Scripture Stories
தீர்க்கதரிசி ஏசாயா


“தீர்க்கதரிசி ஏசாயா,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“தீர்க்கதரிசி ஏசாயா,” பழைய ஏற்பாட்டு கதைகள்

ஏசாயா 6–7; 9; 53–54

தீர்க்கதரிசி ஏசாயா

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள்

படம்
ஏசாயா கர்த்தரால் அழைக்கப்படுதல்

இஸ்ரவேலர் பல முறை கைப்பற்றப்பட்டனர் மற்றும் கர்த்தர் தங்களை பாதுகாக்க வேண்டும் என்று விரும்பினார்கள். ஆலயத்தில் ஒரு நாள், இயேசு கிறிஸ்துவின் வருகையைப்பற்றி மக்களுக்கு கற்பிக்க ஏசாயா என்ற பெயருள்ள ஒரு மனிதனை கர்த்தர் அழைத்தார். ஏசாயா மக்களை நேசித்தான் மற்றும் கிறிஸ்து அவர்களை எவ்வாறு காப்பாற்ற முடியும் என்பதை அவர்களுக்கு கற்பித்தான்.

ஏசாயா 6:1–8

படம்
இயேசுவின் பிறப்பை ஏசாயா முன்னறிவித்தல்

தனது மக்களை பாவத்திலிருந்து காப்பாற்ற இயேசு கிறிஸ்து ஒரு நாள் வருவார் என்று ஏசாயா அறிந்தான். ஆனால் எல்லோரும் அவரை தங்கள் இரட்சகராக அங்கீகரிக்க மாட்டார்கள். ஏசாயா மிகவும் துக்கமாக இருந்தான், ஏனென்றால் இயேசு கிறிஸ்துவை பலர் நம்ப மாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும்.

ஏசாயா 6:9–13; 7:14; 53:1–9

படம்
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப்பற்றி ஏசாயா எழுதுதல்

ஆனால் இயேசு கிறிஸ்துவின் இரண்டாவது வருகையைப்பற்றியும் ஏசாயா தீர்க்கதரிசனம் சொன்னான். இயேசு கிறிஸ்து திரும்பி வந்து முழு பூமியின் ராஜாவாக இருப்பார். தயவு மற்றும் சமாதானத்தை என்றென்றும் கொண்டுவருவதன் மூலம் அவர் மீண்டும் வந்து, தனது பிதாவின் திட்டத்தை நிறைவேற்றுவார். இயேசு கிறிஸ்து அவர்களின் இரட்சகர் என்பதை அனைவரும் அறிவார்கள் என்று ஏசாயா கூறினான்.

ஏசாயா 9:6–7; 54:1–10

அச்சிடவும்