Scripture Stories
தாவீதும் கோலியாத்தும்


“தாவீதும் கோலியாத்தும்,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“தாவீதும் கோலியாத்தும்,” பழைய ஏற்பாட்டு கதைகள்

1சாமுவேல் 17

தாவீதும் கோலியாத்தும்

ஒரு ராட்சச சவாலை எதிர்கொள்ளுதல்

படம்
கோலியாத்

பெலிஸ்தர்கள் இஸ்ரவேலரைத் தாக்கிக் கொண்டிருந்தார்கள். தினமும் காலையில் கோலியாத் என்ற ராட்சச பெலிஸ்தன் எந்த இஸ்ரவேலருடனும் தான் எதிர்த்துப் போராட சவால் விட்டான். கோலியாத் மற்றவர்களை விட பெரியவன், உயரமானவன், அவன் கொடுமையானவன். அவன் கனமான கவசத்தை அணிந்து ஒரு வாள், ஈட்டி மற்றும் பெரிய கேடயத்தை வைத்திருந்தான். யாரும் அவனுடன் சண்டையிடத் துணியவில்லை.

1 சாமுவேல் 17:1–11

படம்
இஸ்ரவேலின் இராணுவம் உணவருந்துதல்

தாவீது ஒரு இளம் ஆடுமேய்க்கும் பையன், அவன் கர்த்தரை விசுவாசித்தான். அவனது மூத்த சகோதரர்கள் இஸ்ரவேலின் இராணுவத்தில் வீரர்கள். ஒரு நாள், தாவீது தன் சகோதரர்களுக்கு கொஞ்சம் உணவை எடுத்துச் சென்றான். அவன் இராணுவ முகாமுக்கு வந்தபோது, கோலியாத்தின் சவாலைக் கேட்டான்.

1சாமுவேல் 17: 20–23

படம்
தாவீது வீரர்களுடன் பேசுதல்

இஸ்ரவேலை யாரும் ஏன் பாதுகாக்கவில்லை என்று தாவீது வீரர்களிடம் கேட்டான். அவனது சகோதரர்கள் கோபமடைந்து போய் ஆடுகளை கவனித்துக் கொள்ளச் சொன்னார்கள். கர்த்தர் இஸ்ரவேலைக் காப்பார் என்று தாவீது அறிந்திருந்தான்.

1 சாமுவேல் 17: 24–30

படம்
தாவீது சவுல் ராஜாவுடன் பேசுகிறான்

சவுல் ராஜா தாவீதின் விசுவாசத்தை அறிந்திருந்தான், எனவே அவன் தாவீதைப் பார்க்க வேண்டும் எனச் சொன்னான். கோலியாத்தை எதிர்த்துப் போராட பயப்படவில்லை என்று தாவீது சவுலிடம் கூறினான். ஒருமுறை தனது ஆடுகளை கவனித்துக் கொண்டிருந்தபோது, ஒரு சிங்கத்தையும் கரடியையும் கொன்றதாக தாவீது விளக்கினான். கர்த்தர் அவனைப் பாதுகாத்தார், கர்த்தர் இப்போது அவனைப் பாதுகாப்பார் என்று தாவீது அறிந்திருந்தான்.

1 சாமுவேல் 17: 31–37

படம்
தாவீது கவசம் அணிய முயற்சித்தல்

சவுல் தாவீதுக்கு தன் கவசத்தைக் கொடுத்தான். ஆனால் அது பொருந்தவில்லை, எனவே தாவீது அதைக் கழற்றினான். எந்த கவசமும் இல்லாமல் போராட அவன் முடிவு செய்தான்.

1 சாமுவேல் 17: 38–39

படம்
கற்களை தாவீது வைத்திருத்தல்

தாவீது ஐந்து மென்மையான கற்களை சேகரித்து ஒரு பையில் வைத்தான். அவன் தனது கவண் மற்றும் மேய்ப்பனின் கோலை எடுத்துக்கொண்டு கோலியாத்தை எதிர்கொள்ளச் சென்றான்.

1 சாமுவேல் 17:40

படம்
தாவீது கோலியாத்துடன் பேசுகிறான்

கோலியாத் தாவீதைக் கண்டதும் கூச்சலிட்டு அவனை கேலி செய்தான். ஒரு மேய்ப்பன் பையன் தன்னை வீழ்த்த முடியாது என்று கூறினான். அவனைப் பாதுகாக்க கர்த்தரை நம்புவதாக தாவீது மீண்டும் கூச்சலிட்டான்! கர்த்தருடைய மகத்துவத்தைக் காட்ட கோலியாத்தை வெல்வேன் என்று தாவீது கூறினான்.

1 சாமுவேல் 17: 42–47

படம்
தாவீது கோலியாத்தை எதிர்த்துப் போராடுகிறான்

தாவீது கோலியாத்தை நோக்கி ஓடினான். அவன் விரைவாக தனது கவண் கொண்டு ஒரு கல் எறிந்தான். கல் கோலியாத்தை நெற்றியில் தாக்கியது, ராட்சச மனிதன் தரையில் விழுந்தான். கோலியாத்தை வாளோ கவசமோ இல்லாமல் தோற்கடிக்க கர்த்தர் தாவீதுக்கு உதவினார்.

1 சாமுவேல் 17: 48–50

படம்
தாவீது மற்றும் கோலியாத்தின் உடல்

கோலியாத் மரித்துவிட்டதைக் கண்ட பெலிஸ்தர்கள், பயந்து ஓடிவிட்டார்கள். இஸ்ரவேலர் போரில் வெற்றி பெற்றனர். தாவீது கர்த்தரை நம்பினான், கர்த்தர் இஸ்ரவேலைப் பாதுகாத்தார்.

1சாமுவேல் 17: 51–53

அச்சிடவும்