Scripture Stories
கடலைக் கடக்க ஒரு கப்பல்


“கடலைக் கடக்க ஒரு கப்பல்,” மார்மன் புஸ்தகக் கதைகள் (2023)

“கடலைக் கடக்க ஒரு கப்பல்,” மார்மன் புஸ்தகக் கதைகள்

1 நேபி 17-18

கடலைக் கடக்க ஒரு கப்பல்

வாக்குத்தத்தத்தின் தேசத்திற்குச் செல்ல ஆயத்தப்படுத்தல்

படம்
குடும்பங்கள் கடலின் அருகே

உதாரத்துவஸ்தலம் பழங்களும் தேனும் நிறைந்த நிலமாக இருந்தது. அது வசிப்பதற்கு அழகான இடமாக இருந்தது. லேகி மற்றும் சரயாவின் குடும்பத்தினர் கடலோரமாக வசித்து அவர்களுக்கு தேவையான அனைத்தையும் வைத்திருந்தனர்.

1 நேபி 17:5-6

படம்
நேபி ஜெபித்தல்

பல நாட்களுக்குப் பிறகு, கர்த்தர் நேபியிடம் ஜெபிப்பதற்கு மலைக்குச் செல்லுமாறு கூறினார். அங்கே, அவனது குடும்பம் கடலைக் கடந்து செல்ல ஒரு கப்பலைக் காட்டுமாறு கர்த்தர் கூறினார்.

1 நேபி 17:7–8

படம்
நேபி கற்களைப் பார்த்தல்

கப்பலை எப்படிக் கட்டுவது என்று கர்த்தர் நேபிக்குக் காட்டினார். ஆனால் கருவிகளைத் தயாரிப்பதற்கு உலோகத்தை எங்கே கண்டுபிடிப்பது என்று நேபிக்குத் தெரியவில்லை. உலோகத்தை எங்கே தேடுவது என்று கர்த்தர் நேபிக்குக் காட்டினார்.

1 நேபி 17:8-10

படம்
லாமானும் லெமுவேலும் பேசிக்கொண்டிருக்கும்போது நேபி வேலை செய்தல்

பின்னர், நேபி கருவிகளை உருவாக்க நெருப்பை உண்டாக்கினான். லாமானும் லெமுவேலும் தங்கள் சகோதரன் நேபியைப் பார்த்தார்கள். கப்பலை கட்டுவதற்கு நேபிக்கு உதவ அவர்கள் விரும்பவில்லை. கடலை கடக்க முயல்வது தவறான யோசனை என்று நினைத்தனர்.

1 நேபி 17:11, 16–18

படம்
லாமானும் லெமுவேலும் நேபி மீது கோபப்படுதல்

நேபியிடம் ஒரு கப்பலைக் கட்டும்படி கர்த்தர் சொன்னதை லாமானும் லெமுவேலும் நம்பவில்லை. ஏன் இன்னும் கர்த்தரில் விசுவாசம் வைக்கவில்லை என்று நேபி அவர்களிடம் கேட்டான். அவன் தனது சகோதரர்களுக்கு அவர்கள் ஒரு தூதனைப் பார்த்ததையும், கர்த்தருடைய வல்லமையை அறிந்திருப்பதையும் நினைவுபடுத்தினான். லாமானும் லெமுவேலும் நேபியைக் கொல்ல வேண்டுமளவுக்கு கோபம் கொண்டனர்.

1 நேபி 17:18-19; 45-48

படம்
நிலத்தில் லாமன் மற்றும் லெமுவேல்

நேபி தேவனுடைய வல்லமையால் நிரப்பப்பட்டான். லாமானையும் லெமுவேலையும் தன்னைத் தொடவேண்டாமென்று நேபி எச்சரித்தான். அவர்கள் பயந்து பல நாட்களாக நேபியைத் தொடத் துணியவில்லை. அதன் பின்பு கர்த்தர் நேபியிடம், சகோதரர்களிடம் கையை நீட்டும்படி கூறினார். நேபி அவர்களை நெருங்கியபோது, ​​கர்த்தருடைய வல்லமையால் அவர்கள் அதிர்ந்து கீழே விழுந்தார்கள்.

1 நேபி 17:48, 52–55

படம்
கப்பலில் அனைவரும் வேலை செய்தல்

லாமானும் லெமுவேலும் கர்த்தரை தொழுதுகொண்டு கப்பலைக் கட்ட உதவினார்கள். நேபி உதவிக்காக பலமுறை கர்த்தரிடத்தில் ஜெபித்தான். நேபியின் குடும்பம் கட்டிய கப்பல் அழகாக இருந்தது. பல நாட்களுக்குப் பிறகு, கப்பல் கட்டி முடிக்கப்பட்டது, அது நன்றாக இருப்பதைக் கண்டார்கள். கர்த்தர் தங்களுக்கு உதவியதை நேபியின் குடும்பம் அறிந்திருந்தது.

1 நேபி 18:1-4

அச்சிடவும்