2010–2019
என்னை ஏமாற்றாதே
அக்டோபர் 2019 பொது மாநாடு


என்னை ஏமாற்றாதே

அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படியும்போது, நாம் எப்போதும் சரியான வழியில் நடத்தப்படுவோம், நாம் ஏமாற்றப்படமாட்டோம்.

ஒவ்வொருவருக்கும் ஆனால் விசேஷமாக வளர்ந்து வரும் தலைமுறையான ஆரம்ப வகுப்பு, வாலிபர், மற்றும் இளம் பெண்களுக்கு ஆலோசனை வார்த்தைகளை இன்று நான் வழங்குகிறேன். நமது நாளுக்காக கர்த்தருடைய தீர்க்கதரிசியான தலைவர் ரசல் எம். நெல்சனால் நீங்கள் ஆழமாக நேசிக்கப்படுகிறீர்கள், கடந்த ஆண்டு “இஸ்ரவேலின் நம்பிக்கை” என தலைப்பிடப்பட்ட ஒரு விசேஷ உலகளாவிய இளைஞர் ஆராதனை ஒளிபரப்பில் உங்களில் அநேகருடன் அவர் பேசினார்.1 வளர்ந்துவரும் தலைமுறையும் மறுஸ்தாபிதம் செய்யப்பட்ட இயேசு கிறிஸ்து சபையின் வருங்காலமான உங்களை “இஸ்ரவேலின் நம்பிக்கை” என தலைவர் நெல்சன் அழைப்பதை நாம் அடிக்கடி கேட்கிறோம்.

என் இளம் நண்பர்களே, இரண்டு குடும்பக் கதைகளைப் பகிர்ந்து நான் ஆரம்பிக்க விரும்புகிறேன்.

102வது டால்மேஷன்

பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து வீட்டை அடைந்து, தரையிலும், கேரேஜ் கதவிலும், எங்களுடைய சிகப்பு செங்கல் வீட்டில் எல்லா இடத்திலும் வெள்ளை பெயிண்ட் சிதறிக்கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டேன். மிக நெருக்கமாக அந்தக் காட்சியை நான் கவனித்து, சாயம் இன்னமும் ஈரமாக இருந்ததைக் கண்டுபிடித்தேன். சாயப்பூச்சின் பாதை பின்புறத்திற்குச் சென்றதால் நான் அதைப் பின்தொடர்ந்தேன். அங்கே, என்னுடைய ஐந்து வயது மகன் அவனுடைய கையில் ஒரு சாயதூரிகையை வைத்துக்கொண்டு எங்கள் நாயை துரத்திக்கொண்டிருந்ததைக் கண்டேன். எங்களுடைய அழகான லாப்ரடார் நாயின் பாதி உடல் வெள்ளை சாயம் பூசப்பட்டிருந்தது!

“நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய்?” ஒரு போலியான குரலில் நான் கேட்டேன்.

என் மகன் நின்று, என்னைப் பார்த்தான், நாயைப் பார்த்தான், வெள்ளை சாயத்துடன் ஒழுகிக்கொண்டிருந்த தூரிகையைப் பார்த்துவிட்டு சொன்னான், “தி ஒன் வித் 101 டால்மேஷியன்ஸ் என்ற திரைப்படத்தில் வருகிற கருப்பு புள்ளி நாய்களைப்போல இது காணப்பட நான் விரும்பினேன்.”

படம்
கருப்பு லாப்ரடார்
படம்
டால்மேஷன்

எங்கள் நாயை எனக்குப் பிடிக்கும். அது சரியாக இருக்கிறதென நான் நினைத்தேன், ஆனால் என் மகன் வேறு ஒரு கருத்திலிருந்தான்.

வரியுள்ள கிட்டி பூனை

புறநகரில், பட்டணத்திலிருந்து வெகு தூரத்திலிருந்த ஒரு வீட்டில் வசித்துவந்த கொள்ளுமாமா குரோவரை மையப்படுத்தியது என்னுடைய இரண்டாவது கதை. குரோவர் மாமாவுக்கு அதிக வயதாகிக்கொண்டிருந்தது. அவர் மரிப்பதற்கு முன் எங்களுடைய மகன்கள் அவரைச் சந்திக்கவேண்டுமென நாங்கள் நினைத்தோம். ஆகவே, ஒரு மாலைநேரம், அவருடைய தாழ்மையான வீட்டிற்குச் செல்ல நீண்ட தூரம் பயணப்பட்டோம். அவரைச் சந்திக்கவும் எங்கள் மகன்களை அவருக்கு அறிமுகப்படுத்தவும நாங்கள் ஒன்றுகூடி அமர்ந்தோம். உரையாடலின் சிறிது நேரத்திலேயே ஐந்து, மற்றும் ஆறு வயதான எங்களுடைய இரண்டு சிறிய பையன்கள் வெளியே போய் விளையாட விரும்பினார்கள்.

குரோவர் மாமா அவர்களுடைய கோரிக்கையைக் கேட்டு அவர்களுடைய முகத்துக்கு நேராய் தன் முகத்தைக் குனிந்தார். அவருடைய முகம் வயதாகவும், அறிமுகம் இல்லாமலும் இருந்ததால் பையன்கள் அவரைப் பார்த்து சிறிது பயந்தார்கள். ஒரு கோபமான குரலில் அவர்களிடம் அவர் சொன்னார் கவனமாயிருங்கள், வெளியே அசிங்கமான மிருகங்கள் அநேகமிருக்கின்றன. இதைக் கேட்ட லெசாவும் நானும் மிகவும் திடுக்கிட்டோம், அசிங்கமான மிருகத்தால் அவர்கள் துப்பப்படலாமென நாங்கள் கவலைப்பட்டோம். நாங்கள் அவருடனேயே இருந்தபோது விரைவிலே பையன்கள் விளையாடுவதற்கு வெளியில் சென்றனர்.

படம்
அசிங்கமான மிருகம்

பின்னர், வீட்டிற்குப் போக காரில் ஏறி அமர்ந்தபோது, “ஒருஅசிங்கமான மிருகத்தை நீங்கள் பார்த்தீர்களா?” என நான் பையன்களிடம் விசாரித்தேன். “இல்லை, நாங்கள் எந்த அசிங்கமான ஒன்றையும் பார்க்கவில்லைை ஆனால், அதன் முதுகில் வெள்ளை கோடுகளுள்ள ஒரு கருப்பு கிட்டி பூனையை நாங்கள் பார்த்தோம்!” என அவர்களில் ஒருவன் பதிலளித்தான்.

மகா ஏமாற்றுக்காரன்

வாழ்க்கையைப்பற்றியும், உண்மையைப்பற்றியும் மாசற்ற பிள்ளைகள் ஏதோ ஒன்றைக் கண்டுபிடிப்பதைப்பற்றிய இந்தக் கதைகள் நம் ஒவ்வொருவரையும் புன்னகைக்க வைக்கலாம், ஆனால் அவைகள் மிக அதிகமான மகத்துவமான கருத்தையும் விவரிக்கிறது.

முதல் கதையில் ஒரு செல்லப்பிராணியாக ஒரு அழகான நாய் எங்கள் இளைய மகனிடமிருந்தது, இருந்தபோதிலும், கையில் ஒரு சாயதூரிகையுடன் ஒரு காலன் சாயத்தை எடுத்துக்கொண்டு, அவனுடைய சொந்த கற்பனையை நிஜத்தில் உருவாக்க தீரமானித்தான்.

இரண்டாவது விவரத்தில், அசிங்கமான ஒன்றைக் கண்டுபிடிப்பதிலிருந்து அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய வெறுக்கத்தக்க அச்சுறுத்தலைப்பற்றி அறியாதிருந்தார்கள். அவர்கள் உண்மையில் பார்த்தவைகளை சரியாக அடையாளம் காண முடியாமல், சில துரதிருஷ்ட விளைவுகளினால் கஷ்டப்படும் அபாயத்திலிருந்தார்கள். உண்மையான காரியத்தை வேறு ஏதாவதாகக் கருதுகிற இவைகள், தவறான அடையாளத்தின் கதைகள். ஒவ்வொரு சம்பவத்திலும் விளைவுகள் சிறியது.

எப்படியாயினும், மிக அதிகமான அளவில் இந்த இதே சிக்கல்களுடன் இன்று அநேகர் பிடிக்கப்பட்டிருக்கிறார்கள். காரியங்களை அவை உண்மையாகவே இருக்கிறபடி அவர்களால் பார்க்க முடியவில்லை அல்லது சத்தியத்தில் அதிருப்தியடைந்திருக்கின்றனர். இருப்பினும், முழுமையான உண்மையிலிருந்து வேண்டுமென்றே நம்மை தூரமாக நடத்திச் செல்ல இன்று வடிவமைக்கப்பட்ட சக்திகள் செயல்பாட்டிலிருக்கின்றன. இந்த வஞ்சனைகளும் பொய்களும் மாசற்ற தவறான அடையாளத்திற்கும் அப்பால் வெகுதூரத்திற்குச் செல்கிறது, வழக்கமாக குறைந்த அல்ல கொடிய விளைவுகளாகிறது.

பொய்களின் தகப்பனும் மகா ஏமாற்றுக்காரனாகவுமுள்ள சாத்தான், அவைகள் இருக்கிறபடியே நம்மை கேள்வி கேட்க வைப்பான். நித்திய சத்தியங்களை புறக்கணிக்க அல்லது நமக்கு அல்லது அவனுக்கும் அவனைப் பின்பற்றுபவர்களுக்கும் அதிக விருப்பமாயிருக்கிற ஒன்றிற்கு அவைகளை மாற்றவும் செய்வான். “தேவனுடைய பரிசுத்தவான்களுடன் அவன் யுத்தத்தை உண்டுபண்ணுகிறான்,”2 நன்மையை தீமை என்றும் தீமையை நன்மையென்றும் நம்பவைக்க தேவனுடைய பிள்ளைகளை சம்மதிக்க வைக்க கணக்கிடுதலிலும் பயிற்சியெடுப்பதிலும் பல ஆயிரம் வருஷங்களை அவன் செலவழித்திருக்கிறான்.

அசிங்கமானவை வெறும் குட்டிகள் அல்லது ஒரு சாயத்தினால் ஒரு லாப்ராடரை, டால்மேஷனாக நீங்கள் மாற்றமுடியும் என்று மனிதர்களை நம்பவைக்கும் நற்பெயரை அவனே அவனுக்கு ஏற்படுத்தியிருக்கிறான்.

படம்
மோசே தேவனை முகமுகமாய்ப் பார்த்தான்

இந்த இதே சிக்கலை முகமுகமாய் எதிர்கொள்ள கர்த்தருடைய தீர்க்கதரிகளில் ஒருவர் வந்த, வேதத்தில் காணப்படுகிற இந்த கொள்கைகளின் ஒரு எடுத்துக்காட்டுக்கு நாம் திரும்புவோம். “மிக உயர்ந்த மலையின்மீது மோசே எடுத்துக்கொள்ளப்பட்டான். . . . அவன் தேவனை முகமுகமாய்க் கண்டு, அவரோடு அவன் பேசினான்.”3 அவனுடைய நித்திய அடையாளத்தைப்பற்றி தேவன் மோசேக்குப் போதித்தார். மோசே மனுஷனாயும் குறைவுள்ளவனாயும் இருந்தாலும்கூட, மோசே “என்னுடைய ஒரேபேறானவரின் சாயலிலிருக்கிறாய்; என்னுடைய ஒரேபேறானவர் இரட்சகராயிருக்கிறார்”4 என தேவன் போதித்தார்.

இந்த அற்புதமான தரிசனத்தை சுருக்கிச் சொன்னால் மோசே தேவனைக் கண்டான், அவனைக்குறித்த முக்கியமான ஒன்றையும் அவன் அறிந்துகொண்டான், அவன் உண்மையாகவே தேவகுமாரனாயிருந்தான்.

இந்த அற்புதமான தரிசனம் நிறைவுபெற்றதும் என்ன நடந்ததென்பதை கவனமாகக் கேளுங்கள். சாத்தான் அவனை சோதித்துக்கொண்டு, “ மோசே, மனுஷகுமாரனே, என்னைத் தொழுதுகொள்!”5 எனச் சொன்னான். மோசே தைரியமாகப் பதிலளித்தான் “நீ யார்? ஏனெனில் இதோ, அவருடைய ஒரேபேறானவரின் சாயலில் நான் தேவனுடைய குமாரன்; நான் உன்னை தொழுதுகொள்ளும்படியாக உன்னுடைய மகிமை எங்கே?”6

வேறு வார்த்தைகளிலெனில், மோசே சொன்னான்: “நீ என்னை ஏமாற்றமுடியாது, ஏனெனில் நான் யாரென்று எனக்குத் தெரியும். நான் தேவனின் சாயலில் சிருஷ்டிக்கப்பட்டேன். உன்னிடம் அவருடைய ஒளியும் மகிமையும் இல்லை. ஆகவே நான் ஏன் உன்னைத் தொழுதுகொள்ளவேண்டும் அல்லது உன்னுடைய வஞ்சகத்திற்கு பலியாகவேண்டும்?”

இப்போது, அதற்கு மேல் மோசே எவ்வாறு பதிலளித்தான் என்பதில் கவனம் செலுத்துங்கள். அவன் அறிவித்தான், “அப்பாலே போ சாத்தானே; என்னை ஏமாற்றாதே.7

சத்துருவிலிருந்து வந்த சோதனைக்கு மோசேயின் வலிமைமிக்க பதிலிலிருந்து நாம் அதிகமானவற்றைக் கற்றுக்கொள்ளமுடியும். சோதனை வந்த செல்வாக்கை நீங்கள் உணரும்போது இதே வழியில் பதிலளிக்க நான் உங்களை அழைக்கிறேன். உங்கள் ஆத்துமாவின் எதிரியிடம் கட்டளையிடுங்கள், “அப்பாலே போ! உன்னிடம் மகிமை இல்லை. என்னை சோதிக்காதே அல்லது என்னிடம் பொய் சொல்லாதே! ஏனெனில் நான் யாரென்று எனக்குத் தெரியும், நான் தேவனுடைய பிள்ளை. அவருடைய உதவிக்காக நான் எப்போதும் தேவனைக் கூப்பிடுவேன்.”

ஆயினும், நம்மை ஏமாற்றவும் இழிவுபடுத்தவும் அவனுடைய அழிக்கும் நோக்கங்களை சத்துரு எளிதாக கைவிமாட்டான். நிச்சயமாக மோசேயிடம் அவன் அப்படிச் செய்யவில்லை மாறாக, நித்தியத்தில் மோசே யாராயிருந்தான் என்பதை மறக்கச்செய்யும் நோக்கத்துடனிருந்தான்.

ஒரு குழந்தைத்தன தந்திரத்தை அவன் தூக்கி எறிகிறதைப்போல, “சாத்தான் உரத்த சத்தத்தில் அழுது, பூமியில் கடுமையாகப்பேசி சொன்னான்: நானே ஒரேபேறானவன், என்னைத் தொழுதுகொள்.”8என்றான்

மறுபரிசீலனை செய்வோம். இப்போது அவன் சொன்னதை நீங்கள் கேட்டீர்களா? “நானே ஒரேபேறானவன். என்னைத் தொழுதுகொள்.”

அந்த மகா ஏமாற்றுக்காரன் அழுத்திச் சொன்னான், “கவலைப்படாதீர்கள் நான் உங்களைக் காயப்படுத்தமாட்டேன், நான் அசிங்கமானவனில்லை, நான் ஒரு மாசற்ற கருப்பும் வெள்ளையும் வரியுமுள்ள கிட்டி பூனை.”

படம்
மோசே சாத்தானை வெளியே தள்ளுதல்

பின்னர் மோசே தேவனை அழைத்து அவருடைய தெய்வீகப் பெலத்தைப் பெற்றான். சத்துரு நடுங்கி பூமி அதிர்ந்தாலும் மோசே விடவில்லை அவனுடைய குரல் நிச்சயமாகவும் தெளிவாகவுமிருந்தது. அவன் அறிவித்தான், “என்னிடமிருந்து அப்பாலே போ சாத்தானே, ஏனெனில் மகிமையின் தேவனாகிய இந்த தேவன் ஒருவரைமட்டுமே நான் தொழுதுகொள்ளுவேன்”. 9

இறுதியில் “அவன் மோசேயின் முன்பிருந்து புறப்பட்டுப்போனான்”10

கர்த்தர் மோசேக்கு தோற்றமளித்து அவனுடைய கீழ்ப்படிதலுக்காக அவனை ஆசீர்வதித்து, பின்னர் கர்த்தர் சொன்னார்,

“மோசே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன்,. . .அநேக தண்ணீர்களைவிட நீ பெலவானாக்கப்படுவாய். ...

“உன்னுடைய நாட்களின் முடிவுவரை நான் உன்னுடனேகூட இருக்கிறேன்.”11

மோசே சத்துருவை எதிர்த்தது, வாழ்க்கையில் நம் நிலை எதுவாயிருந்தாலும் நம் ஒவ்வொருவருக்கும் தெளிவான, அறிவூட்டும் எடுத்துக்காட்டாயிருக்கிறது. அவன் உங்களை ஏமாற்ற முயற்சிக்கும்போது என்ன செய்வதென அறிய, தனிப்பட்ட முறையில் இது உங்களுக்கு ஒரு சக்திவாய்ந்த செய்தி. மோசேயைப்போல நீங்கள் பரலோக உதவியுடன் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறீர்கள்.

கற்பனைகளும் ஆசீர்வாதங்களும்

மோசே செய்ததைப்போல, ஏமாற்றப்படாமல் அல்லது சோதனைக்குள் விழாமல், இந்த பரலோக உதவியை நீங்கள் எவ்வாறு கண்டுபிடிக்கமுடியும்? “ஆகவே, பூமியின் குடிகள்மேல் வரப்போகிற அழிவை அறிந்திருந்து, கர்த்தராகிய நான் எனது ஊழியக்காரனாகிய ஜோசப் ஸ்மித் இளையவனை அழைத்து, பரலோகத்திலிருந்து அவனோடு பேசி, கட்டளைகளை அவனுக்குக் கொடுத்தேன்”12 என அவர் அறிவித்தபோது, இந்தக் காலத்தில் கர்த்தராலே, தெய்வீக உதவிக்காக ஒரு தெளிவான வழி மறுஉறுதி செய்யப்பட்டது. எளிதான வார்த்தைகளை பயன்படுத்துவதில், “அந்தத்திலுள்ளவைகளை ஆதியிலிருந்து”13 அறிந்திருக்கிற, கர்த்தர் நமது நாட்களின் தனித்துவமான பிரச்சினைகளை அறிகிறார் என நீங்கள் சொல்லலாம். ஆகவே, சத்துருவின் வஞ்சனையான செல்வாக்கின், தாக்குதல்களின் நேரடி விளைவாக வருகிற அநேக சவால்களையும் சோதனைகளையும் தடுக்க ஒரு வழியை அவர் கொடுத்திருக்கிறார்.

வழி எளிதாயிருக்கிறது. அவருடைய ஊழியக்காரர்கள் மூலமாக அவருடைய பிள்ளைகளான நம்மிடம் தேவன் பேசுகிறார், நமக்கு கற்பனைகளைக் கொடுக்கிறார். நான் இப்போது குறிப்பிட்ட அந்த வசனங்களை நீங்கள் மீண்டும் எடுத்துச்சொல்லலாம், “கர்த்தராகிய நான் என்னுடைய ஊழியக்காரரை [தலைவர் ரசல் எம். நெல்சன்] அழைத்து பரலோகத்திலிருந்து அவருடன் பேசி அவருக்குக் கற்பனைகளைக் கொடுத்தேன்.” இது ஒரு மகிமையான சத்தியமில்லையா?

மகத்தான முதல் தரிசனத்தில் ஆரம்பமாகி, எல்லா உண்மையிலும் கர்த்தர் பரலோகத்திலிருந்து ஜோசப் ஸ்மித்திடம் பேசினார் என நான் என்னுடைய புனித சாட்சியைக் கொடுக்கிறேன். நமது நாட்களில் தலைவர் நெல்சனிடமும் அவர் பேசுகிறார் . கடந்த காலங்களில் தீர்க்கதரிசிகளுடன் தேவன் தொடர்புகொண்டு, இந்த வாழ்க்கையில் சந்தோஷத்திற்கும் அடுத்த வாழ்க்கையில் மகிமைக்கும் அவருடைய பிள்ளைகளை நடத்த வடிவமைக்கப்பட்ட கற்பனைகளை அவர்களுக்குக் கொடுத்தார்.

இன்று நமது ஜீவிக்கிற தீர்க்கதரிசிக்கு தேவன் தொடர்ந்து கற்பனைகளைக் கொடுக்கிறார். எடுத்துக்காட்டுகள் ஏராளம், அதிகமாக வீட்டை மையப்படுத்துகிற, சபையால் ஆதரிக்கப்படுகிற சுவிசேஷ அறிவுரையை சமப்படுத்துதல், ஊழியம் செய்தலுடன் வீடு மற்றும் விசாரிப்புப் போதகங்களை மாற்றியமைத்தல், ஆலய நடைமுறைகள் மற்றும் நியமங்களின் சீரமைத்தல்கள், 2020ல் ஆரம்பித்து பிள்ளைகள், இளைஞர்களின் புதிய நிகழ்ச்சிகள். மீண்டும் ஒரு முறை பூமியில் இரட்சகருடைய சபையை மறுஸ்தாபிதம் செய்த, நமது நாட்களில் ஒரு தீர்க்கதரிசியைக் கொடுத்த ஒரு நேசமுள்ள பரலோக பிதா மற்றும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நன்மையையும் இரக்கத்தையும் குறித்து நான் ஆச்சரியப்படுகிறேன். இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தின் மறுஸ்தாபிதம் காலங்களின் நிறைவுடன் அழிவின் காலங்களை கவிழ்த்துப் போடுகிறது.

துன்மார்க்கம் எப்போதுமே சந்தோஷமாயிருந்ததில்லை.

ஏமாற்றுபவனின் செல்வாக்கை தவிர்ப்பதற்கான ஒரு திறவுகோலாயிருப்பது மட்டுமல்ல ஆனால், நீடித்த மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அனுபவிப்பதற்கு நமது தீர்க்கதரிசிக்குக் கொடுக்கப்பட்ட கற்பனைகளுக்குக் கீழ்ப்படிதலிருக்கிறது. இந்த தெய்வீக சூத்திரம் எளிதாயிருக்கிறது, நீதி, அல்லது கற்பனைகளுக்குக் கீழ்ப்படிதல், ஆசீர்வாதங்களை கொண்டுவருகிறது, ஆசீர்வாதங்கள், சந்தோஷத்தை, அல்லது மகிழ்ச்சியை நமது வாழ்க்கையில் கொண்டுவருகிறது.

ஆயினும், மோசேயை ஏமாற்ற சத்துரு முயற்சித்த இதே வழியில், உங்களை ஏமாற்ற அவன் நாடுகிறான். அவன் எப்போதுமே அவன் இல்லாமலிருக்கிற ஒன்றாக இருப்பதாக பாசாங்கு செய்கிறான். அவன் இருக்கிறபடியே அவன் எப்போதுமே மறைக்க முயற்சிக்கிறான். கீழ்ப்படிதல் உங்கள் வாழ்க்கையை பரிதாபமாக்கும் உங்கள் சந்தோஷத்தைக் களவாடும் என அவன் கோருகிறான்.

அவனுடைய ஏமாற்றும் தந்திரங்கள் சிலவற்றை உங்களால் சிந்திக்கமுடியுமா? உதாரணமாக, சட்ட விரோதமான போதைப்பொருட்களின், மது அருந்துவதின் தீங்கைப்பற்றிக் குறைத்து, மாறாக, அது சந்தோஷத்தைக் கொண்டுவருமென அவன் ஆலோசனையளிக்கிறான். பெலவீனப்படுத்துகிற ஒப்பிடுதல்கள் மற்றும் இலட்சியப்படுத்தப்பட்ட உண்மையையும் சேர்த்து, சமூக வலைத்தளங்களிலிருக்கிற, வெவ்வேறான எதிர்மறை கூறுகளில் அவன் நம்மை மூழ்கடிக்கிறான். கூடுதலாக, ஆபாசம், இணையம் மூலம் மிரட்டுதலால் மற்றவர்கள்மீது அப்பட்டமான தாக்குதல்கள், நமது இருதயங்களிலும் மனங்களிலும் சந்தேகத்திற்கும் பயத்திற்கும் காரணமாயிருக்கிற தவறான தகவல்களை விதைத்தல் போன்ற காயத்திற்கு அல்லது வேதனைக்குக் காரணமான ஆன்லைனில் கணக்கிடப்பட்ட பிற சேதப்படுத்தும் பிற உள்ளடக்கத்தை அவன் நமக்கு குழப்பி காட்டுகிறான். தந்திரமாக அவன் கிசுகிசுக்கிறான், “என்னைப் பின்பற்றுங்கள் நிச்சயமாக நீங்கள் சந்தோஷமாயிருப்பீர்கள்.”

மார்மன் புஸ்தகத்தின் ஒரு தீர்க்கதரிசியால் அநேக நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட வார்த்தைகள் குறிப்பாக நமது நாட்களுக்கு பொருத்தமாயிருக்கிறது. “துன்மார்க்கமானது ஒருபோதும் மகிழ்ச்சியாயிருந்ததில்லை.”14 சாத்தானின் வஞ்சகங்கள் எப்படியிருக்கின்றன என நாம் அடையாளம் காண்போமாக. நமது ஆத்துமாக்களை அழிக்கவும், நமது தற்போதைய சந்தோஷத்தையும் வருங்கால மகிமையையும் நம்மிடமிருந்து களவாடவும் விரும்புகிறவனுக்கு எதிர்த்து நின்று, பொய்கள் மற்றும் செல்வாக்கின் வழியே பார்ப்போமாக.

எனக்கன்பான சகோதர, சகோதரிகளே, விசுவாசத்திலும், ஜாக்கிரதையிலும் நாம் தொடரவேண்டும், ஏனெனில் சத்தியத்தை பகுத்தறியவும், அவருடைய ஊழியக்காரர்கள் மூலமாக கர்த்தருடைய குரலைக் கேட்கவும் இதுவே ஒரே வழி. “ஏனெனில் ஆவியானவர் பொய் உரைக்காமல் உண்மையையே பேசுகிறார். ... ஆகவே, நமது ஆத்துமாக்களின் இரட்சிப்பிற்காக இந்தக் காரியங்கள் தெளிவாக நமக்கு வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ... பழங்காலத்து தீர்க்கதரிசிகளிடத்தில் அவர் பேசியிருப்பதால் அவர்களிடமும் தேவன் பேசுகிறார்.”15 இஸ்ரவேலின் நம்பிக்கையான நாம் சர்வவல்ல தேவனுடைய பரிசுத்தவான்கள்! நாம் தடுமாறுவோமா? நாம் சண்டையை சுருக்குவோமா அல்லது தவிர்ப்போமா? இல்லை!. . . தேவனின் கட்டளைக்கும், ஆத்துமாவுக்கும், இருதயத்துக்கும், கைக்கும் விசுவாசமாகவும் உண்மையாகவும் நாம் எப்போதும் நிற்போம்.”16

இஸ்ரவேலின் பரிசுத்தராகிய இயேசு கிறிஸ்துவைக் குறித்து நான் என்னுடைய சாட்சியை பகருகிறேன். அவருடைய முடிவற்ற நித்தியமான தியாகத்தால் சாத்தியமாக்குகிற அவருடைய நிலையான அன்பு, சத்தியம், சந்தோஷத்தைக் குறித்து நான் சாட்சியளிக்கிறேன். அவருடைய கற்பனைகளுக்குக் கீழ்ப்படியும்போது, நாம் எப்போதும் சரியான வழியில் நடத்தப்படுவோம், நாம் ஏமாற்றப்படமாட்டோம். நமது இரட்சகரான இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த நாமத்தில், ஆமென்.

அச்சிடவும்