வேதக் கதைகள்
தானியேலும் ராஜாவின் கனவும்


“தானியேலும் ராஜாவின் கனவும்,” பழைய ஏற்பாட்டு கதைகள் (2022)

“தானியேலும் ராஜாவின் கனவும்,” பழைய ஏற்பாட்டு கதைகள்

தானியேல் 2

தானியேலும் ராஜாவின் கனவும்

ஒரு ராஜாவுக்கு தேவனின் மர்மமான செய்தி

படம்
ராஜா கனவுகாணுதல்

பாபிலோன் ராஜாவுக்கு ஒரு கனவு வந்தது, அது அவனை வருத்தப்படுத்தியது. கனவின் அர்த்தம் என்ன என்பதை அவனுடைய ஆசாரியர்களும் ஞானிகளும் அவனிடம் சொல்ல வேண்டும் என்று அவன் கோரினான்.

Daniel 2:1–3

படம்
ராஜா சிந்தித்தல்

ராஜா அவர்களுக்கு கனவை சொல்ல மாட்டான். ஆசாரியர்களுக்கும் ஞானிகளுக்கும் உண்மையிலேயே வல்லமை இருந்தால், கனவு என்ன, அதன் அர்த்தம் என்ன என்பதை அவனிடம் சொல்ல முடியும் என்று அவன் கூறினான்.

Daniel 2:4–9

படம்
ராஜா ஞானிகளை விரட்டுகிறான்

ஆசாரியர்களும் ஞானிகளும் ராஜாவிடம் அவருடைய கனவு என்னவென்று சொல்லாவிட்டால் அவர்களால் அதை விளக்க முடியாது என்று கூறினான். எந்த மனிதனும் அதைச் செய்ய முடியாது என்று அவர்கள் சொன்னார்கள். ராஜா கோபமடைந்து, தானியேல் மற்றும் அவனது நண்பர்கள் உட்பட ராஜ்யத்தில் உள்ள அனைத்து ஞானிகளையும் கொலை செய்வதாகக் கூறினான்.

தானியேல் 2:10–13

படம்
தானியேல் போர்வீரனுடன் பேசுகிறான்

ராஜாவின் காவலர் தானியேலையும் அவனது நண்பர்களையும் அழைத்துச் செல்ல வந்தபோது, தானியேல் அதிக நேரம் கேட்டான், இதனால் ராஜாவுக்கு அவனுடைய கனவு என்னவென்று சொல்ல முடியும். தேவன் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார், கனவையும் கூட என்பதை தானியேல் அறிந்திருந்தான். தன்னுடன் ஜெபிக்க தானியேல் தனது நண்பர்களைக் கேட்டான்.

தானியேல் 2:14–18

படம்
தானியேல் ஜெபித்தல்

தானியேலுக்கு ராஜாவின் கனவை தேவன் ஒரு தரிசனத்தில் காட்டினார், அதன் அர்த்தத்தை தானியேலுக்கு கற்பித்தார். தன் மற்றும் தனது நண்பர்களின் பிரார்த்தனைகளுக்கு பதிலளித்ததற்கும் அவர்களின் உயிரைக் காப்பாற்றியதற்கும் தானியேல் தேவனுக்கு நன்றி தெரிவித்தான். பின்னர் அவன் கனவின் அர்த்தத்தை ராஜாவிடம் சொல்லச் சென்றான்.

தானியேல் 2:19–25

படம்
தானியேல் ராஜாவுடன் பேசுகிறான்

ஒரு மலையிலிருந்து வெட்டப்பட்ட கல்லால் அழிக்கப்பட்ட ஒரு மாபெரும் சிலையைப்பற்றியது ராஜாவின் கனவு என்று தானியேல் கூறினான். இந்த சிலை பூமியின் ராஜ்யங்களை குறிக்கிறது. மலையிலிருந்து வெட்டப்பட்ட கல் பூமியை நிரப்பும் தேவனுடைய ராஜ்யத்தைக் குறிக்கிறது. தானியேல் உண்மையை பேசினான் என்பதை ராஜா அறிந்திருந்தான்.

தானியேல் 2: 26–49

அச்சிடவும்