Scripture Stories
சுதந்திரக்கொடி


“சுதந்திரக்கொடி,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

ஆல்மா 46–50

சுதந்திரக்கொடி

தேவனை நம்பும் உரிமையைப் பாதுகாத்தல்

படம்
அமலிக்கியா தன் மக்கள் ஆரவாரம் செய்யும் போது அவர்களுக்கு முன்னால் கைகளை நீட்டுதல்

அமலிக்கியா ஒரு பெரிய, வலிமையான நேபியன். அவன் ராஜாவாக விரும்பினான். தனக்கு உதவிய மக்களுக்கு அதிகாரம் கொடுப்பதாக உறுதியளித்தான். பலர் அவனை விரும்பினர் மற்றும் மற்றவர்கள் அவனைப் பின்பற்றச் செய்ய முயற்சித்தனர். அமலிக்கியா மக்களை கெட்ட காரியங்களைச் செய்ய வழிநடத்தினான். அவனும் அவனுடைய சீடர்களும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி போதித்த மக்களைக் கொல்ல விரும்பினர்.

ஆல்மா 45:23–24; 46:1–10

படம்
தலைவன் மரோனி அமலிக்கியா மற்றும் அவனது மக்களிடமிருந்து விலகிச் செல்லுதல்

நேபிய படைகளின் தலைவனான மரோனி இயேசுவை நம்பினான். நேபியர்கள் தேவனின் கட்டளைகளைக் கடைப்பிடித்ததால் அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்பதை அவன் அறிந்திருந்தான். அமலிக்கியா மக்களை தேவனிடமிருந்து விலக்கி, ராஜாவாவதற்கு முயற்சி செய்து, மக்களை காயப்படுத்த முயற்சிக்கிறான் என்று அவன் மிகவும் கோபமடைந்தான்.

ஆல்மா 46:9–11, 13–15, 18

படம்
தலைவன் மரோனி சுதந்திரக்கொடியைப் பிடித்திருத்தல்

மரோனி தனது அங்கியைக் கிழித்தான். மக்கள் தங்கள் தேவனையும், சுதந்திரத்தையும், தங்கள் குடும்பங்களையும் நினைவுகூர வேண்டும் என்று அவன் அதில் எழுதினான். பின்னர் அதை ஒரு கம்பத்தில் கட்டி சுதந்திரக்கொடி என்று அழைத்தான். மரோனி தேவனின் ஆசீர்வாதத்திற்காக ஜெபித்தான். அவன் நேபியர்களுக்கு சுதந்திரக்கொடியைக் காட்டி, அமலிக்கியாவை எதிர்த்துப் போரிடத் தம்முடன் சேரும்படி கேட்டுக் கொண்டான்.

ஆல்மா 46:12–20, 23–24, 28

படம்
தலைவன் மரோனி தனது படை மற்றும் குடும்பங்களுக்கு முன்னால் நிற்றல்

மக்கள் தங்கள் கவசங்களை அணிந்துகொண்டு மரோனியிடம் ஓடினார்கள். அவர்கள் தேவனுக்காகவும் தங்கள் வீடுகளுக்காகவும், குடும்பங்களுக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடத் தயாராக இருந்தனர். அவர்கள் எப்போதும் அவரைப் பின்பற்றுவார்கள் என்று தேவனுடன் ஒரு உடன்படிக்கை அல்லது விசேஷ வாக்குத்தத்தம் செய்தார்கள். பின்னர் அமலிக்கியாவுடன் சண்டையிட ஆயத்தமானார்கள்.

ஆல்மா 46:21–22, 28

படம்
அமலிக்கியாவும் அவனது சில வீரர்களும் ஓடுதல்

மரோனியின் படை பெரியதாக இருந்தது. அமலிக்கியா பயப்பட்டான். அவன் தன்னைப் பின்பற்றியவர்களுடன் ஓட முயன்றான். ஆனால் அவர்களில் பலர் அமலிக்கியா தவறான காரணங்களுக்காக போராடுகிறான் என்று கவலைப்பட்டார்கள். பலர் அவனைப் பின்தொடராமலிருந்தார்கள். அமலிக்கியாவைப் பின்தொடர்ந்தவர்களை மரோனியின் படை தடுத்து நிறுத்தியது, ஆனால் அமலிக்கியாவும் இன்னும் சிலரும் தப்பி ஓடிவிட்டனர்.

ஆல்மா 46:29–33

படம்
அமலிக்கியா லாமனியர்களிடம் பேசுதல்

அமலிக்கியா லாமனியர்களின் தேசத்துக்குச் சென்றான். நேபியர்களுக்கு எதிராக போரிட லாமனியர்கள் உதவ வேண்டும் என்று அவன் விரும்பினான். அப்போது அவனுக்கு ஒரு பெரிய, வலிமையான படை இருக்கும். அவன் லாமனியர்களில் பலரை நேபியர்களிடம் கோபப்பட வைத்தான். லாமனியர்களின் ராஜா, நேபியர்களுடன் போரிடத் தயாராகும்படி அனைத்து லாமனியர்களிடமும் கூறினான்.

ஆல்மா 47:1

படம்
அமலிக்கியா ஒரு கிரீடத்திற்காக லாமானிய ராஜா முன் மண்டியிடுகிறான்

ராஜா அமலிக்கியாவை விரும்பினான். அவன் அமலிக்கியாவை லாமானியப் படையின் தலைவர்களில் ஒருவனாக ஆக்கினான். ஆனால் அமலிக்கியா அதிக அதிகாரத்தை விரும்பினான்.

ஆல்மா 47:1–3

படம்
அமலிக்கியா கிரீடம் அணிதல்

லாமனியர்களை ஆட்சி செய்ய அமலிக்கியா திட்டம் தீட்டினான். அவன் முழு லாமானிய இராணுவத்தையும் கைப்பற்றினான். பின்னர் அவன் தனது வேலைக்காரர்களால் ராஜாவைக் கொல்லச் செய்தான், யார் அதைச் செய்தார்கள் என்று பொய் சொன்னான்.

ஆல்மா 47:4–26

படம்
அமலிக்கியா லாமானியப் படைவீரர்கள் ஆரவாரம் செய்யும் போது அவர்களுக்கு முன்னால் ஒரு முஷ்டியை உயர்த்துதல்

ராஜா கொல்லப்பட்டான் என்ற கோபப்படுவதுபோல அமலிக்கியா நடித்தான். லாமனியர்கள் அமலிக்கியாவை விரும்பினர். அவன் ராணியை மணந்து புதிய ராஜாவானான். அவன் நேபியர்களையும் ஆட்சி செய்ய விரும்பினான். லாமனியர்கள் அவர்கள் மீது கோபம் கொள்ளும்படியாக அவன் நேபியர்களைப் பற்றி மோசமாகப் பேசினான். விரைவில், பல லாமானியர்கள் அவர்களுடன் சண்டையிட விரும்பினர்.

ஆல்மா 47:25–35; 48:1–4

படம்
தலைவன் மரோனியும் அவனது வீரர்களும் சுவர்களைக் கட்டுதல்

அமலிக்கியா பொய் சொல்லி அதிகாரத்தைப் பெற்றபோது, மரோனி தேவனை நம்புவதற்கு நேபியர்களை தயார்படுத்தினான். அவர்களின் வாக்குறுதியை அவர்களுக்கு நினைவூட்டுவதற்காக அவன் தேசத்தின் ஒவ்வொரு கோபுரத்திலும் சுதந்திரக்கொடியை வைத்தான். மரோனியின் படைகள் நேபிய நகரங்களையும் போருக்கு தயார்படுத்தியது. அவர்கள் நகரங்களை பாதுகாப்பாகவும் வலுவாகவும் மாற்ற சுவர்களைக் கட்டினார்கள், அகழிகளைத் தோண்டினார்கள்.

ஆல்மா 46:36; 48:7–18

படம்
அமலிக்கியாவின் வீரர்கள் நேபிய நகரத்தின் மீது அம்புகளை எய்தல்

லாமானியர்கள் சண்டையிட வந்தபோது, அவர்களால் நேபிய நகரங்களுக்குள் நுழைய முடியவில்லை. மரோனியின் படைகள் கட்டிய சுவர்கள் மற்றும் அகழிகளால் அவர்கள் நிறுத்தப்பட்டனர். நேபியர்களைத் தாக்கியபோது பல லாமானியர்கள் இறந்தனர். அமலிக்கியா மிகவும் கோபமடைந்தான். மரோனியைக் கொல்வதாக உறுதியளித்தான்.

ஆல்மா 49:1–27

படம்
தலைவன் மரோனி போருக்குப் பிறகு நேபியர்களிடம் பேசுதல்

தங்களுக்கு உதவியதற்கும் பாதுகாத்ததற்கும் நேபியர்கள் தேவனுக்கு நன்றி தெரிவித்தனர். அவர்கள் தங்கள் நகரங்களை இன்னும் பாதுகாப்பானதாக்கி மேலும் பல நகரங்களைக் கட்டினார்கள். லாமானியர்களுடனான போர் தொடர்ந்தது, ஆனால் மரோனி மற்றும் அவனது படைகள் நேபியர்களை பாதுகாப்பாக வைத்திருக்க தேவன் உதவினார். நேபியர்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து அவருக்கு உண்மையாக இருந்தார்கள்.

ஆல்மா 49:28–30; 50:1–24

அச்சிடவும்