2010–2019
இதோ! ஒரு இராஜ சேனை
ஏப்ரல் 2018


இதோ! ஒரு இராஜ சேனை

போதனை, கற்றுக்கொள்ளுதல், மற்றும் தோளோடு தோள்கொடுத்து சேவைசெய்வதின் ஆசீர்வாதம், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற அனைவருக்குமிருப்பது என்ன ஒரு ஆனந்தமாயிருக்கும்.

என்னுடைய அன்பான ஆசாரியத்துவ சகோதரர்களே, இந்த வரலாற்று நிகழ்ச்சியில், நமது அன்பான தீர்க்கதரிசியும் தலைவருமான ரசல் எம். நெல்சனால் நியமிக்கப்பட்டதனால் மிகுந்த அடக்கத்துடன் உங்கள் முன் நான் நின்றுகொண்டிருக்கிறேன். இந்த அற்புதமான தேவ மனிதனையும் நமது புதிய பிரதான தலைமையையும் நான் எவ்வளவாய் நேசிக்கிறேன், ஆதரிக்கிறேன். இந்த மாலைநேரத்தில் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் கர்த்தரின் சித்தமென மூப்பர் டி. டாட் கிறிஸ்டோபர்சன் மற்றும் என்னுடைய பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின் பிற சகோதரர்களுடன் என்னுடைய சாட்சியை சேர்க்கிறேன்.

தலைவர் நெல்சன் சொன்னதைப்போல, இது, நீண்ட நேரமாக சபையின் மூத்த சகோதரர்களால் ஜெபத்துடன் கலந்துரையாடி கருத்தில்கொண்ட ஒரு காரியம். கர்த்தரின் சித்தத்தை நாடுவதும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைப் பெலப்படுத்துவதும் விருப்பமாயிருந்தது. உணர்த்துதல் பெறப்பட்டு கர்த்தரின் சித்தத்தை இந்த மாலைநேரத்தில், நமது தீர்க்கதரிசி தெரியப்படுத்தினார். “நிச்சயமாக கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்!” 1இன்று ஒரு ஜீவிக்கிற தீர்க்கதரிசி நமக்கிருப்பதில் நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம்!

எங்கள் வாழ்கை முழுவதிலும், சகோதரி ராஸ்பாண்டும் நானும் சபை மற்றும் தொழில்ரீதியான வெவ்வேறு நியமிப்புகளில் உலகமுழுவதிலும் பயணம் செய்திருக்கிறோம். அநேகமாக சபையின் எல்லா வகையான பிரிவையும் நான் பார்த்திருக்கிறேன். ரஷியாவில் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்களை ஒரே கையால் எண்ணிவிடுகிற அளவில் ஒரு சிறிய கிளை. ஆப்ரிக்காவில், மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருப்பவர்கள் மிகக்குறைவாயிருந்ததால் பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் ஒரே அமைப்பில் சந்தித்தார்கள், நன்றாக நிறுவப்பட்ட தொகுதிகளில் மூப்பர்களின் எண்ணிக்கையால் அவர்களின் குழுமங்களை இரண்டு குழுமங்களாகப் பிரித்திருந்தனர்!

எல்லா இடங்களுக்கும் நாங்கள் சென்றிருக்கிறோம், அவர்களின் எல்லா தேவைகளின்படி அவருடைய பிள்ளைகள் அனைவரும் ஆசீர்வதிக்கப்படும்படியாக, மக்களையும் முன்னாலிருக்கிற பாதையையும் ஆயத்தப்படுத்துதலில் அவருடைய ஊழியக்காரர்களுக்கு முன்பாக கர்த்தருடைய கரம் போய்க்கொண்டிருந்ததை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர் [நமது] “முகத்துக்கு முன்பே போவேன், [நமது] வலது பாரிசத்திலும் [நமது] இடது பாரிசத்திலுமிருப்பேன், அவருடைய ஆவி [நமது] இருதயங்களிலே இருக்கும், உங்களைத் தாங்கிக்கொள்ள [அவருடைய] தூதர்கள் [நம்மைச்] சுற்றிலுமிருப்பார்கள்” 2 என அவர் வாக்குத்தத்தம் கொடுக்கவில்லையா?

உங்கள் அனைவரையும் நினைத்துக்கொண்டிருந்தபோது [“Behold! A Royal Army.”] “இதோ! ஒரு இராஜ சேனை” என்ற பாடல் எனக்கு நினைவுக்கு வந்தது.

இதோ! ஒரு இராஜ சேனை,

கொடியோடும், வாளோடும், கவசத்தோடும்

வெற்றிபெற அணிவகுத்துச் செல்கிறது.

வாழ்க்கையின் மகத்தான போர்க்களத்தில்

இதன் அணிவகுப்புகள்

ஒற்றுமையான, துணிவுள்ள, பெலமான வீரர்களுடன்

தங்கள் தலைவனைப் பின்தொடருகிற

அவர்களின் சந்தேஷத்தின் பாடலைப் பாடுகிறார்கள். 3

தொகுதி மட்டத்தில், பிரதான ஆசாரியர்கள் குழுக்களும் மூப்பர் குழுமங்களும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தின் சகோதரர்களின் பராக்கிரம சேனைகளுடன் ஒன்றாக இணைக்கப்படுகிறதென்ற அறிவிப்பிலிருந்து நிச்சயமாக எழுகிற ஏராளமான கேள்விகளுக்கு மூப்பர் கிறிஸ்டோபர்சன் பதிலளித்தார்.

மூப்பர்கள் குழுமங்களும் ஒத்தாசைச் சங்கங்களும் தங்களுடைய பணியில் இணக்கமாயிருக்க இந்த அனுசரிப்பு உதவியாயிருக்கும். அவர்களும் ஆயத்துவத்துடனும் தொகுதி ஆலோசனைக்குழுவுடனும், குழுமங்களின் ஒருங்கிணைப்பை எளிதாக்குவார்கள். குறிப்பாக இளம்பெண்கள் மற்றும் ஆரோனிய ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கும் இளம் ஆண்கள்மேல் தலைமை தாங்கும் தங்களுடைய முக்கியமான கடமைகளில் ஆயரும் அவருடைய ஆலோசகர்களும் கவனம்செலுத்தும்படியாக மூப்பர் குழுமங்களுக்கும் ஒத்தாசைச் சங்கத்திற்கும் அதிக பொறுப்புகளைக்கொடுக்க அவைகள் ஆயரை அனுமதிக்கிறது.

ஸ்தாபனங்களில் மாற்றங்களும் சபையின் செயல்களும் புதுமையானதல்ல. “என்னுடைய சபை மற்றும் ஆசாரியத்துவத்தை நிர்வகிப்பதைக் [குறித்து] அவை ஒவ்வொன்றும் வருங்கால முன்னேற்றத்திற்கும் எனது சபையின் பரிபூரணத்திற்கும் என்னுடைய இராஜ்ஜியத்தின் சரிசெய்தலுக்காகவும் முன்னேற்றத்திற்காகவும் அத்தியாவசியமாயிருக்கிற எல்லாவற்றையும் நான் நியமித்த பாதைகள் மூலமாக, நேரத்திற்கு நேரம் நான் உனக்கு வெளிப்படுத்துவேன்” 4 என 1883 ஆம் ஆண்டில் தலைவர் டெய்லருக்குக் கர்த்தர் சொன்னார்.

இப்போது பிரதான ஆசாரியர்களாயிருக்கிற, நாங்கள் உங்களை நேசிக்கிறோமென அறிந்துகொள்ளுகிற சகோதரர்களே, உங்களுக்கு சில வார்த்தைகள். பரலோகத்திலிருக்கிற நமது பிதா உங்களை நேசிக்கிறார் ஆசாரியத்துவத்தின் ராஜ சேனையில் நீங்கள் ஒரு பெரிய பங்கை வகுக்கிறீர்கள், உங்களின் நேர்மை, சேவை, அனுபவம் மற்றும் நீதி இல்லாமல் இந்த பணியை எங்களால் நகர்த்த முடியாது. தங்களுடைய அளவில்லா விசுவாசத்தின் நிமித்தமும், மற்றவர்களுக்கு போதிக்கவும் ஊழியம் செய்யவும் நல்ல பணிகளினாலும் பிரதான ஆசாரியர்களாயிருக்க மனிதர்கள் அழைக்கப்படுகிறார்கள் என ஆல்மா போதித்தான். ஒருவேளை எப்போதையும்விட இப்போது இந்த அனுபவம் தேவைப்படுகிறது.5

அநேக தொகுதிகளில், பிரதான ஆசாரியர்கள் தங்களுடைய குழுமத் தலைவராக ஒரு மூப்பரால் தலைமை தாங்கப்படுகிற சந்தர்ப்பங்களில் இப்போது போகப்போகிறார்கள். பிரதான ஆசாரியர்களுக்குத் தலைமை தாங்கிய முன்மாதிரி மூப்பர்கள் நமக்கிருக்கிறார்கள். பிரதான ஆசாரியர்கள் கிளையில் வசிக்கிற, உலகத்தின் சில பிரதேசங்களில் தற்போது மூப்பர்கள் கிளைத்தலைவர்களாக பணிபுரிந்துவருகிறார்கள், மூப்பர்கள் குழுமம் நிறுவப்பட்டு பிரதான ஆசாரியர்களிருக்கிற கிளைகளிருக்கின்றன.

தங்களுடைய தொகுதியில் அனைத்து அங்கத்தினர்களுடன், போதிப்பிலும், கற்றுக்கொள்ளுதலிலும், தோளோடு தோளாக நின்று சேவைசெய்வதின் ஆசீர்வாதம் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற அனைவருக்குமிருப்பதில் என்ன ஒரு ஆனந்தமிருக்கும். நீங்கள் எங்கிருந்தாலும், உங்கள் சூழ்நிலைகள் எதுவாயிருந்தாலும், நடத்தவும், நடத்தப்படவும், ஆசாரியத்துவத்தின் சகோதரர்களின் ஒரு அமைப்பாக ஒற்றுமையுடன் சேவை செய்யவும் புதிய சந்தர்ப்பங்களை ஏற்றுக்கொள்ள, ஜெபத்துடன், உண்மையுடன், மகிழ்ச்சியுடன் நாங்கள் உங்களை வரவேற்கிறோம்.

பரிசுத்த ஆசாரியத்துவத்தின் அவருடைய குழுமங்கள் நிறுவப்படுவதைப்பற்றி கர்த்தருடைய சித்தத்தை அமுலுக்குக் கொண்டுவர நாம் முன்னேறிச்சொல்லும்போது தெளிவுபடுத்துதல் தேவையாயிருக்கிற கூடுதலான காரியங்களைப்பற்றி இப்போது நான் பேசப்போகிறேன்.

ஒரு பிணைய பிரதான ஆசாரியர்கள் குழுமத்திற்கு என்ன சரிசெய்தல்களிருக்கின்றன? பிணைய பிரதான ஆசாரியர்கள் குழுமங்கள் தொடர்ந்து செயல்படும். பிணைய பிரதான ஆசாரியர்கள் குழுமத்தின் தலைமையாக பிணைய தலைமைகள் தொடர்ந்து பணிபுரியும். ஆயினும் மூப்பர் கிறிஸ்டோபர்சன் குறிப்பிட்டதைப்போல, இப்போது, பிணைய பிரதான ஆசாரியர்கள் குழும அங்கத்தினர்களில், ஒரு தொகுதி ஆயத்துவத்தில் அங்கத்தினர்களாக, பிணைய பிரதான ஆலோசனைக்குழுவின் அங்கத்தினர்களாக, செயல்பட்டுக்கொண்டிருக்கும் கோத்திரத்தலைவனாக, தற்போது பிணைய தலைமையில் பணிபுரிந்துகொண்டிருக்கிற பிரதான ஆசாரியர்கள் அடங்குவார்கள். ஒரு பிரதான ஆசாரியனாக, கோத்திரத்தலைவனாக, எழுபதின்மராக அல்லது அப்போஸ்தலராக ஒரு தொகுதியை சந்தித்து ஆசாரியத்துவக்கூட்டத்தில் பங்கேற்க விரும்புகிறபோது அவர் மூப்பர்கள் குழுமத்தை சந்திப்பார்.

இந்த அழைப்புகளிலுள்ள சகோதரர்கள் வரும் காலத்தில் விடுவிக்கப்பட்டு, மூப்பர்கள் குழுமத்தின் அங்கத்தினர்களாக தங்கள் சொந்த அங்கங்களுக்கு அவர்கள் திரும்புவார்கள்.

பிணைய பிரதான ஆசாரியர்கள் குழுமத்தின் பங்கு என்ன? ஒன்றாக ஆலோசிக்கவும், சாட்சியளிக்கவும், பயிற்சியளிக்கவும் பிரதான ஆசாரியர்கள் குழும அங்கத்தினர்களுடன் பிணைய தலைமை சந்திக்கிறது. நமது கைப்பிரதிகளில் கோடிட்டுக் காட்டியிருப்பதைப்போல இரண்டு சரிசெய்தல்களுடன் பிணைய கூட்டங்கள் தொடரும்.

ஒன்று, தொகுதிகளிலும் பிணையங்களிலும் இனி எப்போதும் ஆசாரியத்துவ செயற்குழு கூட்டங்கள் நடைபெறாது. நுணுக்கமான குடும்ப காரியம் அல்லது வழக்கத்திற்குமாறான நல்வாழ்வு சவால் போன்ற ஒரு குறிப்பிட்ட தொகுதி விவகாரம் எழுகிறபோது ஒரு விரிவான ஆயத்துவத்தில் இது பேசப்படலாம். பிற சாதாரண காரியங்கள் தொகுதி ஆலோசனைக்குழுவில் பேசப்படலாம். பிணைய ஆசாரியத்துவ நிர்வாகக் குழு கூட்டம் என்று அறியப்பட்டது இப்போது “பிரதான ஆலோசனைக் கூட்டம்” என அழைக்கப்படும்.

இரண்டாவதாக, பிணையத்திலுள்ள நியமிக்கப்பட்ட அனைத்து ஆசாரியர்களின் வருடாந்தரக் கூட்டம் இனிமேலும் நடைபெறாது. ஆயினும், இன்று அறிவிக்கப்பட்டிருப்பதைப்போல பிணைய பிரதான ஆசாரியர்களின் வருடாந்தரக்கூட்டத்தை பிணையத் தலைமை தொடர்ந்து நடத்தும்.

ஒரு தொகுதியில் ஒரு மூப்பர்கள் குழுமத்திற்கு மேல் இருக்கலாமா? பதில் ஆம் என்பதே. கோட்பாடும் உடன்படிக்கைகளும் பாகம் 107, வசனம் 89ன் உதாரணத்தைப் பின்பற்றி, வழக்கதிற்கு மாறாக ஒரு தொகுதியில் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவத்தைத் தரித்திருக்கிற உற்சாகமுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாயிருக்கும்போது, ஒரு மூப்பர்கள் குழுமத்திற்கு மேல் தலைவர்கள் நிர்வகிக்கலாம். இத்தகைய விவகாரங்களில் வயது, அனுபவம், ஆசாரியத்துவ அலுவல் மற்றும் எண்ணிக்கையின்படி ஒவ்வொரு குழுமத்திற்கும் நியாயமான சமநிலை இருக்கவேண்டும்.

நமது தொகுதிகளிலும் பிணையங்களிலும் இந்த உணர்த்துதலான குழுமங்களின் மறுசீரமைப்புகளுடன் நாம் முன்னேறிச்செல்லும்போது ஆசீர்வாதங்களின் பன்மடங்கை நாம் பார்ப்போம் என நான் சாட்சியளிக்கிறேன். சில உதாரணங்களை மட்டும் நான் குறிப்பிடுகிறேன்.

ஆயரின் வழிநடத்துதலின் கீழ், இரட்சிப்பின் பணியுடன் அதிகமான ஆசாரியத்துவ வளங்கள் உதவலாம். தேவையிலிருக்கும் குடும்பங்களுடனும் தனிப்பட்டவர்களுடனும் பணிசெய்துகொண்டு, இயேசு கிறிஸ்துவுக்கு ஆத்துமாக்களைக் கொண்டுவர ஊழியக்காரர்களுக்கு உதவிக்கொண்டு, ஆலயம் மற்றும் குடும்ப வரலாறு பணியின் மூலமாக இஸ்ரவேலின் கூடிச்சேர்தலும் இதில் அடங்கும்.

மூப்பர்களின் குழுமத்துடன் தங்களுடைய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள முந்திய தலைமை தாங்கும் தலைவர்கள் திரும்பும்போது, பலமான குழும அங்கத்தினரத்துவம் விளைகிறது.

குழுமங்களுக்குள்ளே திறமைகளின் வரங்களின் அதிகக் கலவையிருக்கும்.

தொகுதிகளுக்குள்ளும் குழுமத்திற்குள்ளும் தற்போதைய உடனடித் தேவைகளை சந்திக்கவும் நமது ஊழியம் செய்வதின் நியமிப்புகளை நிறைவேற்றுதலிலும் அங்கே அதிக இணக்கமும், கிடைக்கக்கூடியதுமிருக்கும்.

குழுமக் கூட்டங்களிலும் நியமிப்புகளிலும் சரிசமமாக ஒரு புதிய மூப்பரும் அனுபவமுள்ள பிரதான ஆசாரியரும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, சரிப்படுத்தலில், ஒற்றுமையில் ஒரு அதிகரித்தல் அங்கே இருக்கும்.

ஆயர்களும் கிளைத்தலைவர்களும் தங்கள் மந்தைகளை மேய்க்கவும் வறியோருக்கு ஊழியம் செய்யவும் தங்களுடைய அழைப்புகளை நிறைவேற்ற சுதந்தரமாக செயல்படுவார்கள் என நம்பலாம்.

ஒவ்வொரு தொகுதியும் பிணையமும் வித்தியாசமானதென நாம் புரிந்துகொள்கிறோம். இந்த வித்தியாசங்களை புரிந்துகொள்ளும்போது, இந்த பொது மாநாட்டைத் தொடர்ந்து நீங்கள் இந்த மாற்றங்களைப் பின்பற்றுவீர்களென நாங்கள் நம்புகிறோம். தேவ தீர்க்கதரிசி ஒருவரால் நமக்கு வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டிருக்கிறது! என்ன ஒரு பிரமாண்டமான ஆசீர்வாதமும் பொறுப்புமாயிருக்கிறது. எல்லா நீதியோடும் சிரத்தையோடும் இதை நாம் நிறைவேற்றுவோமாக!

தெரிந்துகொள்ளப்படுதல் மற்றும் நியமிப்பின் வழியில் ஆசாரியத்துவ அதிகாரம் வருகிறது. ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் செயல்பட வல்லமையான, உண்மையான ஆசாரியத்துவ வல்லமை, நீதியாக வாழ்வதன் மூலமாக மட்டுமே வருகிறது என நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.

மறுஸ்தாபிதத்தின் தீர்க்கதரிசியான ஜோசப் ஸ்மித்திற்கு கர்த்தர் இவ்வாறாகப் பிரகடனப்படுத்தினார்.

“இதோ, நான் உங்களுடைய மந்தைகளை பராமரித்து மூப்பர்களை எழுப்பி, அவர்களிடம் அனுப்புவேன்.

இதோ, நான் ஏற்றகாலத்திலே இதை தீவிரமாய் நடப்பிப்பேன். 6

உண்மையாகவே, கர்த்தருடைய பணியை அவர் துரிதப்படுத்துவதற்கு இதுவே நேரம்.

உண்மையுள்ளவர்களுக்கும் விசுவாசிப்பவர்களுக்கு அவர் வாக்குத்தத்தம் செய்திருக்கிற ஆசீர்வாதங்களுக்கு நாம் தகுதியாயிருக்கும்படியாக, அவருடைய சித்தத்திற்கு நன்றாக இணைந்திருக்க, பிரதிபலிக்கவும் விருத்தி செய்யவும் இந்த சந்தர்ப்பத்தை நாம் ஒவ்வொருவரும் பயன்படுத்துவோமாக.

சகோதரரே, இந்த மகத்தான பணியின் ஒரு அங்கமாயிருக்க நீங்கள் செய்துகொண்டிருக்கும் எல்லாவற்றிற்கும் நான் நன்றி சொல்லுகிறேன். இந்த மகத்தான மரியாதைக்குரிய நோக்கத்தில் நாம் முன்னேறித் செல்வோமாக.

ஓ, யுத்தம் முடிந்தபோது,

வாக்குவாதமும் போராட்டமும் நின்றபோது,

அனைவரும் பாதுகாப்பாய் கூடிச்சேர்ந்தபோது

சமாதானத்தின் திரைக்குள்ளே

நித்திய இராஜாவுக்கு முன்பாக

அந்த பரந்த பராக்கிரம கூட்டம்

அவருடைய நாமத்தை என்றென்றைக்கும் துதிக்கும்,

இது அவர்களின் பாடலாயிருக்கும்.

வெற்றி, வெற்றி,

நம்மை மீட்ட அவரின் மூலமாக!

வெற்றி, வெற்றி,

நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக!

வெற்றி, வெற்றி,

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாக! 7

அவருடைய தீர்க்கதரிசி தலைவர் ரசல் எம். நெல்சன் மூலமாக கர்த்தர் அவருடைய சித்தத்தை வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறாரென இன்று நாம் சாட்சிகளாக நின்றுகொண்டிருக்கிறோம். இங்கே பூமியில் அவர் தேவனின் தீர்க்கதரிசி என நான் சாட்சிளிக்கிறேன். நமது மகத்தான மீட்பரும் இரட்சகருமான கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக்குறித்து நான் சாட்சியளிக்கிறேன். இது அவருடைய பணி, இது அவருடைய சித்தம். இதை நான் பயபக்தியுடன் சாட்சி பகருகிறேன், இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஆமென்.

அச்சிடவும்