2010–2019
அறிமுக குறிப்புகள்
ஏப்ரல் 2018


அறிமுக குறிப்புகள்

கர்த்தரின் பணியை மிகவும் ஆற்றலுள்ளதாகச் செய்ய நமது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ குழுமங்களில் குறிப்பிடத்தக்க மறுசீரமைப்பை நாங்கள் அறிவிக்கிறோம்.

உங்களது முக்கிய செய்திக்காக சகோதரர் ஹோம்ஸ், உங்களுக்கு நன்றி.

அன்பு சகோதரரே, நாம் தலைவர் தாமஸ் எஸ். மான்சனையும், மூப்பர் ராபர்ட் டி. ஹேல்ஸையும் அதிகம் நினைக்கிறோம். இருப்பினும் கர்த்தரின் பணியில் நாம் அனைவரும் முன்னேறுகிறோம். 1

பரிசுத்த ஆசாரியத்துவம் தரித்திருக்கிற ஒவ்வொருவருக்கும் நான் நன்றியுடையவனாக இருக்கிறேன்.. “உலகத்தின் இரட்சகராகிய, கர்த்தராகிய தேவனின் நாமத்தில், ஒவ்வொரு மனுஷனும் பேசக்கடவன்,” 2 என வாஞ்சிக்கிற மீட்பரின் நம்பிக்கை நீங்கள்தான். அவருக்காக பேசவும், அவருக்காக செயல்படவும், “பூமி முழுவதும் விசுவாசம் அதிகரிக்கத்தக்கதாக,” 3 என்பது நிறைவேறத்தக்கதாக உலகெங்கிலுமுள்ள தேவனின் எல்லா பிள்ளைகளின் வாழ்க்கையை ஆசீர்வதிக்கவும், அவரது நியமிக்கப்பட்ட குமாரர்கள் யாவரும் உலகம் முழுவதற்கும் அவரது பிரதிநிதியாக இருக்க விரும்புகிறார்.

உங்களில் சிலர் பல தலைமுறைகளாக சபை ஸ்தாபிக்கப்பட்டுள்ள இடங்களில் சேவை செய்கிறீர்கள். பிறர் ஒப்பீட்டில் சபை, புதிதாக ஏற்டுத்தப்பட்டிருக்கும் இடங்களில் சேவை செய்கிறார்கள். பிறருக்கு நமது கிளைகள் சிறியதாக உள்ளது, அதிக தூரமாக இருக்கிறது. உங்களது தனிப்பட்ட சூழல்கள் பொருட்டின்றி, கற்கவும், கற்பிக்கவும், பிறரை நேசிக்கவும், சேவை செய்யவும், ஒரு தெய்வீக பொறுப்புடைய ஆசாரியத்துவ குழுமத்தின் அங்கத்தினர் நீங்கள்.

இன்றிரவில், கர்த்தரின் பணியை மிக சிறப்பாக நிறைவேற்ற நமது மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவ குழுமங்களின் விசேஷித்த சீரமைப்புகளை நாங்கள் அறிவிக்கிறோம். ஒவ்வொரு தொகுதியிலும் பிரதான ஆசாரியர்களும், மூப்பர்களும் இப்போது ஒரே மூப்பர்கள் குழுமமாக சேர்க்கப்படுவார்கள். இந்த அனுசரிப்பு பிறருக்கு சேவை செய்ய, ஆசாரியத்துவம் தரித்திருக்கிற ஆண்களின் தகுதியையும் திறமையையும் மிகவும் அதிகரிக்கும். எதிர்கால மூப்பர்கள் வரவேற்கப்பட்டு, குழுமத்தில் ஐக்கியம் ஆவார்கள். ஒவ்வொரு பிணையத்திலும் பிணைய தலைமை, பிணைய பிரதான ஆசாரியர் குழுமத்துக்கு தொடர்ந்து தலைமை தாங்கும். ஆனால் அந்தக் குழுமத்தின் தொகுப்பு, பின்னர் விளக்கப்படவிருப்பது போல, தற்போதைய ஆசாரியத்துவ அழைப்புகளின் அடிப்படையில் இருக்கும்.

பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தின், மூப்பர் டி. டாட் க்றிஸ்டாபர்சனும், மூப்பர் ரோனால்ட் ஏ. ராஸ்பாண்டும் இந்த முக்கிய அனுசரிப்புகளைப்பற்றி அதிகம் நமக்கு போதிப்பார்கள்.

இந்த மாற்றங்கள் அநேக மாதங்களாக ஆய்விலிருந்தது. நமது அங்கத்தினர்களை நாம் கவனிக்கிற விதத்தை முன்னேற்றவும், அவர்களுடன் நமது தொடர்புகளை அறிக்கை கொடுக்கவும், முக்கிய தேவையை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அதை நன்றாக செய்ய, தன் பரிசுத்தவான்களுக்கு கர்த்தர் கொடுக்க விரும்புகிற அன்பையும் ஆதரவையும் கொடுக்க அதிக வழிகாட்டலுக்கு நாம் நமது ஆசாரியத்துவ குழுமங்களை பலப்படுத்தியாக வேண்டும்.

இந்த அனுசரிப்புகள் கர்த்தரால் உணர்த்தப்பட்டவை. அவற்றை நாம் அமுல்படுத்தும்போது, நாம் முன்பு எப்போதும் இருந்ததை விட அதிக ஆற்றலுடன் இருப்போம்.

நாம் சர்வ வல்ல தேவனின் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். இயேசுவே கிறிஸ்து. நாம் அவரது தாழ்மையான வேலைக்காரர்கள்! நாம் கற்று நமது வேலைகளைச் செய்யும்போது, சகோதரரே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன், ஆமென்.

அச்சிடவும்