2010–2019
தொடர்ந்து ஜெபிப்பதில் கவனமாயிருங்கள்
அக்டோபர் 2019 பொது மாநாடு


தொடர்ந்து ஜெபிப்பதில் கவனமாயிருங்கள்(ஆல்மா 34:39; மரோனி 6:4; லூக்கா 21:36)

சோம்பலையும் சாதாரணமாயிருப்பதையும் எதிர்க்க தொடர்ந்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

நாம் ஒன்றாக களிகூர்ந்து ஆராதிக்கும்போது, உங்களுக்கும் எனக்கும் பரிசுத்த ஆவியின் உதவிக்காக நான் ஜெபிக்கிறேன்.

கடந்த 1976 ஏப்ரல் பொதுமாநாட்டில், மூப்பர் பாய்ட் கே. பாக்கர் சபையின் இளைஞருக்காக விசேஷமாக ஜெபித்தார். அவரது ஆவிக்குரிய முதலைகள் என்ற தலைப்பிட்ட செய்தியில் அவர், ஆப்பிரிக்க ஊழியத்தின்போது, நன்கு ஏமாற்றுகிற சந்தேகப்படாத ஜனங்களை பட்சிக்கிற முதலைகளை தான் கண்டதை விவரித்தார். பின்னர் அவர் பாவத்தின் பயங்கர தன்மையால் ஏமாற்றி அறியா இளைஞர்களை பட்சிக்கிற, சாத்தானை முதலைகளுக்கு ஒப்பிட்டார்.

மூப்பர் பாக்கர் அந்த செய்தியைக் கொடுத்தபோது, எனக்கு 23 வயது, சூசனும் நானும் சில நாட்களில் எங்கள் முதல் குழந்தையின் பிறப்பை எதிர்பார்த்திருந்தோம். பாவத்தைத் தவிர்ப்பது மற்றும் முக்கிய ஆவிக்குரிய பாடத்தை கற்பிக்க மிருகங்களின் சாதாரண நடத்தையை அவர் பயன்படுத்திய திறமை பற்றிய அவரது செய்தியின் உள்ளடக்கத்தால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம்.

நானும் சூசனும்கூட பல பணிகளில் ஆப்பிரிக்காவுக்கு சென்றிருக்கிறோம். அந்த கண்டத்தில் வசிக்கிற மகத்தான விலங்குகளை பார்க்கும் சந்தர்ப்பமும் நாங்கள் பெற்றோம். எங்கள் வாழ்க்கையில் மூப்பர் பாக்கரின் தாக்கத்தை நினைத்து, ஆப்பிரிக்க வனவிலங்குகளின் நடத்தையிலிருந்து நாங்கள் முக்கிய பாடங்களை கவனித்து கற்க நாங்கள் முயற்சி செய்தோம்.

தங்கள் உணவுக்காக வேட்டையாடுகிற இரண்டு சிறுத்தைகளை நானும் சூசனும் பார்த்த தன்மைகள் மற்றும் தந்திரங்களை விவரித்து, இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின்படி அன்றாடம் வாழ்கிற சிலவற்றை ஒப்பிடுகிறேன்.

சிறுத்தைகளும் மான்களும்

சிறுத்தைகள் பூமியில் வாழ்கிற வேகமான விலங்குகள், மற்றும் மணிக்கு 75 மைல்கள் (120 கி.மீ) வேகத்தை எட்டுகின்றன. இந்த அழகிய விலங்குகள் நின்ற நிலையிலிருந்து மூன்று மணித்துளிகளுக்கும் குறைவான நேரத்தில், மணிக்கு 68 மைல் (109 கி.மீ.) வேகத்தில் ஓட முடியும். சிறுத்தைகள் தங்கள் உணவைத் தாவிப்பிடிக்கும் மாம்சப்பட்சிணிகள். விரட்டித் தாக்க குறுகிய தூரம் ஓடுகின்றன.

படம்
மூப்பர் மற்றும் சகோதரி பெட்னாரால் கவனிக்கப்படும் சிறுத்தைகள்

ஆப்பிரிக்காவின் மிக பொதுவான எங்கும் காணப்படுகிற மான்களாகிய ஒரு பெரும் கூட்டமான இவற்றை இரண்டு மணி நேரமாக நானும் சூசனும் பார்க்க செலவிட்டோம். ஆப்பிரிக்க சாவன்னாவின் வளர்ந்த, உலர்ந்த புல் பழுப்பு வண்ணத்தில் இருந்தது, அவை மான்கூட்டத்தை துரத்தும்போது மாம்சபட்சிணிகளை முற்றிலுமாக மறைத்தது. சிறுத்தைகள் ஒன்றுக்கொன்று கிட்டத்தட்ட 100 கஜங்கள் (90 மீட்டர்கள்) தொலைவுக்கு பிரிந்திருந்தன, ஆனால் ஒன்றிணைந்து வேலை செய்தன.

ஒரு சிறுத்தை புல்லின்மீது அசையாமல் நிமிர்ந்து நின்றபோது, மற்ற சிறுத்தை தரையில் தாழக்குனிந்து சந்தேகப்படாத மான்களுக்கு நெருக்கமாக மெதுவாக ஊர்ந்து சென்றது. பின்பு நிமிர்ந்து அமர்ந்திருந்த சிறுத்தை புல்லுக்குள் மறைந்தது, சரியாக அதே நேரத்தில் அடுத்த சிறுத்தை நிமிர்ந்து உட்கார்ந்தது. ஒரு சிறுத்தை தாழ்வாக பதுங்கி முன்னோக்கி ஊர்ந்தபோது, அடுத்த சிறுத்தை புல்லில் நிமிர்ந்து நீண்ட நேரத்துக்கு மாறி மாறி தொடர்ந்தது. திருட்டுத்தனமான தந்திரமான உபாயம் மான்களின் கவனத்தை சிதறடித்து ஏமாற்றி, நெருங்குகிற அபாயத்திலிருந்து கவனத்தை திசை திருப்பின. பொறுமையாகவும் ஸ்திரமாகவும் இரண்டு சிறுத்தைகளும் தங்கள் அடுத்த உணவை பெற குழுவாக வேலை செய்தன.

மான்களின் பெரிய கூட்டம் மற்றும் நெருங்கி வருகிற சிறுத்தைகளுக்கும் மத்தியில் மூத்த, பெலசாலியான மான்கள் கரையான் புற்றுக்கள் மீது காவலாளிகள் போல நின்றன. சிறு குன்றுகள் மீது புல்தரையை பார்ப்பதை வசதியாக்க ஆபத்தின் அடையாளங்களை கண்காணிக்க இந்த காவல் மான்கள் சாத்தியமாக்குகிறது.

பின்பு திடீரென தாக்கும் தூரத்தில் சிறுத்தைகள் காணப்பட்டபோது, முழு மான் கூட்டமும் திரும்பி ஓடின. காவலாளி மான்கள் பெரிய குழுவோடு எப்படி தொடர்பு கொண்டன என எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு எச்சரிக்கை எப்படியோ கொடுக்கப்பட்டது, அனைத்து மான்களும் பாதுகாப்பான இடத்துக்கு நகர்ந்தன.

அடுத்து சிறுத்தைகள் என்ன செய்தன. எந்த தாமதமும் இல்லாமல், இரண்டு சிறுத்தைகளும் அடுத்தடுத்த மாதிரியில், ஒரு சிறுத்தை தாழக்குனிந்து முன்னே ஊர்ந்து செல்லும்போது அடுத்த சிறுத்தை புல்லில் நிமிர்ந்து நின்றது. இந்த மாதிரியான முயற்சி தொடர்ந்தது. அவை நிறுத்தவில்லை. அவை ஓய்வெடுக்கவில்லை, அல்லது இடைவெளி விடவில்லை. கவனத்தைச் சிதறவைப்பதிலும், திசைமாற்றும் உபாயத்தைப் பின்பற்றுவதிலும் அவை சோர்வடையவில்லை. நானும் சூசனும் சிறுத்தைகள் தூரத்தில் மறைவதையும், மான்கள் கூட்டத்துக்கு நெருக்கமாக எப்போதும் செல்வதையும் கவனித்தோம்.

நாங்கள் கவனித்ததையும் கற்றதையும் பற்றி நானும் சூசனும் அன்றிரவு ஒரு நினைவுகூரத்தக்க உரையாடல் நிகழ்த்தினோம். நாங்கள் இந்த அனுபவத்தை எங்கள் பிள்ளைகளுடனும் பேரப்பிள்ளைகளுடனும் உரையாடி, அநேக மதிப்பு மிக்க பாடங்களை கண்டுபிடித்தோம். அந்த பாடங்களில் மூன்றை நான் இப்போது விவரிப்பேன்.

பாடம் #1—தீயவனின் ஏமாற்றும் மாறுவேடத்தைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்

எனக்கு சிறுத்தைகள் மென்மையான, வசீகரமான, பிடிக்கும் விலங்குகள். சிறுத்தையின் மஞ்சள் சாம்பல் நிற தோல் கரும்புள்ளிகளுடன் ஆப்பிரிக்க புல்வெளிகளில், அழகிய ஏமாற்றும் அமைப்பாக அவை இரை தேடும்போது, இந்த விலங்குகள் கிட்டத்தட்ட தென்படாததாக இருந்தது.

படம்
சிறுத்தை நிலத்தில் மாய்மாலம் பண்ணுதல்

அது போன்ற விதமாக, ஆவிக்குரிய விதமாக ஆபத்தான கருத்துக்கள், எப்போதும் கவர்ச்சிகரமாயும், விரும்பத்தக்கதாயும், அல்லது இன்பமானதாயும் தோன்றலாம். அவ்விதமாக நமது இன்றைய உலகில், நாம் ஒவ்வொருவரும் நல்லது போல தோன்றும் ஏமாற்றும் தீமை பற்றி ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். ஏசாயா எச்சரித்தது போல, தீமையை நன்மையென்றும், நனமையைத் தீமையென்றும் சொல்லி, வெளிச்சத்தை இருளுமாகப் பாவித்து, கசப்பைத் தித்திப்பும், தித்திப்பைக் கசப்பு என்றும் சாதிக்கிறவர்களுக்கு ஐயோ!1

முரண்பாடுள்ள காலத்தில் மனித வாழ்க்கையின் புனிதத்தை மீறும்போது, உரிமை மற்றும் குழப்பத்தை புகழ்ந்து, சுதந்திரம் என விவரிக்கப்படுகிறது. மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட ஒளி பிரகாசமாக ஒளிரும்போது, சத்துருவின் இருண்ட ஏமாற்றுதலையும் கவனசிதறலையும் பிரித்தறிய உதவ இருக்கும் இந்த பிற்கால ஊழியக்காலத்தில் வாழ நாம் எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.

ஏனெனில் ஞானமுள்ளவர்களும் சத்தியத்தைப் பெற்றவர்களும்தங்கள் வழிகாட்டியாக பரிசுத்த ஆவியை வைத்துக்கொண்டவர்களும் ஏமாற்றப்படவில்லை,—மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்கிறேன், அவர்கள் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படுவதில்லை, அந்நாளிலே தரித்திருப்பார்கள்.2

பாடம் #2—விழிப்புடன் எச்சரிக்கையாயிருங்கள்

ஒரு மானுக்கு ஒரு சிறு கவனமற்ற தருணமும் அல்லது பாராமலிருப்பதும், சிறுத்தையால் வேகமாக தாக்கப்படுதலை உண்டாக்கும். அதுபோல ஆவிக்குரிய சோம்பலும், சாதரணமாக இருப்பதும் சத்துருவின் முன்னேற்றத்தால் தாக்கப்படுபவர்களாக்கும். ஆவிக்குரிய சிந்தை இல்லாதிருத்தல் நமது வாழ்க்கையில் பெரிய ஆபத்தை வரவழைக்கும்.

படம்
கவனமாயிருக்கும் மான்கள்

iStock.com/Angelika

கடைசி நாட்களில் தேவனின் பிள்ளைகளை சமாதானப்படுத்தவும், மௌனமாக்கவும் முயன்று மாம்ச பாதுகாப்பின்மையின் பொய்யான உணர்வு ஏற்படுத்த சாத்தான் எப்படி முயல்வான் என நேபி விவரித்தான், அவர்கள் சொல்லுவார்கள், “சீயோனில் எல்லாம் நலமே, ஆம், சீயோன் செழிக்கிறது, எல்லாம் நலமே— அவ்விதமாக பிசாசு அவர்களுடைய ஆத்துமாக்களை ஏமாற்றுகிறான், அவர்களை கவனமாக நரகத்துக்கு வழிநடத்துகிறான்.”3

சோம்பலையும் சாதாரணமாயிருப்பதையும் எதிர்க்க தொடர்ந்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது. தொடர்ந்து விழிப்புடனிருப்பது செயலாற்றுவது கவனமாக கண்காணிப்பது சாத்தியமான ஆபத்து அல்லது கஷ்டங்கள். விழிப்புடனிருப்பது காவல் மற்றும் பாதுகாப்பின் செயலைக் கண்காணிப்பதைக் குறிக்கிறது. ஆவிக்குரிய விதமாக பேசினால், பரிசுத்த ஆவியின் தூண்டுதல்களுக்கும், கோபுரத்திலுள்ள கர்த்தரின் காவல்காரனிடமிருந்து சமிக்ஞைகளுக்கும் விழிப்புடனும் துடிப்புடனும் இருக்க வேண்டும், 4

“ஆம், நான் உங்களுக்கு புத்தி சொல்லுகிறேன் … பிசாசின் சோதனைகளால் புறம்பே வழிநடத்தப்படாதபடிக்கு நீங்கள் தொடர்ந்து ஜெபத்தில் கவனமாயிருங்கள், ஏனெனில் இதோ, அவன் உங்களுக்கு எந்த நன்மையையும் பரிசளிப்பதில்லை.” 5

நமது வாழ்க்கையை இரட்சகரிலும், அவரது சுவிசேஷத்திலும் கவனப்படுத்துவது, நாம் ஆவிக்குரிய விதமாக தூக்க கலக்கத்துடனும் சோம்பேறியாகவும் இருக்கும் சுபாவ மனுஷனின் தன்மையை மேற்கொள்ள சாத்தியமாக்குகிறது. பார்க்க கண்களும், கேட்க காதுகளும் பெற்று நாம் ஆசீர்வதிக்கபட்டுள்ளதால்,6 நாம் பார்க்க அல்லது கேட்க வேண்டும் என குறிப்பாக நினைக்காதபோது, அல்லது எதையும் பார்க்கமுடியும் அல்லது கேட்க முடியும் என நினைக்காதபோது, பார்க்கவும் கேட்கவும் பரிசுத்த ஆவி நமது திறமையை அதிகரிக்க முடியும்.

“ஆகவே நீங்கள் ஆயத்தமாயிருக்கும்படி கவனமாயிருங்கள்.”7

பாடம் #3—சத்துருவின் நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள்

சிறுத்தை இயற்கையாகவே விலங்குகளை உண்ணும் மாம்ச பட்சிணி. தினமும் ஒவ்வொரு நாளும் சிறுத்தை மாம்ச பட்சிணி.

படம்
சிறுத்தை வேட்டையாடுதல்

சாத்தான், “நீதி மற்றும் தேவ சித்தத்தை நாடுபவர்களின் விரோதி.”8 எந்நாளும், ஒவ்வொரு நாளும் அவனது ஒரே நோக்கமும் எண்ணமும் தேவனின் குமாரர்களையும் குமாரத்திகளையும் அவனைப்போல துரதிர்ஷ்டசாலிகளாக்க வேண்டும் என்பதே. 9

பரலோக பிதாவின் மகிழ்ச்சியின் திட்டம், தன் பிள்ளைுகளுக்கு வழிநடத்துதல் கொடுக்கவும், நீடித்த மகிழ்ச்சியை அவர்கள் அனுபவிக்க உதவவும், உயிர்த்தெழுந்த மேன்மையடைந்த சரீரத்துடன் அவருடைய வீட்டுக்கு பாதுகாப்பாக திரும்ப கொணடுவருவதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. தேவனுடைய குமாரர்களையும் குமாரத்திகளையும் குழப்பி, சோகமாக்கி, அவர்களது நித்திய முன்னேற்றத்தை தடுக்க பிசாசு பிரயாசப்படுகிறான். அவன் மிகவும் வெறுக்கிற பிதாவின் திட்டத்தின் கூறுபாடுகளை தாக்க சத்துரு ஓய்வின்றி வேலை செய்கிறான்.

சாத்தானுக்கு சரீரமில்லை, அவனது நித்திய முன்னேற்றம் நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு ஆற்றுப்படுகையில் ஓடுகிற வெள்ளம் அணையால் தடுக்கப்படுவது போல, சத்துருவின் நித்திய முன்னேற்றம் தடுக்கப்பட்டுள்ளது, ஏனெனில் அவனுக்கு மாம்ச சரீரமில்லை. அவனது கலகத்தினிமித்தம் மாம்சமும் எலும்புகளும் கொண்ட கூடாரத்தால் சாத்தியமாகிற, பூலோக ஆசீர்வாதங்களையும் அனுபவங்களையும், லூசிபர் தானே மறுதலித்துக்கொண்டான். தண்டிக்கப்பட்டு என்ற வார்த்தையின் வேத அர்த்தங்களில் ஒன்று, தொடர்ந்து முன்னேறவும், நமது பரலோக பிதா போலாகவும் அவனால் முடியாததை விளக்குகிறது.

மாம்ச சரீரம் பரலோக பிதாவின் மகிழ்ச்சியின் திட்டத்துக்கும் நமது ஆவிக்குரிய முன்னேற்றத்துக்கும் மையமாக இருப்பதால், நமது சரீரங்களை முறையற்று பயன்படுத்த நம்மை தூண்டி, லூசிபர் நமது முன்னேற்றத்தை குழப்ப வகைதேடுகிறான். முடிவாக ஆவிக்குரிய பாதுகாப்பு, “‘நீங்கள் எங்கு போக கூடாதோ அதைநோக்கி மயக்குகிற முதல் அடியை வைக்காமல், நீங்கள் செய்ய கூடாததை செய்வதிலுமே இருக்கிறது என தலைவர் ரசல் எம். நெல்சன் போதித்தார்.’ … மனுஷர்களாக நம் அனைவருக்கும் நமது பிழைப்புக்குத் தேவையான சரீர பசிகள் இருக்கின்றன. வாழ்க்கையின் தொடர்ச்சிக்கு, முற்றிலும் தேவையானவை இந்த பசிகள். ஆகவே சத்துரு என்ன செய்கிறான்? … அவன் நமது பசி முலம் நம்மை தாக்குகிறான். நாம் சாப்பிடக் கூடாதவைகளை சாப்பிடத் தூண்டுகிறான், நாம் குடிக்கக் கூடாதவைகளை குடிக்கத் தூண்டுகிறான், நாம் நேசிக்கக் கூடாதவைகளை நேசிக்கத் தூண்டுகிறான்.’”10

நித்தியத்தின் முடிவான முரணானது, சத்துரு மாம்ச சரீரம் பெறாததால் சரியாக அவன் துர்பாக்கியசாலியாகி, நமது சரீரங்களின் முறையற்ற உபயோகத்தின் மூலம் தன் துர்ப்பாக்கித்தில் பங்கு பெற நம்மையும் அழைத்து தூண்டுகிறான். சரீர மற்றும் ஆவிக்குரிய அழிவுக்கு நம்மைத் தூண்ட அவனிடம் இல்லாத, அவன் பயன்படுத்த முடியாத அந்த முதன்மையான இலக்காக அவன் முயல்கிறான்.

எதிரியின் நோக்கத்தை புரிந்துகொள்வது சாத்தியமான தாக்குதல்களுக்காக பலமான ஆயத்தம் செய்வது முக்கியம்.11 சுருக்கமாக, தலைவன் மரோனி லாமானியர்களின் நோக்கத்தை அறிந்ததால், அவர்கள் வரும் நேரத்தில் அவர்களை சந்திக்க ஆயத்தமாக இருந்தான். 12 அதே கொள்கையும் வாக்குத்தத்தமும் நம் ஒவ்வொருவருக்கும் பொருந்தும்.

“நீங்கள் ஆயத்தமாயிருந்தால், நீங்கள் பயப்படமாட்டீர்கள்.

“நீங்கள் எதிரியின் வல்லமையிலிருந்து தப்பிப்பீர்கள்.”13

அழைப்பும், வாக்குத்தத்தமும், சாட்சியும்

சிறுத்தைகள் மற்றும் மான்களின் நடத்தையைக் கண்காணித்து முக்கிய பாடங்களைக் கற்பதுபோல, நாம் ஒவ்வொருவரும் அன்றாட வாழ்க்கையின் எளிய நிகழ்வுகளில் காணப்படும் எச்சரிக்கைகளில் பாடங்களை நாம் தேட வேண்டும். பரிசுத்த ஆவியானவரின் வல்லமை மூலம் பரலோக வழிநடத்துதல் பெற திறந்த மனமும் இருதயமும் நாம் நாடும்போது, நாம் பெற முடிகிற சில பெரும் அறிவுரைகள், மற்றும் நம்மை பாதுகாக்கக்கூடிய வல்லமையான எச்சரிக்கைகளும் நம் சொந்த சாதாரண அனுபவங்களிலிருந்து வரும். வல்லமையான உவமைகள் வேதங்களிலும் நமது அன்றாட ஜீவியத்திலும் அடங்கியுள்ளன.

ஆப்பிரிக்காவில் சூசனும் நானும் பெற்ற அனுபவத்தில் அடையாளம் காணக்கூடிய பல பாடங்களில் நான் மூன்றை மட்டும் கோடிட்டிருக்கிறேன். இந்த நிகழ்ச்சியை சிறுத்தைகளோடும் மான்களோடும் சிந்திக்கவும், உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் கூடுதல் பாடங்களை அடையாளம் காணவும் நான் உங்களை அழைக்கிறேன். சுவிசேஷம் கற்கவும், வாழவும் உண்மையான இடம் உங்கள் வீடுதான் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

உங்கள் மனதில் விசுவாசத்தோடு இந்த அழைப்புக்கு நாம் பதிலளித்தால், உணர்த்தப்பட்ட சிந்தனைகள் வரும், ஆவிக்குரிய உணர்வுகள் உங்கள் இருதயத்தில் நிறையும், அனைத்தையும் செய்து, நீங்கள் நிற்கும்படியாக தீய நாளில் நீங்கள் நிலைத்திருக்கும்படியாக, தேவனின் சர்வாயுத வர்க்கத்தை நீங்கள் தரித்துக்கொள்ளும்படியாக, எடுக்க வேண்டிய அல்லது தொடர வேண்டிய செயல்களை நீங்கள் அடையாளம் காண்பீர்கள்.14

விழிப்புடனும், தொடர்ந்தும் நீங்கள் ஜெபத்தில் கவனமாக இருந்தால் பலமான ஆயத்தம் மற்றும் ஆவிக்குரிய பாதுகாப்பு உங்கள் வாழ்க்கையில் வழிந்தோடும்.

உடன்படிக்கையின் பாதையில் முன்னேறுதல், ஆவிக்குரிய பாதுகாப்பை கொடுத்து, நமது வாழ்க்கையில் நீடித்த மகிழ்ச்சியை வரவழைக்கிறது என நான் சாட்சியளிக்கிறேன். நல்ல மற்றும் கெட்ட நேரங்களிலும் உயிர்த்தெழுந்த ஜீவிக்கிற இரட்சகர் நம்மை ஆதரித்து பெலப்படுத்துவார் என நான் சாட்சியளிக்கிறேன். இந்த சத்தியங்கள் பற்றி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில் நான் சாட்சியளிக்கிறேன், ஆமென்.

அச்சிடவும்