வேதக் கதைகள்
எகிப்தில் யோசேப்பு


“எகிப்தில் யோசேப்பு,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“எகிப்தில் யோசேப்பு,” பழைய ஏற்பாட்டு கதைகள்

ஆதியாகமம் 39–41

எகிப்தில் யோசேப்பு

ஒரு அடிமை தலைவனாகுதல்

படம்
யோசேப்பு போத்திபாருக்கு விற்கப்படுதல்

போத்திபார் என்ற மனிதனுக்கு யோசேப்பு அடிமையாக விற்கப்பட்டான். எகிப்தின் ஆட்சியாளரான பார்வோனிடம் போத்திபார் பணியாற்றினான். கர்த்தர் யோசேப்புக்கு உதவினார் என்று போத்திபார் சொல்ல முடியும். அவன் யோசேப்பை நம்பினான் மற்றும் அவனது வீடு மற்றும் அவனுக்குச் சொந்தமான அனைத்துக்கும் பொறுப்பாக வைத்தான்.

ஆதியாகமம் 39:1–6

படம்
போத்திபாரின் மனைவிக்கு யோசேப்பு இணங்க மறுத்தல்

போத்திபாரின் மனைவி யோசேப்பை விரும்பினாள். யோசேப்பு தன்னுடன் கர்த்தரின் கட்டளைகளை மீற வேண்டும் என்று அவள் விரும்பினாள். யோசேப்பு அவளிடம் முடியாது என்றான்.

ஆதியாகமம் 39:7–10

படம்
யோசேப்பு போத்திபாரின் மனைவியிடமிருந்து ஓடுதல்

போத்திபாரின் மனைவி கேட்கவில்லை, அதனால் யோசேப்பு ஓடிவிட்டான். அவள் யோசேப்பு மீது கோபமடைந்தாள்.

ஆதியாகமம் 39:11–12

படம்
போத்திபாரின் மனைவி போத்திபாரிடம் பேசுதல்

அவள் யோசேப்பின் ஆடைகளில் ஒரு பகுதியை போத்திபாரிடம் காட்டினாள். அவள் யோசேப்பைப்பற்றி போத்திபாரிடம் பொய் சொன்னாள். போத்திபார் யோசேப்பை சிறையில் அடைத்தான்.

ஆதியாகமம் 39:13–20

படம்
யோசேப்பு சிறையில்

யோசேப்பு தனது குடும்பத்திலிருந்து பிரிக்கப்பட்டிருந்தான். அவன் ஒரு அடிமையாகிவிட்டான், இப்போது அவன் ஒரு கைதியாக இருந்தான். ஆனால் கர்த்தர் இன்னும் யோசேப்புக்கு உதவினார். யோசேப்பு மனந்தளரவில்லை. யோசேப்பிடம் இருந்த நல்லதைக் காண சிறைக் காவலனை கர்த்தர் ஆசீர்வதித்தார். காவலன் அவனை நம்பத் தொடங்கினான், எனவே அவன் மற்ற கைதிகளுக்கு யோசேப்பை பொறுப்பாளியாக வைத்தான்.

ஆதியாகமம் 39:21

படம்
கைதிகளின் சொப்பனங்களை யோசேப்பு விளக்குதல்

பார்வோனிடம் வேலை செய்த ஒரு சமையல்காரன் மற்றும் ஒரு பரிமாறுபவன் ஆகிய இரண்டு கைதிகளை யோசேப்பு சந்தித்தான். அவர்கள் இருவரும் விசித்திரமான சொப்பனங்களைக் கண்டனர். கர்த்தரின் வல்லமையின் மூலம், அவர்களின் சொப்பனங்களின் அர்த்தம் என்ன என்பதை யோசேப்பு விளக்கினான். பரிமாறுபவரின் சொப்பனத்தின் அர்த்தம் பரிமாறுபவன் விடுவிக்கப்படுவான் என்பதாகும். மூன்று நாட்களுக்குப் பிறகு, அவன் மீண்டும் பார்வோனுக்கு வேலை செய்ய விடுவிக்கப்பட்டான்.

ஆதியாகமம் 39:22–23; 40:1–21

படம்
பார்வோன் விரக்தியடைதல்

ஒரு நாள் பார்வோன் தன் சொப்பனங்களினிமித்தம் விரக்தியடைந்தான். அவனுடைய சொப்பனங்களுக்கு என்ன அர்த்தம் என்று யாராலும் சொல்ல முடியவில்லை.

ஆதியாகமம் 41:1–8

படம்
பரிமாறுபவன் பார்வோனுடன் பேசுதல்

பின்னர், யோசேப்பு சொப்பனங்களை விளக்க முடியும் என்பதை பரிமாறுபவன் நினைவு கூர்ந்தான்.

ஆதியாகமம் 41:9–13

படம்
யோசேப்பு பார்வோனின் சொப்பனங்களை விளக்குதல்

பார்வோனின் சொப்பனங்களை விளக்க யோசேப்பு சிறையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டான். எகிப்துக்கு ஏழு வருடங்கள் நிறைய உணவும், தொடர்ந்து ஏழு ஆண்டுகள் பஞ்சத்துடன் மிகக் குறைந்த உணவே கிடைக்கும் என்பது சொப்பனங்களுக்கு அர்த்தம் என யோசேப்பு சொன்னான். நல்ல ஆண்டுகளில் எகிப்து கூடுதல் உணவை சேமிக்க வேண்டும் என்று யோசேப்பு பார்வோனிடம் கூறினான்.

ஆதியாகமம் 41:14–36

படம்
பார்வோனுக்கு உணவு சேமிப்பை யோசேப்பு காட்டுதல்

யோசேப்பு தனது சொப்பனங்களைப்பற்றி கூறியது உண்மை என்று பார்வோன் அறிந்திருந்தான். அவன் யோசேப்பை சிறையிலிருந்து விடுவித்து, யோசேப்பை எகிப்தில் ஒரு பெரிய தலைவனாக ஆக்கினான். ஏழு ஆண்டுகளாக, எகிப்துக்கு கூடுதல் உணவைச் சேமிக்க யோசேப்பு உதவினான்.

ஆதியாகமம் 41:37–53

படம்
எகிப்தில் பயணம் செய்யும் மக்கள்

பிறகு பஞ்சம் வந்தது. இந்த நேரத்தில், யாரும் எந்த உணவையும் உற்பத்தி செய்ய முடியவில்லை. யோசேப்பு சேமித்து வைத்திருந்த உணவை வாங்க மக்கள் எகிப்துக்கு பயணம் செய்தனர். யோசேப்பின் காரணமாக, எகிப்தியர்கள் அவர்களுக்குதவ தங்களுக்குப் போதுமான உணவைச் சேமித்தனர் மற்றும் மற்றவர்கள் பஞ்சத்தில் இருந்து தப்பித்தனர்.

ஆதியாகமம் 41:54–57

அச்சிடவும்