Scripture Stories
ஆதாமும் ஏவாளும்


“ஆதாமும் ஏவாளும்,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“ஆதாமும் ஏவாளும்,” பழைய ஏற்பாட்டு கதைகள்

ஆதியாகமம் 2–3; மோசே 3–5; ஆபிரகாம் 5

ஆதாமும் ஏவாளும்

தேர்ந்தெடுப்புகள் செய்வதன் மூலம் அனுபவத்தைப் பெறுதல்

படம்
ஆதாமும் ஏவாளும் விலங்குகளுடன்

பூமியில் வாழ்ந்த பரலோக பிதாவின் பிள்ளைகளில் ஆதாமும் ஏவாளும் முதன்மையானவர்கள். எல்லா வகையான தாவரங்களும் மரங்களும் சூழ்ந்திருந்த அழகிய ஏதேன் தோட்டத்தில் அவர்கள் வாழ்ந்தார்கள். நம்முடைய பரலோக பிதாவாகிய தேவனும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் அவர்களை சந்தித்து அவர்களுடன் பேசினார்கள்.

{ ஆதியாகமம் 2: 8–9; 3: 8; மோசே 3: 8–9 ; ஆபிரகாம் 5: 8, 14–19

படம்
நன்மை தீமைபற்றிய அறிவின் மரம்

தேவன் ஒவ்வொரு மரத்தின் பழத்தையும் சாப்பிட அனுமதிக்கிறார். நன்மை தீமைபற்றிய அறிவின் மரத்திலிருந்து அவர்கள் சாப்பிட்டால், அவர்கள் தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டியிருக்கும், இறுதியில் மரித்துவிடுவார்கள். ஆதாமிடமும் ஏவாளிடமும் சாத்தான் பொய் சொன்னான். அவர்கள் பழத்தை சாப்பிட்டால், அவர்கள் நன்மை தீமைகளை அறிவார்கள், ஆனால் அவர்கள் மரிக்க மாட்டார்கள் என்று சாத்தான் சொன்னான்.

ஆதியாகமம் 2: 16–17 ; 3: 1–5 ; மோசே 3: 9 ; 4: 6–11 ; ஆபிரகாம் 5:9 , 12–13

படம்
ஏவாள் பழத்தைப் பறித்தல்

ஏவாள் பழம் சாப்பிட தேர்ந்தெடுத்தாள்.

{2 ஆதியாகமம் 3: 5–6 ; மோசே 4:12

படம்
பழங்களை வைத்திருக்கும் கைகள்

ஏவாள் ஆதாமுக்கு சில பழங்களைக் கொடுத்தாள். அவனும் அதை சாப்பிட தேர்ந்தெடுத்தான்.

ஆதியாகமம் 3:6–7; மோசே 4:12

படம்
ஆதாமும் ஏவாளும் தேவனிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் ஒளிகிறார்கள்

தேவனும் கர்த்தரும் அவர்களைச் சந்தித்தார்கள், ஆனால் ஆதாமும் ஏவாளும் பயந்து ஒளிந்தார்கள். நன்மை தீமைபற்றிய அறிவின் மரத்தின் பழத்தை அவர்கள் சாப்பிட்டார்களா என்று தேவன் கேட்டார்.

ஆதியாகமம் 3:8–13; மோசே 4:13–14

படம்
ஆதாமும் ஏவாளும் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேறுதல்

ஆதாமும் ஏவாளும் பழத்தை சாப்பிடத் தேர்ந்தெடுத்ததாக தேவனிடம் சொன்னார்கள். அவர்கள் தேர்ந்தெடுத்தனிமித்தம், அவர்கள் ஏதேன் தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அவர்கள் தேவனிடமிருந்து பிரிக்கப்பட்டார்கள், ஆனால் அவர் அவர்களுக்காக ஒரு திட்டத்தை வைத்திருந்தார். இப்போது அவர்கள் தவறுகளிலிருந்து சரியானதை அறிந்தார்கள், குழந்தைகளைப் பெற முடிந்தது.

ஆதியாகமம் 3:16–24; மோசே 4:15–31

படம்
ஆதாம் மற்றும் ஏவாளின் குடும்பத்தினர் நெருப்பைப் பார்க்கிறார்கள்

தேவனின் எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதாக ஆதாமும் ஏவாளும் உறுதியளித்தனர். மிருக பலி கொடுக்க அவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. அவர்கள் கீழ்ப்படிந்தபோது, தேவகுமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி அவர்கள் அதிகம் கற்றுக்கொண்டார்கள். அவர்கள் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியை உணர்ந்தார்கள், ஏனென்றால் அவருடைய குடும்பத்தினர் தேவனிடம் திரும்புவதற்கு அவர் உதவுவார்.

ஆதியாகமம் 3:23; மோசே 5:1–12

அச்சிடவும்