பழைய ஏற்பாடு 2022
நவம்பர் 21–27. யோனா; மீகா; “அவர் கிருபைசெய்ய விரும்புகிறார்”


“நவம்பர் 21–27. யோனா; மீகா; ‘அவர் கிருபைசெய்ய விரும்புகிறார்’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022(2021)

“நவம்பர் 21–27. யோனா; மீகா,” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

படம்
மனிதன் பின்னால் கடலில் திமிங்கலம் இருக்க, அவன் கடற்கரையில் ஊர்ந்து செல்லுதல்

நினிவே கடற்கரையில் யோனா–டானியல் ஏ. லீவிஸ்

நவம்பர் 21–27

யோனா; மீகா

“அவர் கிருபைசெய்ய விரும்புகிறார்”

உங்கள் எண்ணங்களை நீங்கள் பதிவுசெய்யும்போது, யோனாவிலும் மீகாவிலும் உள்ள கொள்கைகள் நீங்கள் வேதங்களில் கற்றுக்கொண்ட விஷயங்களுடன் எவ்வாறு தொடர்புபடுகின்றன என்பதைப்பற்றி சிந்தியுங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

யோனா தர்ஷீசுக்குப் போகும் கப்பலில் இருந்தான். தர்ஷீசுக்குப் பயணம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை, அது நினிவேவிலிருந்து வெகு தொலைவில் உள்ளது, தவிர, தேவனின் செய்தியை வழங்க யோனா செல்ல வேண்டும். ஆகவே, கப்பல் ஒரு பெரிய புயலை எதிர்கொண்டபோது, அது தன் கீழ்ப்படியாமையினிமித்தம்தான் என யோனாவுக்குத் தெரியும். யோனாவின் வற்புறுத்தலின் பேரில், அவனது சக பயணிகள் புயலை நிறுத்த அவனை கடலின் ஆழத்தில் தள்ளினர். இது யோனா மற்றும் அவனுடைய ஊழியத்தின் முடிவும்போல் இருந்தது. ஆனால் நினிவேயின் ஜனத்தை கர்த்தர் கைவிடாதது போலவும், நம்மில் எவரையும் அவர் கைவிடாதது போலவும், கர்த்தர் யோனாவைக் கைவிடவில்லை. மீகா போதித்தபடி, கர்த்தர் நம்மைக் கண்டனம் செய்வதில் மகிழ்ச்சியடையவில்லை, ஆனால் “அவர் கிருபை செய்ய விரும்புகிறார்.” நாம் அவரிடம் திரும்பும்போது, “அவர் மீண்டும் திரும்புவார், அவர் நம்மீது மனதுருக்கம் கொள்வார்; அவர் நம்முடைய அக்கிரமங்களை அடக்குவார்; [அவர்] நம்முடைய எல்லா பாவங்களையும் கடலின் ஆழத்தில் தள்ளுவார் ”( மீகா 7:18–19).

யோனா மற்றும் மீகா புத்தகங்களைப்பற்றிய மேலோட்டமான பார்வைக்கு,“Jonah” மற்றும் “Micha” in the Bible Dictionary பார்க்கவும்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

யோனா 1–4; மீகா 7:18–19

தம்மிடத்தில் திரும்பும் அனைவருக்கும் கர்த்தர் இரக்கமுள்ளவராயிருக்கிறார்.

நாம் மனந்திரும்பும்போது கர்த்தர் எவ்வளவு இரக்கமுள்ளவராயிருக்கிறார் என்பதை யோனாவின் புத்தகம் காட்டுகிறது. நீங்கள் யோனாவைப் படிக்கும்போது, அவருடைய கிருபைக்கான உதாரணங்களைத் தேடுங்கள். உங்கள் வாழ்க்கையில் அந்த கிருபையை நீங்கள் எவ்வாறு அனுபவித்தீர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். மற்றவர்களிடம் அதிக இரக்கமுள்ளவராக இருக்க உதவும் எதை நீங்கள் கற்றுக்கொள்கிறீர்கள்?

கர்த்தருடைய கிருபைக்கு சாட்சி கொடுப்பது பெரும்பாலும் அன்பு மற்றும் நன்றியுணர்வைத் தூண்டுகிறது. ஆயினும், இஸ்ரவேலின் எதிரிகளாக இருந்த நினிவே மக்களுக்கு கர்த்தர் இரக்கம் காட்டியபோது, யோனா “அதிருப்தி” அடைந்தான், “மிகுந்த கோபமடைந்தான்” (யோனா 4: 1). யோனா ஏன் இந்த வகையில் உணர்ந்திருக்கலாம்? இதைப்போன்றதொரு உணர்வுகள் உங்களுக்கு எப்போதாவது ஏற்பட்டதுண்டா? அதிகாரம் 4ல் யோனாவைப் புரிந்துகொள்ள கர்த்தர் என்ன முயற்சி செய்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

மீகா 7:18–19ல் உள்ள போதனைகளை சிந்தியுங்கள். கர்த்தர் மற்றும் நினிவேயின் ஜனத்தைப்பற்றிய மனநிலையை மாற்ற இந்த சத்தியங்கள் யோனாவுக்கு எவ்வாறு உதவியிருக்கும்?

லூக்கா 15:11–32; Jeffrey R. Holland, “The Justice and Mercy of God,” Ensign, Sept. 2013, 16–21ஐயும் பார்க்கவும்.

படம்
ஆற்றங்கரையில் இருவர் பேசுதல்

தேவனின் பிள்ளைகளுடன் நாம் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளலாம்.

யோனா 1; 3–4

தேவனின் பிள்ளைகள் அனைவரும் சுவிசேஷத்தைக் கேட்க வேண்டும்.

நினிவே அசீரியப் பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது, இஸ்ரவேலின் எதிரி, வன்முறை மற்றும் கொடுமைக்கு பெயர் பெற்றது. யோனாவைப் பொறுத்தவரை, நினிவே மக்கள் தேவனுடைய வார்த்தையை ஏற்றுக்கொண்டு மனந்திரும்ப தயாராக இருக்கிறார்கள் என்பது நடக்கமுடியாததாகத் தோன்றியது. ஆயினும் தலைவர் டாலின் எச். ஓக்ஸ் போதித்ததுபோல: “யார் தயாராக இருக்கிறார்கள், யார் இல்லை என்பதற்கு நீதிபதிகளாக நாம் ஒருபோதும் நம்மை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. கர்த்தர் தம்முடைய எல்லா பிள்ளைகளின் இருதயங்களையும் அறிந்திருக்கிறார், நாம் உணர்த்துதலுக்காக ஜெபித்தால், அவர் ‘வார்த்தையைக் கேட்க ஆயத்தமாக’ இருப்போரை கண்டுபிடிக்க அவர் நமக்கு உதவுவார் (ஆல்மா 32:6)” (“Sharing the Restored Gospel,” Ensign or Liahona, Nov. 2016, 58–59). மாறத் தயாராக இல்லை என்று தோன்றாதவர்களுடன் கூட சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள உங்களைத் தூண்டும் யோனா 3லிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?

யோனாவின் மனநிலையை (யோனா1; 3–4) ஆல்மா மற்றும் மோசியாவின் குமாரர்களின் உணர்ச்சிகளோடு ஒப்பிடுவது உதவிகரமாக இருக்கலாம் (மோசியா 28:1–5; ஆல்மா 17:23–25).

3 நேபி 18:32ஐயும் பார்க்கவும்.

மீகா 4:11–13; 5:8–15; 7:5–7

இயேசு கிறிஸ்து மீகாவின் எழுத்துக்களை மேற்கோள் காட்டினார்.

இரட்சகர் ஏசாயாவையும் சங்கீதத்தையும் மேற்கோள் காட்டினார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் மீகாவையும் பலமுறை மேற்கோள் காட்டினார் என்பது உங்களுக்குத் தெரியுமா? பின்வரும் எடுத்துக்காட்டுகளைக் கவனியுங்கள், இந்த பாகங்கள் இரட்சகருக்கு ஏன் முக்கியமாக இருந்திருக்கலாம் என்று சிந்திப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள். உங்களுக்கு அவை ஏன் முக்கியமானதாயிருக்கிறது?

மீகா 4:11–13 (3 நேபி 20:18–20 பார்க்கவும்.) கர்த்தர் பிற்கால கூடுகையை கோதுமை அறுவடைக்கு ஒப்பிட்டார் (ஆல்மா 26: 5–7 ; கோட்பாடும் உடன்படிக்கைகளும் 11:3–4ஐயும் பார்க்கவும்). இஸ்ரவேலைக் கூட்டிச் சேர்த்தலைப்பற்றி இந்த ஒப்பிடுதல் உங்களுக்கு எதை ஆலோசனையளிக்கிறது?

மீகா 5:8–15 (3 நேபி 21:12–21 பார்க்கவும்). கடைசி நாட்களில் தேவ ஜனத்தைப்பற்றி (“யாக்கோபின் மீதியானோர்”) இந்த வசனங்கள் உங்களுக்கு என்ன பரிந்துரைக்கின்றன?

மீகா 7:5–7 (மத்தேயு 10:35–36 பார்க்கவும்). இந்த வசனங்களின்படி, முதலில் “கர்த்தரை நோக்கி” பார்ப்பது ஏன் முக்கியம்? இந்த ஆலோசனை இன்று ஏன் முக்கியமானதாக இருக்கிறது?

மீகா 6:1–8

“கர்த்தர் உன்னிடம் என்ன கேட்கிறார்?”

“ கர்த்தருடைய சந்நிதியில் வந்து, உன்னதமான தேவனுக்கு முன்பாகப் பணிந்துகொள்வது” எப்படி இருக்கும் என்று கற்பனை செய்ய மீகா நம்மை அழைக்கிறான்( மீகா 6:6). உங்கள் வாழ்க்கையை மதிப்பிடும்போது கர்த்தருக்கு என்ன முக்கியம் என்பதைப்பற்றி வசனங்கள் 6–8 உங்களுக்கு என்ன அறிவுறுத்துகிறது?

மத்தேயு 7:21–23; 25:31–40; Dale G. Renlund, “Do Justly, Love Mercy, and Walk Humbly with God,” Ensign or Liahona, Nov. 2020, 109–12 ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

யோனா 1–4.ஓடிப்போவது போல் நடிப்பது, புயல் நிறைந்த கடல் போல ஒலிப்பது அல்லது ஒரு பெரிய மீனால் விழுங்கப்படுவதைப் போல நடிப்பது போன்ற யோனாவின் கதையைச் சொல்லும் செயல்களை உங்கள் பிள்ளைகள் ரசிக்கலாம் (“Jonah the Prophet” in Old Testament Stories பார்க்கவும்). யோனாவின் அனுபவத்திலிருந்து குடும்ப உறுப்பினர்கள் என்ன கற்றுக்கொள்கிறார்கள் என்று கேளுங்கள். “Follow the Prophet” (Children’s Songbook, 110–11)ல் யோனாவிடமிருந்து ஒரு பாட எடுத்துக்காட்டுக்கு, 7 வது பத்தியைப் பார்க்கவும்.

யோனா 3.சுவிசேஷத்தைப் பகிர்வதுபற்றி யோனா என்ன கற்றுக்கொண்டான்? இயேசு கிறிஸ்துவின் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட சுவிசேஷ செய்தியைக் கேட்பதன் மூலம் யார் ஆசீர்வதிக்கப்படுவார்கள் என்று நமக்கு என்ன தெரியும்?

மீகா 4:1–5.இந்த வசனங்களின்படி, கர்த்தருடைய ஜனத்துக்கு அமைதியையும் செழிப்பையும் தருவது எது? இந்த தீர்க்கதரிசனத்தை நம் வீட்டில் நிறைவேற்ற நாம் என்ன செய்ய முடியும்?

மீகா 5:2.இயேசுவை குழந்தையாக அவரது தாயுடன் இருக்கும் ஒரு படத்தை அறையின் ஒரு பக்கத்திலும் (Gospel Art Book, no.33 பார்க்கவும்) மற்றும் ஞானிகளின் படத்தை மற்றொரு பக்கத்திலும் நீங்கள் காட்சிக்கு வைக்கலாம். மீகா 5:2 மற்றும் மத்தேயு 2:1–6 ஒன்று சேர்ந்து வாசிக்கவும். மீகாவின் தீர்க்கதரிசனம் ஞானிகளுக்கு இயேசுவைக் கண்டுபிடிக்க எப்படி உதவியது? குடும்ப உறுப்பினர்கள் இயேசுவின் படத்திற்கு பக்கத்தில் ஞானிகளின் படத்தை நகர்த்தி வைக்கலாம். உங்கள் குடும்பத்தினரும் “The Christ Child: A Nativity Story” (ChurchofJesusChrist.org) காணொலியைப் பார்த்து ரசிக்கக்கூடும் .

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I’ll Go Where You Want Me to Go,” Hymns, no. 270.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

தேவனுடைய அன்பைக் கண்டடையுங்கள். நீங்கள் வேதங்களைப் படிக்கும்போது, உங்களுக்குத் தெரிந்திருக்கும் தேவ அன்பின் சான்றுகளைக் கவனிப்பதைக் கருத்தில் கொள்ளவும். உதாரணமாக, யோனாவின் கதையில் தேவன் தம்முடைய பிள்ளைகளிடத்தில் அன்பு காட்டியதை தேடுங்கள்.

படம்
மனிதன் படகிலிருந்து கடலுக்குள் வீசப்படுதல்

பட விளக்கம்–கெவின் கார்டன்

அச்சிடவும்