ஐயா, நாங்கள் இயேசுவைப் பார்க்க விரும்புகிறோம்
இயேசுவை அவர் யார் என்பதற்காகப் பார்க்கவும் அவருடைய அன்பை உணரவும் விரும்புகிறோம்.
முகக் குருட்டுத் தன்மை
1945 வசந்த காலத்தில் ஒரு நாள், ஒரு இளைஞன் ஒரு இராணுவ மருத்துவமனையில் கண் விழித்தான். அவன் உயிருடன் இருப்பது அதிர்ஷ்டம்— அவன் காதுக்குப் பின்னால் சுடப்பட்டான், ஆனால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர், இப்போது அவன் சாதாரணமாக நடக்கவும் பேசவும் முடியும்.
துரதிர்ஷ்டவசமாக, புல்லட் அவனது மூளையில், முகங்களை அடையாளம் காணும் பகுதியை சேதப்படுத்தியது. அவன் இப்போது அடையாளம் காணும் எந்த அறிகுறியும் இல்லாமல் தன் மனைவியைப் பார்த்தான்; அவன் தனது தாயை அடையாளம் காண முடியவில்லை. கண்ணாடியில் முகம் கூட அவனுக்கு அந்நியமாக இருந்தது, அது ஆணா அல்லது பெண்ணா என்று அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.1
அவன் முகக் குருடனாக ஆனான்—இது மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிற ஒரு தன்மை.2
கடுமையான முகக் குருடர்கள் விதிகளை மனப்பாடம் செய்வதன் மூலம் மற்றவர்களை அடையாளம் காண முயல்கிறார்கள்—அவர்கள் ஒரு மகளை அவளது தோல்களின் மச்சங்களின் வடிவத்தின் மூலம் அல்லது ஒரு தோழியை அவளது அசையும் நடையால் அடையாளம் காணலாம்.
வளருதல்
இதோ இரண்டாவது கதை, வீட்டிற்கு அருகில் உள்ளது: சிறுவனாக இருந்தபோது, என் அம்மாவை நான் விதியை உருவாக்குபவராக அடிக்கடி பார்த்தேன். நான் எப்போது விளையாடலாம், எப்போது படுக்கைக்குச் செல்ல வேண்டும் அல்லது மோசமாக முற்றத்தில் களை பிடுங்க வேண்டும் என்று அவர் முடிவு செய்தார்.
அவர் வெளிப்படையாக என்னை நேசித்தார். ஆனால் அடிக்கடி மற்றும் நான் வெட்கப்படும்படிக்கு, நான் “அவருக்கு கீழ்ப்படிய வேண்டும்” என்று மட்டுமே அவரை பார்த்தேன்.
பல வருடங்களுக்குப் பிறகுதான் நான் அவரை ஒரு உண்மையான நபராகப் பார்த்தேன். அவருடைய தியாகத்தை நான் ஒருபோதும் கவனிக்காமல் இருந்ததற்காகவும் அல்லது பல வருடங்களாக அவள் அதே இரண்டு பழைய பாவாடைகளை (நான் புதிய பள்ளி ஆடைகளைப் பெற்றபோது) ஏன் அணிந்திருந்தார், அல்லது ஏன் நாள் முடிவில், அவர் மிகவும் சோர்வாக இருந்தார், நான் சீக்கிரம் படுக்கைக்குச் செல்ல வேண்டும் என்று ஆர்வமாக இருந்தார் என்பதைப்பற்றி நினைக்காததற்காகவும் நான் வெட்கப்படுகிறேன்.
நாம் முகக் குருடர்களாக இருக்கலாம்
இந்த இரண்டு கதைகளும் உண்மையில் ஒரே கதை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம்—பல ஆண்டுகளாக, நான் முகக் குருடனாக இருந்தேன். என் அம்மாவை ஒரு உண்மையான பெண்ணாகப் பார்க்கத் தவறிவிட்டேன். நான் அவருடைய விதிகளைப் பார்த்தேன், ஆனால் அவருடைய அன்பைக் காணவில்லை.
இந்த இரண்டு கதைகளையும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஆவிக்குரிய முகக் குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட ஒருவரை (ஒருவேளை நீங்கள் அதில் ஒருவரோ) உங்களுக்குத் தெரியுமா என்று நான் சந்தேகிக்கிறேன்.
தேவனை அன்பான பிதாவாக பார்க்க நீங்கள் போராடலாம். நீங்கள் பரலோகத்தைப் பார்க்கலாம், அன்பு மற்றும் இரக்கத்தின் முகத்தை அல்ல, மாறாக நீங்கள் உங்கள் வழியில் செல்ல வேண்டிய விதிகளின் அடர்த்தியை பார்க்கலாம். ஒருவேளை நீங்கள் தேவன் தம்முடைய பரலோகத்தில் ஆட்சி செய்கிறார், அவருடைய தீர்க்கதரிசிகள் மூலம் பேசுகிறார், உங்கள் சகோதரியை நேசிக்கிறார், ஆனால் அவர் உங்களை நேசிக்கிறாரா என்று ரகசியமாக சந்தேகிக்கலாம்.3 ஒருவேளை நீங்கள் உங்கள் கையில் இரும்பு கம்பியை உணர்ந்திருக்கலாம், ஆனால் அதை வழிநடத்தும் இரட்சகரின் அன்பை இன்னும் உணரவில்லை.4
இப்படிப்பட்டவர்களை உங்களுக்குத் தெரியும் என்று நான் சந்தேகிக்கிறேன், ஏனென்றால் நான் நீண்ட காலமாக இப்படிப்பட்ட ஒருவனாக இருந்தேன்—நான் ஆவிக்குரிய ரீதியில் முகக் குருடனாக இருந்தேன்.
எனது வாழ்க்கை விதிகளைப் பின்பற்றுவது மற்றும் சுருக்கமான தரங்களை அளவிடுவது என்று நினைத்தேன். தேவன் உங்களை முழுமையாக நேசிக்கிறார் என்பதை நான் அறிந்தேன், ஆனால் அதை நானே உணரவில்லை. என் பரலோக பிதாவுடன் இருப்பதைக் காட்டிலும் பரலோகத்திற்குச் செல்வதைப் பற்றி நான் அதிகம் நினைத்தேன் என்று நான் பயப்படுகிறேன்.
நீங்களும் என்னைப் போலவே சில சமயங்களில் உதடுகளை மட்டும் ஒத்திசைக்க முடியும், ஆனால் “அன்பை மீட்டெடுக்கும் பாடலைப்”5 பாடவில்லை என்றால், நாம் என்ன செய்ய முடியும்?
தலைவர் நெல்சன் நமக்கு நினைவூட்டுவது போல் பதில் எப்போதும் இயேசுவே.6 மேலும் இது மிகவும் நல்ல செய்தி.
ஐயா, நாங்கள் இயேசுவைப் பார்க்க விரும்புகிறோம்
யோவானில் நான் விரும்பும் ஒரு சிறிய வசனம் உள்ளது. ஒரு முக்கியமான கோரிக்கையுடன் அவரது சீடரிடம் செல்லும் வெளியாட்களின் குழுவைப் பற்றி இது கூறுகிறது. “ஐயா, நாங்கள் இயேசுவைப் பார்க்க [விரும்புகிறோம்]” என்று அவர்கள் கூறுகிறார்கள்.7
அதைத்தான் நாம் அனைவரும் விரும்புகிறோம்—இயேசுவை அவர் யார் என்பதற்காகப் பார்க்கவும் அவருடைய அன்பை உணரவும் விரும்புகிறோம். சபையில் நாம் செய்யும் பெரும்பாலான காரியங்களுக்கும்—நிச்சயமாக ஒவ்வொரு திருவிருந்து கூட்டத்திற்கும் இதுவே காரணமாக இருக்க வேண்டும். எந்த மாதிரியான பாடம் கற்பிப்பது, எந்த மாதிரியான கூட்டத்தைத் திட்டமிடுவது, உதவிக்காரர்களை விட்டுவிட்டு டாட்ஜ்பால் விளையாடலாமா என்று நீங்கள் யோசித்தால், இந்த வசனத்தை உங்கள் வழிகாட்டியாக எடுத்துக் கொள்ளலாம்: இது மக்கள் இயேசு கிறிஸ்துவைப் பார்க்கவும் நேசிக்கவும் உதவுமா? இல்லையென்றால், வேறு ஏதாவது முயற்சி செய்யலாம்.
நான் ஆவிக்குரியவிதமாக முகக் குருடனாக இருப்பதை உணர்ந்தபோது, நான் விதிகளைப் பார்த்தேன், ஆனால் பிதாவின் இரக்கத்தின் முகத்தைப் பார்க்கவில்லை, அது சபையின் தவறு அல்ல என்று எனக்குத் தெரியும். அது தேவனுடையது அல்ல, எல்லாம் இழக்கப்பட்டுவிட்டது என்று அர்த்தமல்ல; அது நாம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. உயிர்த்தெழுதலின் ஆரம்பகால சாட்சிகள் கூட உயிர்த்தெழுந்த கர்த்தரை அடிக்கடி நேருக்கு நேர் சந்தித்தாலும் அவரை அடையாளம் காணவில்லை; தோட்டக் கல்லறையிலிருந்து கலிலேயா கடற்கரை வரை, அவரது முதல் சீடர்கள், “இயேசு நிற்பதைக் கண்டார்கள், அது இயேசு என்று அறியவில்லை.”8 அவர்கள் அவரை அடையாளம் காண கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது, நாமும் அப்படித்தான்.9
தயாளத்துவம்
நான் ஆவிக்குரியவிதமாக முகக் குருடனாக இருப்பதை உணர்ந்தபோது அவருடைய சீடர்களுக்கு வாக்களிக்கப்பட்ட அன்பினால்—அவர்மீது என் அன்பு மற்றும் என்மீது அவர் கொண்ட அன்பு—நிறைய “இருதயத்தின் முழு ஊக்கத்தோடும்” “அவர் இருக்கிற விதமாகவே அவரைப் பார்த்து இந்த நம்பிக்கைக்காக” ஜெபிக்க வேண்டும் என்ற மார்மனின் அறிவுரையை நான் பின்பற்ற ஆரம்பித்தேன்.10 தேவனை நேசிப்பதற்கான முதல் பெரிய கட்டளையைப் பின்பற்றவும், “எல்லா நித்தியத்தின் முதல் பெரிய சத்தியத்தையும் … தேவன் தம்முடைய முழு இருதயம், ஊக்கம், மனம் மற்றும் வலிமையுடன் நம்மை நேசிக்கிறார்” என்பதை உணர நான் பல ஆண்டுகளாக ஜெபித்தேன்.11
சுவிசேஷங்கள்
நான் நான்கு சுவிசேஷங்களையும் வாசித்தேன், மீண்டும் வாசித்தேன், அவருடைய விதிகளைப் பிரித்தெடுப்பதற்காக அல்ல, மாறாக அவர் யாரை, மற்றும் எதை நேசிக்கிறார் என்பதைப் பார்ப்பதற்காக. மேலும், காலப்போக்கில், அவரிடமிருந்து பாயும் அன்பின் நதியால் நான் அடித்துச் செல்லப்பட்டேன்.
இயேசு ஆரம்பத்திலேயே “உள்ளம் உடைந்தவர்களைக் குணப்படுத்தவும், கைதிகளுக்கு விடுதலையை அறிவிக்கவும், பார்வையற்றவர்களுக்கு [பார்வை கொடுக்கவும்].” தான் வந்திருப்பதாக அறிவித்தார்12
இது செய்ய வேண்டிய பட்டியல் அல்லது நல்ல பொதுஜனத் தொடர்பு அல்ல; அவரது அன்பின் வடிவம் அது.
சுவிசேஷங்களை சீரற்ற முறையில் திறக்கவும்; சமூக ரீதியாகவும், ஆவிக்குரிய ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்பப்படும் மக்களை அவர் கவனித்துக்கொள்வதை கிட்டத்தட்ட ஒவ்வொரு பக்கத்திலும் காண்கிறோம். அழுக்கானவர்களாகவும் அசுத்தமானவர்களாகவும்13 கருதப்பட்ட மக்களைத் தொட்டு, பசித்தவர்களுக்கு உணவளித்தார்.14
இயேசுவைப்பற்றிய உங்களுக்குப் பிடித்த கதை எது? தேவனின் குமாரன் விளிம்பில் இருக்கும் ஒருவரை—தொழுநோயாளியை,15 வெறுக்கப்பட்ட சமாரியனை,16 குற்றம் சுமத்தப்பட்ட அவதூறான பாவியை,20 அல்லது தேசிய எதிரியை18 தழுவிக்கொள்ள அணுகுவதை இது காட்டுகிறது என்று நான் சந்தேகிக்கிறேன். அத்தகைய கிருபை அற்புதமானது.
ஒவ்வொரு முறையும் அவர் புகழ்ந்து பேசும் போது அல்லது குணமாக்கும் போது அல்லது வெளிநபருடன் சாப்பிடும் போதும் எழுத முயற்சிக்கவும், நீங்கள் லூக்காவை விட்டு வெளியேறும் முன் உங்களுக்கு மை குறைவாக இருக்கும்.
நான் இதைப் பார்த்தேன், என் இருதயம் அன்பான அடையாளம் அறிந்து துள்ளியது, மேலும் அவர் என்னை நேசிக்கக்கூடும் என்று நான் உணர ஆரம்பித்தேன். தலைவர் நெல்சன் கற்பித்தபடி, “இரட்சகரைப் பற்றி நீங்கள் எவ்வளவு அதிகமாகக் கற்றுக்கொள்கிறீர்களோ, அவ்வளவாக அவருடைய இரக்கத்தில், அவருடைய எல்லையற்ற அன்பில் நம்பிக்கை வைப்பதும் எளிதாகும்.”19 மேலும் நீங்கள் உங்கள் பரலோக பிதாவை அவ்வளவு அதிகமாக நம்பி நேசிப்பீர்கள்.
“நம்முடைய நித்திய பிதாவாகிய தேவன் யார், எப்படிப்பட்டவர், அவர் தம் பிள்ளைகளுக்கு எவ்வளவு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறார்” என்பதைக் காட்டவே இயேசு வந்ததாக மூப்பர் ஹாலண்ட் நமக்குக் கற்பித்தார்.20
தேவன் “[எல்லா] இரக்கங்களுக்கும் பிதா, எல்லா ஆறுதலுக்கும் தேவன்” என்று பவுல் கூறுகிறான்.21
நீங்கள் அவரை வித்தியாசமாகப் பார்த்தால், முயற்சி செய்துகொண்டிருங்கள்.
உடன்படிக்கைகளும் தேவனின் அரவணைப்பும்
அவருடைய முகத்தைத் தேட தீர்க்கதரிசிகள் நம்மை அழைக்கிறார்கள்.22 நாம் நம் பிதாவை ஆராதிக்கிறோம், அது ஒரு சூத்திரம் அல்ல, மேலும் இயேசுவை நம் பிதாவின் அன்பின் முகமாக பார்க்கும் வரை நாம் விட்டுவிடவில்லை என்பதன் நினைவூட்டாக இதை நான் எடுத்துக்கொள்கிறேன்;23 நாம் அவரைப் பின்பற்றுகிறோம், அவரது பிரமாணங்களை மட்டுமல்ல .24
நமது தீர்க்கதரிசிகளும் அப்போஸ்தலர்களும் உடன்படிக்கைகளைப் பற்றி பேசும்போது, அவர்கள் பயிற்சியாளர்கள் (சிவப்பு வெல்வெட்) ப்ளீச்சர்களில் இருந்து “கடினமாக முயற்சி செய்யுங்கள்!” என கத்துவது போல் அல்ல. நமது உடன்படிக்கைகள் அடிப்படையில் உறவுகளைப் பற்றியவை என்பதை நாம் காணவேண்டுமென்று அவர்கள் விரும்புகிறார்கள்25 மற்றும் ஆவிக்குரிய முகக் குருட்டுத்தன்மைக்கு ஒரு சிகிச்சையாக இருக்க முடியும்.26 அவை அவருடைய அன்பைப் பெறுவதற்கான விதிகள் அல்ல; அவர் ஏற்கனவே உங்களை முழுமையாக நேசிக்கிறார். அந்த அன்பைப் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதே நமது சவால்.27
நாம் நமது உடன்படிக்கைகளின் வழியாக, ஜன்னல் வழியாக பார்ப்பதுபோல், பின்னால் உள்ள பிதாவின் கருணையின் முகத்தைப் பார்க்க முயற்சிக்கிறோம்.
உடன்படிக்கைகள் தேவனின் அரவணைப்பின் வடிவம்.
தேவ அன்பின் நதி
நிரைவாக, அவருக்கு சேவை செய்வதன் மூலம் நாம் அவரைப் பார்க்க கற்றுக்கொள்ளலாம். “ஒரு மனுஷன் தான் ஊழியம் செய்யாத எஜமானனை எப்படி அறிவான்?”28
சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் உணராத புதிய அழைப்பு வந்தது. நான் அதிகாலையில், பதட்டமாக எழுந்தேன்—ஆனால் நான் முன்பு கேள்விப்படாத ஒரு சொற்றொடர் மனதில் இருந்தது: இந்த சபையில் சேவை செய்வது என்பது தேவனின் குழந்தைகளுக்கான அன்பின் நதியில் நிற்பதாகும். இந்த சபை கோடாலி மற்றும் மண்வெட்டிகளைக் கொண்ட மக்களின் வேலை செய்யும் குழுவாக, வரிசையின் முடிவில் தேவனின் அன்பின் நதி அவரது குழந்தைகளை சென்றடைவதற்காக கால்வாயை சுத்தம் செய்ய முயற்சிக்கிறது.
நீங்கள் யாராக இருந்தாலும், உங்கள் கடந்த காலம் எதுவாக இருந்தாலும், இந்த சபையில் உங்களுக்கு இடம் இருக்கிறது.29
ஒரு கோடாலி மற்றும் மண்வெட்டியை எடுத்து அணியில் சேரவும். அவருடைய அன்பை அவருடைய குழந்தைகளுக்கு எடுத்துச் செல்ல உதவுங்கள், அதில் சில உங்கள் மீது தெறிக்கும்.30
அவருடைய அன்பான முகத்தை, அவரது உடன்படிக்கை அரவணைப்பை தேடுவோம், பின்னர் அவருடைய குழந்தைகளுடன் கைகோர்ப்போம், ஒன்றாக நாம் “Redeemer of Israel” என்று பாடுவோம்:
என் அன்பான இரட்சகரே, மீட்டெடும்.
உமது முகத்தின் ஒளி;
உமது ஆத்துமாவை உற்சாகப்படுத்தும் ஆறுதல் கொடுக்க
மற்றும் இனிமையான ஏக்கம்.
உமது பரிசுத்த ஸ்தலத்திற்காக
பாழடைந்த இதயத்திற்கு நம்பிக்கையைக் கொண்டு வாரும்.31
நாம் அவருடைய அன்பான முகத்தைத் தேடுவோம், பின்னர் அவருடைய பிள்ளைகளுக்கு அவருடைய இரக்கத்தின் பாத்திரங்களாக இருப்போம்.32 இயேசு கிறிஸ்துவின், நாமத்தினாலே, ஆமென்.