பழைய ஏற்பாடு 2022
டிசம்பர் 5–11. ஆகாய்; சகரியா 1–3; 7–14: “கர்த்தருக்குப் பரிசுத்தம்”


“டிசம்பர் 5–11. ஆகாய்; சகரியா 1–3; 7–14: ‘கர்த்தருக்குப் பரிசுத்தம்,’” என்னைப் பின்பற்றி வாருங்கள்—தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: பழைய ஏற்பாடு 2022 (2021)

“டிசம்பர் 5–11. ஆகாய்; சகரியா 1–3; 7–14,” என்னைப் பின்பற்றி வாருங்கள்— தனிநபர்களுக்கும் குடும்பங்களுக்கும்: 2022

படம்
லாயி ஹவாய் ஆலயம்

லாயி ஹவாய் ஆலயம்

டிசம்பர் 5–11

ஆகாய்; சகரியா 1–3; 7–14

“கர்த்தருக்குப் பரிசுத்தம்”

வேதங்களை வாசித்தல் வெளிப்படுத்தலை அழைக்கிறது. நீங்கள் ஆகாய் மற்றும் சகரியாவைப் படிக்கும்போது பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு வெளிப்படுத்தும் செய்திகளுக்குத் திறந்த மனதுடனிருங்கள்.

உங்கள் எண்ணங்களைப் பதிவுசெய்யவும்

பல தசாப்த கால சிறைவாசத்திற்குப் பிறகு, அநேகமாக தீர்க்கதரிசிகளான ஆகாய் மற்றும் சகரியா உட்பட இஸ்ரவேலர்களில் ஒரு குழு எருசலேமுக்குத் திரும்ப அனுமதிக்கப்பட்டனர். இந்த குழுவில் சிலர் எருசலேம் அழிக்கப்படுவதற்கு முன்பு எப்படி இருந்தார்கள் என்பதை நினைவில் வைத்திருந்தனர். ஒரு காலத்தில் அவர்களின் வீடுகளாகவும், வழிபாட்டுத் தலங்களாகவும், ஆலயமாகவும் இருந்த இடிபாடுகளைப் பார்த்தபோது அவர்களின் உணர்வுகளை கற்பனை செய்து பாருங்கள். இந்த ஆலயம் மீண்டும் கர்த்தருடைய “ஆலயத்தின் முந்தின மகிமையைக் கண்டவர்களுக்கு” (ஆகாய் 2:3) ஒத்திருக்குமா என்று யோசித்தவர்களுக்கு, தீர்க்கதரிசி ஆகாய் கர்த்தருடைய ஊக்க வார்த்தைகளைப் பேசினான்: “திடன்கொள்; தேசத்தின் எல்லா ஜனங்களே, நீங்கள் திடன்கொள்ளுங்கள், வேலையை நடத்துங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் உங்களுடனே இருக்கிறேன், … பயப்படாதேயுங்கள்.” “இந்த ஆலயத்தை மகிமையினால் நிறையப்பண்ணுவேன், … இவ்விடத்திலே சமாதானத்தைக் கட்டளையிடுவேன்.” (ஆகாய் 2:4–5, 7,9.)

ஆனால் அது புனரமைப்புக்கு தேவையான பரிசுத்த ஆலயம் மட்டுமல்ல. பல வழிகளில், தேவனின் ஜனங்கள் ஆன்மீக ரீதியில் பாழடைந்திருந்தனர். ஒரு பரிசுத்த ஜனத்தை மீண்டும் கட்டியெழுப்புவது கற்களை வெட்டுவதை விடவும், கோவில் சுவர் கட்ட அவைகளை சீரமைப்பதை விடவும் அதிகம். இன்று, ஆலயங்கள் “கர்த்தருக்கு பரிசுத்தம்” என்ற கல்வெட்டைக் கொண்டுள்ளன, அந்த வார்த்தைகள் ஒரு கட்டிடத்திற்கு மட்டுமல்ல, வாழ்க்கை முறைக்கும் பொருந்தும். இந்த வார்த்தைகளை “குதிரைகளின் மணிகள்” மற்றும் “எருசலேமில் உள்ள எல்லா பானைகளிலும்” ( சகரியா 14: 20–21) பொறிப்பது, ஒவ்வொரு இருதயத்திலும் பொறிக்கப்பட்டிருந்தால் மட்டுமே உதவியாக இருக்கும். உண்மையான பரிசுத்தத்திற்கு கர்த்தருடைய வார்த்தைகளும் சட்டங்களும் நம்மிடம் “பலிக்க வேண்டும்” ( சகரியா 1: 6), அவருடைய வல்லமையை நம் இயல்புகளை மாற்ற அனுமதிக்கிறது, இதனால் நாம் அவரைப் போல பரிசுத்தமாகிவிடுகிறோம் (லேவியராகமம் 19: 2பார்க்கவும்).

எஸ்றா மற்றும் நெகேமியா புத்தகங்களைப்பற்றிய மேலோட்டமான பார்வைக்கு,“ஆகாய்” மற்றும் “நெகேமியா” in the Bible Dictionary பார்க்கவும்.

படம்
தனிப்பட்ட படிப்பு சின்னம்

தனிப்பட்ட வேதப் படிப்பிற்கான ஆலோசனைகள்

ஆகாய் 1; 2:1–9

“உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பாருங்கள்.”

எருசலேமை மீண்டும் கட்டியெழுப்ப பல முக்கியமான விஷயங்கள் இருந்தன. ஆனால் இஸ்ரவேலர் திரும்பி வந்து சுமார் 15 ஆண்டுகள் கடந்துவிட்டபின், ஆலயத்தை மீண்டும் கட்டியெழுப்ப அதிக முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்பதில் கர்த்தர் அதிருப்தி அடைந்தார் (ஆகாய் 1: 2–5 ; எஸ்றா 4 : 24பார்க்கவும்). ஆகாய் 1; 2: 1–9, நீங்கள் படிக்கும்போது இதுபோன்ற கேள்விகளைக் கருத்தில் கொள்ளுங்கள்: இஸ்ரவேலர் ஆலயத்தை கட்டி முடிக்காததால் என்ன விளைவுகளை சந்தித்தார்கள்? அவருடைய வீட்டைக் கட்டி முடித்தால் கர்த்தர் அவர்களுக்கு என்ன ஆசீர்வாதங்களை வாக்களித்தார்? “உங்கள் வழிகளைக் கருத்தில்கொள்ள” முன்னுரிமைகளைப்பற்றி சிந்திக்கவும், அவற்றை எவ்வாறு கர்த்தருடையவைகளுடன் இணைக்க முடியும் என்பதைப்பற்றியும் சிந்திக்க.

கோட்பாடுகளும் உடன்படிக்கைகளும் 95; Terence M. Vinson, “True Disciples of the Savior,” Ensign or Liahona, Nov. 2019, 9–11 ஐயும் பார்க்கவும்.

சகரியா 1–3; 7–8;14

கர்த்தர் என்னை பரிசுத்தமாக்க முடியும்.

சகோதரி கரோல் எப். மெக்கோன்கி கற்பித்தார்: “பரிசுத்த ஆவியானவரை நமது வழிகாட்டியாக வைத்திருக்கும் தேர்ந்தெடுப்புகளை பரிசுத்த தன்மை செய்கிறது. பரிசுத்தம் நம்முடைய இயல்பான போக்குகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘கர்த்தராகிய கிறிஸ்துவின் பாவநிவர்த்தியின் மூலம் ஒரு பரிசுத்தவானாக’ மாறுகிறது [மோசியா 3:19]. … பரிசுத்தத்திற்கான நமது நம்பிக்கை கிறிஸ்துவையும் அவருடைய கருணையையும் அவருடைய கிருபையையும் மையமாகக் கொண்டுள்ளது,” (“The Beauty of Holiness,” Ensign or Liahona, May 2017, 9–10). இஸ்ரவேலை மேலும் பரிசுத்தமாக்கும்படி கேட்டுக்கொள்கிற, சகரியா தீர்க்கதரிசி மூலம் கொடுக்கப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகளை நீங்கள் படிக்கும்போது இந்த போதனைகளை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்: சகரியா 1:1–6; 3:1–7; 7:8–10; 8:16–17. அவர் அவர்களை பரிசுத்தமாக்கும்படிக்கு கர்த்தர் இஸ்ரவேலிடம் அவ்வாறு செய்யும்படி கேட்டுக்கொண்டதைக் கவனியுங்கள். மேலும் பரிசுத்தராக ஆகுவதற்கு அவர் உங்களுக்கு எவ்வாறு உதவுகிறார்?

சகரியா 2:10–11; 8:1–8; 14:9–11, 20–21 எதிர்கால நாளில் நாம் அனைவரும் கர்த்தருடன் பரிசுத்த நிலையில் வாழும்போது வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை விவரிக்கவும். சகரியாவின் காலத்தில் எருசலேமை மீண்டும் கட்டியெழுப்பியவர்களுக்கு இந்த விளக்கங்கள் எதைக் குறிக்கக்கூடும்? அவை உங்களுக்கு என்ன அர்த்தத்தைக் கொடுக்கிறது?

படம்
எருசலேமுக்குள் இயேசுவின் வெற்றி சிறந்த பிரவேசம்

“ இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.” (சகரியா 9:9). ஜெயப் பிரவேசம்–ஹாரி ஆன்டர்சன்

சகரியா 9:9–11; 11:12–13; 12:10; 13:6–7; 14:1–9

இயேசு கிறிஸ்துதான் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியா.

சகரியாவின் பல எழுத்துக்கள் இயேசு கிறிஸ்துவின் பூலோக ஊழியத்தையும், அவருடைய இரண்டாம் வருகையையும் சுட்டிக்காட்டுகின்றன. சகரியாவிடமிருந்து பின்வரும் தீர்க்கதரிசனங்களை மற்ற வேத புத்தகங்களிலிருந்து தொடர்புடைய பாகங்களுடன் ஒப்பிடுங்கள்:

இந்த பாகங்களைப் படித்தபோது இரட்சகரைப்பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? இந்த பாகங்களைப் புரிந்துகொள்வது உங்களுக்கு ஏன் முக்கியம்?

Guide to the Scriptures, “Messiah” (scriptures.ChurchofJesusChrist.org)ஐயும் பார்க்கவும்.

படம்
குடும்பப் படிப்பு சின்னம்

குடும்ப வேதப் படிப்பு மற்றும் இல்ல மாலைக்கான ஆலோசனைகள்

ஆகாய் 1:2–7.இந்த வசனங்கள், “உங்கள் வழிகளைச் சிந்தித்துப்பார்க்க” உங்கள் குடும்பத்தை தூண்டக்கூடும். குடும்ப உறுப்பினர்கள் வசனம் 6ல் உள்ள சொற்றொடர்களைச் செயல்படுத்தலாம். தேவ காரியங்களை விட உலக விஷயங்களை மதிப்பிடுவதைப்பற்றி இந்த வசனம் என்ன கற்பிக்கிறது? உங்கள் குடும்பத்தின் முன்னுரிமைகள் குறித்து நீங்கள் ஒன்றாக ஆலோசிக்கலாம். “I’m Trying to Be like Jesus” (Children’s Songbook, 78–79)போன்ற பாடல்களைப் பாடுதல், நீங்கள் சிறப்பாகச் செய்கிறவற்றையும், நீங்கள் மேம்படுத்தக்கூடிய பகுதிகளையும் மதிப்பீடு செய்ய உங்கள் குடும்பத்திற்கு உதவக்கூடும்.

ஆகாய் 2:1–9.இந்த வசனங்களை அறிமுகப்படுத்த, புரோவோ சிட்டி சென்டர் ஆலயத்தின் கதையை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம், இது ஒரு அழகிய கூடாரத்திலிருந்து மீண்டும் கட்டப்பட்டது(“Provo City Center Temple Completed,” ChurchofJesusChrist.org காணொலி பார்க்கவும்). உங்கள் குடும்பம் ஆகாய் 2: 1–9 வாசிக்கும்போது, அழிக்கப்பட்ட ஆலயத்தைக் கட்டியெழுப்பும் வேலையைப் போல இருக்கும் நமது வாழ்க்கையில் ஏதாவதை யோசிக்கும்படி குடும்ப உறுப்பினர்களை நீங்கள் கேட்கலாம். சோகம் அல்லது உபத்திரவங்களுக்குப் பிறகு கர்த்தர் நம்மை எவ்வாறு மீண்டும் உருவாக்குகிறார்?

சகரியா 3:1–7.இந்த வசனங்களைப் படிக்கும்போது, உங்கள் குடும்பத்தினருக்கு சில அழுக்கு ஆடைகளைக் காட்டலாம். அழுக்கு உடையில் தேவதூதன் முன் நின்றபோது யோசுவா எப்படி உணர்ந்திருப்பான்? பாவம் எப்படி அழுக்கு உடைகளைப் போன்றது? சகரியா 3:1–7 மன்னித்தலைப்பற்றி நமக்கு என்ன கற்பிக்கிறது? நீங்கள் துணிகளை ஒன்றாக சுத்தம் செய்து, இரட்சகரின் பாவநிவர்த்தியின் சுத்திகரிப்பு வல்லமையைப்பற்றி பேசலாம்.

சகரியா 8:1–8.எருசலேமின் எதிர்காலம் குறித்த சகரியாவின் தரிசனத்தைப்பற்றி நம்மை கவர்வது எது? நமது சமூகத்தில் நாம் காண விரும்பும் எதை அங்கு காணலாம்? இரட்சகரை “[நம்] மத்தியில் குடியிருக்க” நாம் எவ்வாறு அழைக்க முடியும்? (Gary E. Stevenson, “Sacred Homes, Sacred Temples,” Ensign or Liahona, May 2009, 101–3 பார்க்கவும்).

பிள்ளைகளுக்கு போதிக்க கூடுதல் ஆலோசனைகளுக்கு, இந்த வாரக் குறிப்பில், என்னைப் பின்பற்றி வாருங்கள்—ஆரம்ப வகுப்புக்காக பார்க்கவும்.

ஆலோசனையளிக்கப்பட்ட பாடல்: “I’m Trying to Be like Jesus,” Children’s Songbook, 78–79.

தனிப்பட்ட படிப்பை மேம்படுத்துதல்

சுய மதிப்பீட்டிற்கான வாய்ப்புகளை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வேதங்களைப் படிக்கும்போது, பரலோக பிதாவுக்கும் இயேசு கிறிஸ்துவுக்கும் உங்கள் சொந்த உறுதிப்பாட்டைச் சிந்திக்க நீங்கள் அடிக்கடி தூண்டப்படுவீர்கள். நீங்கள் பெறும் எண்ணங்களின்படி செயல்படவும்.

படம்
அமெரிக்காவின் யூட்டாவின் புரோவோவில் உள்ள புரோவோ கூடாரம் எவ்வாறு தீ விபத்தில் அழிக்கப்பட்டு புரோவோ சிட்டி சென்டர் ஆலயமாக மீண்டும் கட்டப்பட்டது என்பதைக் காட்டும் காலவரிசை

அச்சிடவும்