Scripture Stories
தீர்க்கதரிசி ஏனோக்கு


“தீர்க்கதரிசி ஏனோக்கு,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“தீர்க்கதரிசி ஏனோக்கு,” பழைய ஏற்பாட்டு கதைகள்

ஆதியாகமம் 5; மோசே 6–7

தீர்க்கதரிசி ஏனோக்கு

கர்த்தர் மீதான விசுவாசம் ஒரு நகரத்தை எவ்வாறு காப்பாற்றியது

படம்
தேவன் ஏனோக்குடன் பேசுகிறார்

கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஏனோக்கை மனந்திரும்பும்படி மக்களிடம் சொல்லும்படி கேட்டார். ஆனால் ஏனோக்கு தன்னால் நன்றாக பேச முடியாது என்று நினைத்தார். மக்கள் தனக்கு செவிசாய்க்க மாட்டார்கள் என்று அவன் அஞ்சினான்.

} ஆதியாகமம் 5:22; மோசே 6: 26–31

படம்
மக்கள் ஏனோக்கை கேலி செய்கிறார்கள்

ஏனோக்கு கற்பித்ததை சிலர் விரும்பாவிட்டாலும், ஏனோக்கைப் பலப்படுத்தி பாதுகாப்பதாக கர்த்தர் உறுதியளித்தார்.

மோசே 6:32–39.

படம்
ஏனோக்கு மக்களுக்கு கற்பித்தல்

கர்த்தருடைய வாக்குறுதி ஏனோக்கிற்கு போதிய தைரியம் கொடுத்தது. ஏனோக்கு கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து மக்களுக்கு வல்லமையோடு கற்பித்தான். இயேசு கிறிஸ்து, மனந்திரும்புதல், ஞானஸ்நானம் மற்றும் பரிசுத்த ஆவியானவரைப்பற்றி அவன் கற்பித்தான். சிலர் ஏனோக்கை நம்பி கர்த்தரைப் பின்பற்ற விரும்பினர்.

மோசே 6:47–68

படம்
ஏனோக்கு பெண்ணுக்கு ஞானஸ்நானம் கொடுத்தல்

ஞானஸ்நானம் கொடுக்க ஏனோக்கு தேவனிடமிருந்து அதிகாரம் பெற்றான். ஏனோக்கை நம்பிய மக்கள் அனைவரும் ஞானஸ்நானம் பெற்று கர்த்தரிடம் நெருங்கி வந்தார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் கவனித்துக் கொண்டதால் யாரும் ஏழைகளாக இருக்கவில்லை. அவர்கள் அன்பிலும் நீதியிலும் ஒன்றாக வாழ்ந்ததால் அவர்கள் சீயோன் என்று அழைக்கப்பட்டனர்.

மோசே 7:10–20.

படம்
இயேசுவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல்

ஒரு நாள் கர்த்தர் ஏனோக்கிற்கு பூமியில் நடக்கும் எல்லாவற்றையும்பற்றிய ஒரு தரிசனத்தைக் காட்டினார். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஆகியவற்றை ஏனோக்கு கண்டான். கடைசி நாட்களில் சுவிசேஷம் மீட்டெடுக்கப்படும் என்று ஏனோக்கு கற்றுக்கொண்டான். இயேசுவின் இரண்டாவது வருகையையும் அவன் கண்டான்.

மோசே 7:21–67

படம்
தேவன் சீயோன் மக்களுடன் பேசுகிறார்

இறுதியில், சீயோன் நகரத்திலுள்ள மக்கள் அனைவரும் ஏனோக்கை நம்பி மனந்திரும்பினார்கள். அவர்கள் ஒருவருக்கொருவர் கவனித்து, சமாதானமாக வாழ்ந்ததால், கர்த்தர் தம்முடன் வாழ அவர்களை அழைத்துச் சென்றார்.

ஆதியாகமம் 5:24 ; மோசே 7:18, 21, 68–69

அச்சிடவும்