.

ஆபிரகாமின் கலாச்சாரத்தில், ஒரு குடும்பத்தில் மூத்த குமாரன் பொதுவாக சேஷ்டபுத்திர பாகம் என்று அழைக்கப்படும் தலைமை மற்றும் சிலாக்கியங்களின் நிலையைக் குறிப்பாகப் பெறுவான். இந்த குமாரன் குடும்பத்தின் மற்றவர்களை கவனித்துக்கொள்வதற்கான அதிக பொறுப்புகளுடன், தனது பெற்றோரிடமிருந்து அதிக சுதந்தரம் பெற்றான்.

ஆதியாகமம் 25: 29–34 நீங்கள் வாசிக்கும்போது, ஒரு உணவுக்கு ஈடாக ஏசா ஏன் தனது சேஷ்ட புத்திர பாகத்தை விட்டுக்கொடுக்க தயாராக இருந்திருக்கிறான் என்பதைக் கருத்தில் கொள்ளவும். இந்த விவரத்தில் நீங்களாகவே என்ன பாடங்களை நீங்கள் கண்டுபிடித்தீர்கள்? உதாரணமாக, உங்களுக்கு மிகவும் மதிப்புமிக்க ஆசீர்வாதங்களிலிருந்து உங்களைத் திசைதிருப்பும் ஏதேனும் “கூழ்” இருக்கிறதா? இந்த ஆசீர்வாதங்களில் கவனம் செலுத்துவதற்கும் பாராட்டுவதற்கும் நீங்கள் என்ன செய்கிறீர்கள்?

மத்தேயு 6: 19–33 ; 2 நேபி 9:51 ; M. Russell Ballard, “What Matters Most Is What Lasts Longest,” Liahona, Nov. 2005, 41–44 ஐயும் பார்க்கவும்.

ஆதியாகமம் 26:1–5

ஆபிரகாமிய உடன்படிக்கை ஈசாக்கு மூலம் புதுப்பிக்கப்பட்டது.

தேவன் ஆபிரகாமுடன் செய்த உடன்படிக்கை பல தலைமுறைகளாக தொடர வேண்டும் எனும் நோக்கமுடையது, எனவே ஆபிரகாம் மற்றும் சாராளின் உடன்படிக்கை காக்கும் மரபு ஈசாக்கு, யாக்கோபு மற்றும் பிற விசுவாசமுள்ள பெண்கள் மற்றும் ஆண்களுக்கும் அவர்களின் சந்ததியினருக்கும் கடத்தப்பப்பட வேண்டும். நீங்கள் ஆதியாகமம் 26: 1–5 வாசிக்கும்போது, தேவன் குறிப்பிட்டுள்ள உடன்படிக்கையின் சில ஆசீர்வாதங்களைத் தேடுங்கள். இந்த வசனங்களிலிருந்து இயேசு கிறிஸ்துவைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக் கொள்ளுகிறீர்கள்?

ஆதியாகமம் 26: 18–25, 32–33

இயேசு கிறிஸ்துவே ஜீவ தண்ணீரின் கிணறு.

கிணறுகள் மற்றும் நீரூற்றுகள் மற்றும் பிற நீர் ஆதாரங்கள் பல பழைய ஏற்பாட்டு கதைகளில் முக்கிய பங்கு வகிப்பதை நீங்கள் கவனிக்கலாம். இது ஆச்சரியமல்ல, ஏனென்றால் இந்த கதைகளில் பெரும்பாலானவை மிகவும் வறண்ட இடங்களில் நடந்தன. ஈசாக்கின் கிணறுகளைப்பற்றி ஆதியாகமம் 26 ல் நீங்கள் வாசிக்கும்போது, வேதங்களில் என்ன தண்ணீரைக் குறிக்கலாம் என்று சிந்தியுங்கள். ”ஜீவ தண்ணீரின்” ஆவிக்குரிய கிணறுகளைப்பற்றி நீங்கள் என்ன உள்ளுணர்வுகளைக் காண்கிறீர்கள்? ( யோவான் 4: 10–15 பார்க்கவும்). உங்கள் வாழ்க்கையில் ஆவிக்குரிய கிணறுகளை எவ்வாறு தோண்டுகிறீர்கள்? இரட்சகர் உங்களுக்கு எப்படி ஜீவ தண்ணீர் போன்றிருக்கிறார்? பெலிஸ்தர்கள் கிணறுகளை “தூர்த்துப்போட்டார்கள்” என்பதை கவனிக்கவும் (ஆதியாகமம் 26:18 பார்க்கவும்). உங்கள் வாழ்க்கையில் ஜீவ தண்ணீரின் கிணறுகளை நிறுத்தும் ஏதாவது உள்ளதா?

படம்
ஒரு பழங்கால கிணறு

பூர்வகால பெயர்-செபாவில் ஒரு கிணறு, அங்கு ஆபிரகாமும் ஈசாக்கும் கிணறுகளை தோண்டினர்.

ஆதியாகமம் 27

ஈசாக்கை ஏமாற்றியதில் ரெபேக்காளும் யாக்கோபும் தவறு செய்தார்களா?

யாக்கோபுக்கு ஆசீர்வாதம் பெற ரெபேக்காளும் யாக்கோபும் பயன்படுத்திய அணுகுமுறையின் பின்னாலுள்ள காரணங்கள் நமக்குத் தெரியாது. இப்போது நாம் வைத்திருக்கும் பழைய ஏற்பாட்டில் இருப்பது முழுமையானதல்ல என்பதை நினைவில் கொள்வது உதவியாக இருக்கும் (மோசே 1: 23, 41 பார்க்கவும்). நமக்கு தொந்தரவாகத் தோன்றும் விஷயங்களை விளக்கும் அசல் பதிவுகளிலிருந்து தகவல்கள் காணாமற்போயிருக்கலாம். ஆயினும், ஈசாக்கிடமிருந்து ஆசீர்வாதம் பெறுவது தேவ சித்தம் என்பதை நாம் அறிவோம், ஏனென்றால் யாக்கோபு ஏசாவை ஆளுகை செய்ய வேண்டும் என்று ரெபேக்காளுக்கு ஒரு வெளிப்பாடு இருந்தது (ஆதியாகமம் 25:23 பார்க்கவும் ). {ஏசாவுக்குப் பதிலாக யாக்கோபை ஆசீர்வதித்ததாக ஈசாக்கு ஒப்புக்கொண்ட பிறகு, தேவ சித்தம் நிறைவேறியதாகக் கூறி யாக்கோபு “ஆசீர்வதிக்கப்படுவான்” என உறுதியளித்தான்( ஆதியாகமம் 27:33 ).

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

ஆதியாகமம் 24:2–4, 32–48.ஆபிரகாம் ஒரு நம்பகமான வேலைக்காரனிடம் ஈசாக்கிற்கு ஒரு மனைவியைக் கண்டுபிடிக்கும்படி கேட்டான், அந்த வேலைக்காரன் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்தான். ஆபிரகாமின் வேலைக்காரன் தனது உடன்படிக்கையை கடைப்பிடிப்பதில் எவ்வாறு விசுவாசத்தைக் காட்டினான்? அவனது எடுத்துக்காட்டை நாம் எப்படி பின்பற்றலாம்?

ஆதியாகமம் 24:15–28, 55–60.ரெபேக்காளை ஈசாக்கிற்கு தகுதியான நித்திய துணையாக்கிய பண்புகளுக்காக உங்கள் குடும்பத்தினர் இந்த வசனங்களில் தேடலாம். அவர்கள் மேம்படுத்த வேண்டும் என்று அவர்கள் நினைக்கும் இந்த பண்புகளில் ஒன்றை குடும்ப அங்கத்தினர்கள் ஒன்றை தேர்வு செய்ய ஊக்குவிக்கவும்.

ஆதியாகமம் 25:19–3427.அதற்குப் பதிலாக ஏசாவின் சேஷ்ட புத்திர பாகம் மற்றும் ஆசீர்வாதம் யாக்கோபுக்கு எப்படி வந்தது என்ற கதைகளை மறுபரிசீலனை செய்ய, “யாக்கோபு மற்றும் ஏசா” (பழைய ஏற்பாட்டு கதைகள் ) ஆகியவற்றிலிருந்து தனித்தனி துண்டுகளில் நீங்கள் வாக்கியங்களை எழுதலாம். வாக்கியங்களை சரியான வரிசையில் வைக்க குடும்ப அங்கத்தினர்கள் ஒன்றிணைந்து செயல்படலாம்.

ஏசா தனது சேஷ்டபுத்திர பாகத்தை விற்பதைப்பற்றி நீங்கள் விவாதிக்கும்போது, பரலோக பிதாவுடனும் இயேசு கிறிஸ்துவுடனான உங்கள் உறவுகள் போன்ற உங்கள் குடும்பத்திற்கு மிகவும் முக்கியமானது என்ன என்பதையும் நீங்கள் பேசலாம். ஒருவேளை குடும்ப அங்கத்தினர்கள் நித்திய மதிப்பு என்று கருதும் பொருட்களை அல்லது படங்களை அவர்கள் காணலாம். அவர்கள் ஏன் அந்த காரியங்களைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை அவர்கள் விளக்கட்டும்.

ஆதியாகமம் 26:3–5.ஆபிரகாமிய உடன்படிக்கையைப் புரிந்துகொள்ள உங்கள் குடும்பத்திற்கு உதவ, இந்த வசனங்களில் விவரிக்கப்பட்டுள்ள வாக்குத்தத்தங்களைக் கண்டுபிடிக்க அவர்களை அழைக்கலாம். இந்த வாக்குறுதிகளைப்பற்றி இன்று நாம் அறிந்து கொள்வது ஏன் முக்கியம்? (“Thoughts to Keep in Mind: The Covenant,” இந்த ஆதாரங்களில் பார்க்கவும்).

ஆதியாகமம் 26:18–25, 32–33.கிணறுகள் ஏன் முக்கியம்? இயேசு கிறிஸ்து எவ்வாறு தண்ணீர் கிணறு போல இருக்கிறார்?

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில்,என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காகவில் பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “Choose the Right,” Hymns, no. 239.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

ஒரு வேத வசனத்தை மனப்பாடம் செய்யுங்கள். மூப்பர் ரிச்சர்ட் ஜி. ஸ்காட் போதித்தார், “மனப்பாடம் செய்த ஒரு வேதபகுதி காலத்தால் பலவீனம் அடையாத ஒரு இணை பிரியா நண்பன் ஆகிறது” (“The Power of Scripture,” Liahona, Nov. 2011, 6)

படம்
ஏசாவும் யாக்கோபுவும்

ஏசா தனது சேஷ்ட புத்திர பாகத்தை யாக்கோபுக்கு விற்கிறான்–க்ளென் எஸ். ஹாப்கின்சன்

அச்சிடவும்