Scripture Stories
யோசியா ராஜா


“யோசியா ராஜா,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“யோசியா ராஜா,” பழைய ஏற்பாட்டு கதைகள்

2 இராஜாக்கள் 22; 2 நாளாகமம் 34–35

யோசியா ராஜா

கர்த்தரின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதற்கான ஒரு ஏக்கம்

படம்
இளம் யோசியா ராஜா

யூதாவின் ராஜாவாக யோசியா ஆக்கப்பட்டபோது அவனுக்கு எட்டு வயது. கர்த்தரை நேசித்த அவன் ஒரு நல்ல ராஜா. அவன் தனது மக்களான இஸ்ரவேலர்கள், கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து விக்கிரகங்களை வணங்குவதை நிறுத்துவதற்கு உதவ விரும்பினான். அவன் பெரியவனாக இருந்தபோது, அவனும் அவனுடைய மக்களும் ஆலயத்தைப் பழுதுபார்த்து மீண்டும் அழகாக மாற்றத் தொடங்கினர்.

2 இராஜாக்கள் 22:1–2; 2 நாளாகமம் 34:3–7

படம்
இல்க்கியா ஆலய இடிபாடுகளில் சுருளைக் கண்டுபிடித்தல்

மக்கள் ஆலயத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது, வேதங்கள் அடங்கிய ஒரு சுருளான நியாயப்பிரமாண புத்தகத்தை பிரதான ஆசாரியனான இல்க்கியா கண்டான்.

2 இராஜாக்கள் 22:3–9

படம்
துக்கமான யோசியா ராஜா நியாயப்பிரமாண புத்தகத்தை வாசிக்கக் கேட்டல்

ஒரு வேலைக்காரன் யோசியாவிற்கு புத்தகத்தைப் படித்தான். யோசியா வார்த்தைகளைக் கேட்டான், அவனுடைய மக்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படியாததால் துக்கமடைந்தான். அவன் துக்கமாக இருப்பதைக் காட்ட அவன் தனது ஆடைகளைக் கிழித்தான்.

2 இராஜாக்கள் 22:10–13, 19

படம்
யோசியாவின் வேலைக்காரர்கள் உல்தாளுடன் பேசுதல்

அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கர்த்தரிடம் கேட்கும்படி அவன் இல்க்கியாவிடம் கூறினான். இல்க்கியா மற்றும் ராஜாவின் வேலைக்காரர்கள் உல்தாளை சந்தித்தனர். அவள் ஒரு தீர்க்கதரிசி, தேவனால் உணர்த்தப்பட்ட ஒரு உண்மையுள்ள தலைவி. மக்கள் கீழ்ப்படிவதற்கு உதவி செய்வதால் யோசியாவுடன் கர்த்தர் மகிழ்ச்சியாக இருப்பதாக அவள் கூறினாள். யோசியா ராஜா சமாதானமாக வாழ்வார் என்று கர்த்தர் வாக்குறுதி அளித்தார்.

2 இராஜாக்கள் 22:12–20

படம்
பஸ்கா விருந்தில் யோசியா ராஜா

யோசியா ராஜா தனது மக்கள் கர்த்தருக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று விரும்பினார். எகிப்தில் நீண்ட காலத்திற்கு முன்பு இஸ்ரவேலர்களை கர்த்தர் எப்படி விடுவித்தார் என்பதை நினைவில் கொள்ள அவர்களுக்குதவ, பஸ்கா பண்டிகையைக் கொண்டாட அவன் அவர்களிடம் சொன்னான்.

2 நாளாகமம் 35:1–19

அச்சிடவும்