Scripture Stories
கர்த்தர் எலியாவிடம் பேசுதல்


“கர்த்தர் எலியாவிடம் பேசுதல்,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“கர்த்தர் எலியாவிடம் பேசுதல்,” பழைய ஏற்பாட்டு கதைகள்

1 இராஜாக்கள் 19

கர்த்தர் எலியாவிடம் பேசுதல்

கர்த்தரின் குரலைக் கேட்டல்

படம்
யேசபேலுடன் ஆகாப் பேசுதல், பின்னணியில் நெருப்பு

பாகாலின் பூசாரிகளை கர்த்தர் தோற்கடித்ததாக ஆகாப் ராஜா யேசபேல் ராணியிடம் கூறினான். யேசபெல் கோபமடைந்து, எலியா தீர்க்கதரிசியைக் கொன்றுவிடுவதாகக் கூறினாள்.

1 இராஜாக்கள் 19:1–2

படம்
எலியா குகையைக் கண்டுபிடித்தல்

பாதுகாப்பாக இருக்க, இஸ்ரவேல் தேசத்தை விட்டு எலியா வெளியேறினான். அவன் பயணம் பண்ணியபோது 40 பகல் மற்றும் 40 இரவுகள் உபவாசம் இருந்தான். பின்னர் அவன் சீனாய் மலைக்கு வந்து, மறைந்திருக்க ஒரு குகையைக் கண்டான். கர்த்தர் எலியாவிடம் பேசும்படியாக மலையின் உச்சிக்கு செல்லும்படி எலியாவிடம் அவர் கூறினார்.

1 இராஜாக்கள் 19:3, 8–11

படம்
எலியா காற்று, நிலநடுக்கம் மற்றும் நெருப்பைப் பார்த்தல்

பலத்த காற்று வந்து குகையைச் சுற்றி இருந்த பாறைகளை துண்டுகளாக உடைத்தது. அதன் பிறகு, நிலநடுக்கம் நிலத்தை உலுக்கியது. பிறகு ஒரு நெருப்பு தொடங்கியது. காற்று, நிலநடுக்கம் மற்றும் நெருப்பின் உரத்த ஒலிகளை எலியா கேட்டான். ஆனால் கர்த்தரின் குரல் அந்த உரத்த சத்தத்தில் இல்லை.

1 இராஜாக்கள் 19:11–12

படம்
கர்த்தர் எலியாவிடம் பேசுதல்

பின்னர் எலியா ஒரு அமர்ந்த, மெல்லிய சத்தத்தைக் கேட்டான். அது கர்த்தர் என்று அவனுக்குத் தெரியும். அங்கே எலியா என்ன செய்கிறான் என்று கர்த்தர் கேட்டார்.

1 இராஜாக்கள் 19:12–13

படம்
எலியா கர்த்தரிடம் பேசுதல்

எலியா பாதுகாப்பாக இருக்க அவன் மறைந்திருப்பதாக கூறினான். அனைத்து தீர்க்கதரிசிகளும் கொல்லப்பட்டனர், மக்கள் கர்த்தரை நிராகரித்தனர்.

1 இராஜாக்கள் 19:14

படம்
எலியா எலிசாவைக் கண்டுபிடித்தல்

கர்த்தர் எலியாவை ஆறுதல்படுத்தி, இன்னும் பல இஸ்ரவேலர்கள் கர்த்தரை ஆராதிப்பதாக அவனிடம் கூறினார். வீடு திரும்பவும் மற்றொரு தீர்க்கதரிசியை தயார் செய்யவும் கர்த்தர் எலியாவிடம் சொன்னார். இந்த புதிய தீர்க்கதரிசியின் பெயர் எலிசா.

1 இராஜாக்கள் 19:15–18

அச்சிடவும்