Scripture Stories
குழந்தை மோசே


“குழந்தை மோசே,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“குழந்தை மோசே,” பழைய ஏற்பாட்டு கதைகள்

யாத்திராகமம் 1–2 பார்க்கவும்

குழந்தை மோசே

இஸ்ரவேலரின் எதிர்காலத் தலைவரைப் பாதுகாத்தல்

படம்
பார்வோன் ராஜ்யத்தைப் பார்க்கிறான்

யாக்கோபின் குடும்பம் எகிப்தில் ஒரு பெரிய மக்களாக மாறியது. அவர்கள் இஸ்ரவேலர் என்று அழைக்கப்பட்டனர். எகிப்தின் ராஜாவான பார்வோன், ஒரு நாள் ஏராளமான இஸ்ரவேலர் இருப்பார்கள் என்றும் அவர்கள் எகிப்தைக் கைப்பற்றுவார்கள் என்றும் பயந்தான், ஆகவே அவர் இஸ்ரவேலரைத் தன் அடிமைகளாக்கினான்.

யாத்திராகமம் 1: 7–14

படம்
போர்வீரர்கள் ஆற்றை பார்க்கிறார்கள்

புதிதாகப் பிறந்த இஸ்ரவேல் ஆண் குழந்தைகள் அனைவரையும் கொல்ல வேண்டும் என்று பார்வோன் கட்டளையிட்டான். இஸ்ரவேல் குடும்பங்கள் மிகவும் பயந்தனர்.

யாத்திராகமம் 1: 15–22

படம்
யோகெபேத், மிரியம் மற்றும் குழந்தை மோசே ஆற்றில்

யோகெபேத் என்ற இஸ்ரவேலிய தாய் தனது பிறந்த மகனைக் காப்பாற்ற ஒரு வழியைப்பற்றி யோசித்தாள். அவள் குழந்தையை ஒரு கூடையில் வைத்து, கூடையை நைல் நதி அருகில் உயரமான புல்லில் மறைத்து வைத்தாள். குழந்தையின் சகோதரி மிரியம் அவனைப் பாதுகாப்பாக வைத்திருக்க அவனைக் கவனித்தாள்.

யாத்திராகமம் 2: 1–4

படம்
பார்வோனின் மகள் குழந்தை மோசேயை வைத்திருத்தல்

ஆற்றில் குளிக்கும்போது, பார்வோனின் மகள் கூடையை கண்டுபிடித்தாள். உதவியற்ற இஸ்ரவேல் குழந்தை அழுவதை அவள் கண்டாள், அவனை தன் சொந்த குழந்தையாக வளர்க்க விரும்பினாள். மிரியம் பார்வோனின் மகளிடம் வந்து குழந்தையை பராமரிக்க ஒரு இஸ்ரவேல் பெண்ணை அழைத்து வரட்டுமா என்று கேட்டாள்.

யாத்திராகமம் 2: 5–6

படம்
பார்வோனின் மகள், யோகெபேத், மிரியம் மற்றும் குழந்தை மோசே

மிரியம் தனது தாயார் யோகெபேத்தை பார்வோனின் மகளிடம் அழைத்து வந்தாள். பார்வோனின் மகள் குழந்தையைப் பராமரிப்பதற்காக யோகெபேத்துக்கு பணம் கொடுக்க ஒப்புக்கொண்டாள்.

யாத்திராகமம் 2: 8–9

படம்
பார்வோனின் மகள், யோகெபேத் மற்றும் மோசே

இஸ்ரவேல் குழந்தை வளர்ந்தது. பார்வோனின் மகள் அவனை தனது சொந்த மகனாக வளர்த்தாள். அவள் அவனுக்கு மோசே என்று பெயரிட்டாள்.

யாத்திராகமம் 2:10

அச்சிடவும்